அலை 6

தோளைத் தீண்டும் உன் ஸ்பரிசத்தோடு மனதைத் தீண்டும் உன் நினைவும் சேர முகமூடிக்குப் பின் மறைந்திருப்பவளே யாரடி நீ தேவதையே! ப்ளூ பேர்ல் ரெஸ்டாரண்ட்… மதுசூதனன் தனுஜாவைச் சாப்பிடச் சொல்லிவிட்டுத் தான் மட்டும் மலர் அலங்காரம் செய்யும் பெண்களைப் பார்த்துப் பேசிவிட்டு வருவதாகச் சொல்ல, அவளோ அவனுக்காகக் காத்திருப்பதாகச் சொல்லிவிட்டாள். அவளைத் தாங்கள் வழக்கமாகச் சாப்பிடும் மவுண்டன் வியூ பாயிண்ட் உள்ள இடத்திற்குப் போகச் சொல்லிவிட்டுத் தனது போனில் எதையோ நோண்டிக் கொண்டே வந்தான். அதே நேரம் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 5

திடுமென இடி முழங்கி மின்னல் வெட்டிப் பெய்த கோடை மழையே! புயலாய் வீசியென்னை வேரோடு சாய்த்தவளே! யாரடி நீ தேவதையே! மதுரவாணியோடு சேர்ந்து ஊட்டிக்கு ஷாப்பிங் வந்திருந்தனர் யாழினியும் சங்கவியும். கூடவே குட்டீஸ்களும், ஸ்ரீரஞ்சனி, ராகவியும் அடக்கம். முதலில் மதுரவாணி பிடிவாதம் பிடித்தபடி அழகுநிலையத்துக்குள் நுழைந்தனர் அனைவரும். சங்கவி மட்டும் அவளுடன் நின்றிருந்தாள். அழகுநிலையப் பெண் மதுரவாணியின் நீளக் கூந்தலைத் தோள் அளவுக்கு வெட்ட ஆரம்பித்த போது சங்கவிக்கு ரத்தக் கண்ணீர் வராத குறை தான். இந்த […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 24

“ஆம்பளைங்களுக்கு ‘The Sandwich Syndrome’னு ஒன்னு பிறவிலயே உண்டு. அது கல்யாணத்துக்கு அப்புறம் இன்னும் தீவிரமாகிடும். நல்லா கவனிச்சிங்கனா, ‘எங்கம்மாக்கும் பொண்டாட்டிக்கும் இடையில நான் சிக்கித் தவிக்குறேன்’னு நிறைய ஆம்பளைங்க சொல்லுறதைக் கேட்டிருப்பிங்க. அது பொய் இல்ல. ஜோக்கும் இல்ல. இது அவங்களோட இயல்பான மனநிலை. மகன், கணவன்ங்கிற ரெண்டு நிலைப்பாட்டுக்கும் நடுவுல என்ன முடிவு எடுக்குறதுனு தெரியாம அவங்க தவிப்பாங்க. அதனால ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோங்க லேடீஸ், அவங்க குடும்பத்துக்குள்ள ஒரு தகராறு வருதுனா கண்டும் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 4

சொந்தமானவர்களைக் கைநழுவ விட்டே பழகியதாலோ என்னவோ சொந்தமானது கைநழுவி விடுமோ என்ற பதைபதைப்பு; அது அஃறிணையாக இருந்தாலும் கூட! மதுரவாணி எப்போதும் அவள் தங்கும் மாடியறைக்குள் சரணடைந்தவள் அந்த ஊரின் குளிரையும் தாண்டி பயணத்தால் உண்டான கசகசப்பைப் போக்க குளிக்கச் சென்றாள். வெதுவெதுப்பான நீரில் நீராடி உடை மாற்றியவள் நீண்ட கூந்தலை நீவி விடுகையில் குடும்பத்தினரின் நினைவு மெதுவாய் அவள் மனதில் எட்டிப் பார்த்தது. இந்நேரம் அவளது வீடு அல்லோலப்பட்டிருக்கும். அம்மாவையும் அழகியையும் நினைத்தால்தான் கண்ணைக் கரித்துக் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 1

காற்றுக்கு வாசம் இல்லையாம்! யார் சொன்னது? நான் சுவாசிக்கும் சுதந்திரக்காற்றுக்குத் தனிவாசம் உள்ளதே! நதியூர்… தரணி போற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கும் திருவைகுண்டத்தை அடுத்த சிறுகிராமம். இன்னும் நகரத்தின் நாகரிகச்சாயம் பூசப்படாத ஊர். அழகிய தாமிரபரணி நதி ஊரைச் செழிப்பாக்கிக் கொண்டு பாய, வயல்வெளிகள், அழகிய ஓட்டுவீடுகள், ஆங்காங்கே ஆடுமாடுகளின் சத்தம் என கிராமத்தனம் அழகாய் மின்னும் அச்சிறுகிராமம், இன்றைய இரவு சீரியல் விளக்குகளின் வெளிச்சத்தில் ஜொலித்தது. கூம்புவடிவ ஒலிபெருக்கிகளில் சீர்காழி கோவிந்தராஜன் தனது கணீர் குரலில் […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 21.1

