உறுதி 5

“ஒரு ஆரோக்கியமான உடல்நிலையைக் கொண்ட மனிதன் பொதுமுடக்கத்தின் போது சிறியளவில் காய்ச்சலோ இருமலோ தாக்கினால் மருத்துவரைச் சந்திக்கிற போது அம்மருத்துவர் அவனுக்கு கோவிட் பரிசோதனையுடன் தனிமைப்படுத்துதலை பரிந்துரைப்பார். இத்தகைய தனிமைப்படுத்துதலின் போது சுற்றியுள்ளவர்கள் அவனை ஒதுக்கும் விதம், தன்னிடமிருந்து நோய் தனது குடும்பத்தினருக்குப் பரவி விடுமோ என்ற அச்சம் அவனுக்குள் ஒருவித மன அழுத்தத்தை உண்டாக்கும். இத்தகைய மன அழுத்தம் அவனை தற்கொலை முடிவுக்குத் தள்ளிவிடும். அத்துடன் பொதுமுடக்கத்தால் வருமானத்திற்கு வழியின்றி வறுமையில் தள்ளப்பட்டது, பொருளாதாரத்தில் ஏற்பட்ட … Continue reading “உறுதி 5”

 

Share your Reaction

Loading spinner

உறுதி 4

“கிராமப்புறங்களில் வாழும் நாளொன்றுக்கு நூறு ரூபாய் முதல் முன்னூறு ரூபாய் வரை சம்பாதிக்கும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் பொதுமுடக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டனர். அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படி, இந்திய கிராமப்புற குடும்பங்களில் மாதாந்திரம் செலவு போக மிச்சமிருக்கும் உபரித்தொகையான ஆயிரத்து நானூற்று பதிமூன்று ரூபாய் அவர்களின் கடனை அடைப்பதற்கே சரியாக இருக்கிறது. ஒன்றிய அரசு அறிவித்த 22.50 பில்லியன் டாலர் மதிப்பிலான நிவாரண தொகுப்பின்படி 800 மில்லியன் மக்களுக்கு இலவச உணவும், 200 மில்லியன் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய் ஐநூறும், … Continue reading “உறுதி 4”

 

Share your Reaction

Loading spinner

உறுதி 3

“2021ல் இந்தியாவைக் கோரமாகத் தாக்கிய கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியா சுகாதார துறையில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. 2020 போல பொதுமுடக்கம் இல்லையென்றாலும் குறுகிய காலத்தில் கொத்து கொத்தாக மக்கள் மடிந்தது அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு தகர்த்து விட்டது. ஆக்சிஜன் மற்றும் மருந்து பற்றாக்குறையால் மருத்துவமனை வாயில்களில் நின்ற மக்கள் கூட்டம், இடைவிடாத ஆம்புலன்ஸ்களின் சத்தம் என இரண்டாம் அலையின் கொடூர முகத்தை இந்தியா பார்த்துவிட்டு ஓய்ந்திருக்கிறது” -கிருஷ்ணா யாதவ் மற்றும் ஷிவானி யாதவ்வின் ஆராய்ச்சி … Continue reading “உறுதி 3”

 

Share your Reaction

Loading spinner

உறுதி 2

“அரசாங்கம் கொடுத்த புள்ளிவிவரத்தின்படி 1996லிருந்து இது வரை சந்தித்திடாத பொருளாதார சரிவை நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியா சந்தித்துள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. 2020ல் மட்டுமே நாடு தழுவிய பொது முடக்கத்தால் ஏறத்தாழ 10 மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளனர். ஆனால் ஒன்றிய அரசிடமோ சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோ புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என்னவாயிற்று என்பது குறித்த புள்ளிவிவரத்தை தயாரிக்கவே இல்லை. இரண்டாம் அலையின் போது … Continue reading “உறுதி 2”

 

Share your Reaction

Loading spinner

உறுதி 1

“கொரோனா பெருந்தொற்றால் உலகெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தப் பொதுமுடக்கம் நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் சமூகத்தில் பின் தங்கிய மக்களின் வாழ்வாதாரம் என அனைத்தையும் நிர்மூலமாக்கி விட்டது. ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் Stringency Indexன் படி உலகிலேயே பொதுமுடக்கத்தால் மிக மிக மோசமான விளைவைச் சந்தித்த நாடு இந்தியா தான்” -நேஷ்னல் யூனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூரின் ஆராய்ச்சி மாணவி ரமிதா ஐயர் ஜனவரி 5, 2022 அன்று மதியம், பாளையங்கோட்டை பழைய போலீஸ் குடியிருப்பு … Continue reading “உறுதி 1”

 

Share your Reaction

Loading spinner