“The world faded away when their eyes met – இது மாதிரி வார்த்தையாடல்கள் eye contact-ஐ ரொமாண்டிசைஸ் பண்ணுற மாதிரி இங்கிலீஸ் நாவல்கள்ல உண்டு. என்னடா வெறும் பார்வைக்கு இவ்ளோ பில்டப்பானு நான் யோசிச்ச கணங்கள் நிறைய உண்டு. வார்த்தையா படிக்கிற தருணங்கள் வாழ்க்கையா மாறுறப்ப, அது ஒரு மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கும்னு ஈஸ்வரியோட கண்களைப் பாக்குறப்பதான் நான் புரிஞ்சிக்கிட்டேன். கண்ணை அழகாக் காட்டுறேன்னு சில நேரம் காஜல் போட்டுட்டு வருவா. அப்ப […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 20

“பொண்ணுங்களுக்குள்ள ஒரு Defensive mechanism இருக்கும். அந்தத் தற்காப்பு வளையம் அவளுக்குள்ள இருந்தா மட்டும்தான் சமுதாயத்துல அவளை மொய்க்குற ஆபத்தான பார்வைகள்ல இருந்து அவ தன்னைத்தானே பாதுகாத்துக்க முடியும். அந்தத் தற்காப்பு வளையத்தை ஒரே ஒரு ஆணோட நெருக்கத்துல அவளே உடைக்குறது எப்ப தெரியுமா? இவன் என்னைத் தப்பா நினைக்கமாட்டான், இவன் எப்பவும் என்னோட உணர்வுகளை நிராகரிக்க மாட்டான்ங்கிற உறுதியும், அந்த ஆணோட அண்மையில அவளுக்குள்ள வர்ற பாதுகாப்பு உணர்வும் அவளுக்குள்ள ஆக்கிரமிக்குறப்பதான்.” –ஈஸ்வரி “நீங்க நல்லா […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 19

“சைக்காலஜில ‘The Jar Concept’-னு ஒன்னு உண்டு. கிட்டத்தட்ட இது ஒரு மெட்டாஃபர் (Metaphor-உவமை) அது. நீங்க ரொம்ப அழுத்தமான ஆளா இருந்தீங்கனா நீங்க சந்திக்குற மனுஷங்க, அவங்க குடுக்குற உணர்வுகள், உங்களோட கோபம், அழுகை, ஆத்திரம், இயலாமைனு எல்லாத்தையும் உங்களுக்குள்ள மறைச்சு வச்சுப்பீங்க. இதை ‘Emotional Suppression’-னு சொல்லுவாங்க. மனசை ஒரு கண்ணாடி ஜார் மாதிரி நினைச்சு அதுக்குள்ள இத்தனை உணர்ச்சிகளையும் பூட்டி வச்சிடுவீங்க. ஒரு கட்டத்துல அந்த ஜாடி நிரம்பிடும். அப்ப உங்களால மேற்கொண்டு […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 18

“நேசிக்கிறவங்களோட அர்த்தமில்லாத பேச்சுல செலவளிக்குற நேரமும் அவங்களுக்காகக் காத்திருக்குற நேரமும்தான் நம்ம வாழ்க்கைய அழகாக்கும்னு நான் சொல்லுவேன். இதெல்லாம் நான் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சு முடியெல்லாம் நரைச்ச வயசுல ‘நாம அந்தக் காலத்துல எவ்ளோ பேசிருக்கோம்ல’னு அவனோட தோள்ல சாய்ஞ்சு பேச வேண்டிய கதை. கிட்டத்தட்ட நினைவுகளின் சேமிப்புனு வச்சுக்கோங்களேன்!” -ஈஸ்வரி நகரத்தின் பரபரப்பு பெருமாள்புரம் ஏ காலனி என்ற அந்தப் பகுதியையும் விட்டுவைக்காத காலை வேளை. பூமி பூஜை போடப்பட்ட பிளாட்டில் பத்தியின் மணம் […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 17

“காதல்ங்கிறது, எந்தப் போலித்தனமுமில்லாம, என் பலவீனம் பைத்தியக்காரத்தனம் எல்லாத்தையும் அவகிட்ட கொட்டித் தீர்த்தாலும் அவ என்னை விட்டுப் போகமாட்டானு மனசுல அழுத்தமா பதியுதே அந்த நம்பிக்கைதான்! நான் ஆம்பளைங்கிற ஈகோவைத் தூக்கிப் போட்டுட்டு ஒரு மனுசனா என்னால அவகிட்ட என் கண்ணீர், என்னோட சோகத்தைக் கொட்ட முடியுது. ஆக்சுவலி இந்தக் காதல் எனக்கு ஒரு வரம்னு நினைக்குறேன்” -பவிதரன் “ஏன் இப்பிடி ஒரு காரியத்தைப் பண்ணுனிங்கப்பா? அவன் நம்ம குடும்பத்துக்கு அரணா நின்னவன். அவனைப் போய் வீட்டை […]

 

Share your Reaction

Loading spinner