அத்தியாயம் 11

தாமஸின் ‘சோசியோபாத் வேர்ல்ட்’ என்ற வலைப்பூ உளப்பிறழ்வுக் குறைபாட்டாளரோடு வாழும் வாழ்க்கை எப்படி இருக்குமென்பதை பற்றிய பதிவுகளை உள்ளடக்கியுள்ளது. அதில் தாமஸ் ‘சைக்கோபாத்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘சோசியோபாத்’ என்ற வார்த்தையை உபயோகித்திருக்கிறார். அதை மக்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்பதால் பயன்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார் அவர். தாமஸ் எழுதிய ‘A Life spent hiding in Plain Sight’ என்ற புத்தகம் 2012ல் வெளியாகி பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து திரைப்படம் … Continue reading “அத்தியாயம் 11”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 12

2012ல் ஜூரிச் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் உளப்பிறழ்வுக்குறைபாடு அதாவது சைக்கோபதியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களைத் தங்களது சிரிப்பால் தந்திரமாகக் கையாளுவதாகத் தெரிய வந்துள்ளது. பிறரோடு நடைபெறும் உரையாடலைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அவர்கள் சிரிப்பைப் பயன்படுத்துவதாக அந்த ஆய்வில் புலனாகியிருக்கிறது. தாமஸ் தனது வலைப்பூவில் அவருக்குத் தினசரி தோன்றும் எண்ணங்களைப் பகிர்கிறார். அவரது வலைப்பூவின் வாசகர்களுக்கு அவரது தினசரி பதிவுகளும் வீடியோக்களும் ஆற்றுப்படுத்தும் இடமாக இருப்பதாகக் கூறுகிறார் அவர். ஏனெனில் அந்தப் பதிவைப் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களது … Continue reading “அத்தியாயம் 12”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 10

உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன்னைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற கவலை இருக்காது என்றும், அடுத்தவர்களின் எண்ணங்கள் அவர்களைப் பாதிக்காது என்றும் அந்நோயால் பாதிக்கப்பட்ட விக்டோரியா என்ற பெண்மணி கூறுகிறார். உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ‘Us’ என்ற ஆன்லைன் கம்யூனிட்டியைப் பற்றி அவர் குறிப்பிட்டார். அந்தக் கம்யூனிட்டியானது பெரும்பாலும் எழுத்தாளர் எம்.இ.தாமசின் வலைப்பதிவுகளை மையமாகக் கொண்டிருக்கும் என்கிறார் அவர். எழுத்தாளர் எம்.இ.தாமஸ் என்பவர் சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே மிகவும் பிரபலம். டெக்சாஸ் ஏ&எம் … Continue reading “அத்தியாயம் 10”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 9

உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஆண்களை விட பெண்கள் ஏன் சமூக விரோத செயல்களிலும், குற்ற செயல்களிலும் குறைவாக ஈடுபடுகின்றனர் என்பதை பற்றி ஆராய்வது சுவாரசியமாக இருக்கக்கூடும் என்கிறார் அன்னா சான்ஸ் கார்சியா. இந்தக் காரணங்களைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் அரைகுறையாக நின்று போயிருந்தாலும் சமீபத்தில் ஃப்ரான்சில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் சாத்தியமான பதிலொன்று கிடைத்திருக்கிறது. சைக்கோபதி என்ற உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நட்புணர்வின்மை, ஜடத்தன்மை ஏற்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட ஆண்களிடம் இந்த உணர்வு குறைவு. … Continue reading “அத்தியாயம் 9”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 8

மாட்ரிட் பல்கலைகழகத்தில் உளவியல் ஆய்வு மாணவியான அன்னா சான்ஸ் கார்சியா தனது சகமாணவர்களோடு இணைந்து பதினோராயிரம் நபர்களை வைத்து உளப்பிறழ்வுக் குறைபாடு பற்றிய பகுப்பாய்வு ஒன்றை 2021ல் மேற்கொண்டார். அந்த ஆய்வின் முடிவில் பெண்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடாதவர்களிடமும் உளப்பிறழ்வுக் குறைபாடான சைக்கோபதி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமான ஒன்று என்பதை வலியுறுத்தியிருந்தார் அன்னா சான்ஸ் கார்சியா. பிபிசிக்கு அவர் கொடுத்த பேட்டியில் உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண்களை விட குறைவாகவே வன்முறை மற்றும் குற்றச்செயல்களில் … Continue reading “அத்தியாயம் 8”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 7

2005ல் உளவியல் ஆராய்ச்சியாளர்களால் எடுக்கப்பட்ட பகுப்பாய்வில் உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சில முக்கியமான பண்புரீதியான வேறுபாடுகள் இருப்பது தெரியவந்தது. இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் திட்டமிடாமல் வேலைகளைச் சொதப்புவது, சுவாரசியமான சிலிர்ப்பூட்டும் உறவுகளை வெளியே தேடுவது, கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிப்பது போன்ற பண்புகளை வெளிப்படுத்துவார்களாம். ஆனால் ஆண்கள் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தீவிரமான உடல்ரீதியான வன்முறையை நிகழ்த்துவது மூலமாக தங்களது உளப்பிறழ்வுக் குறைபாட்டை வெளிக்காட்டுவதாக அந்தப் பகுப்பாய்வின் முடிவுகள் கூறுகின்றன. அந்தக் காலகட்டத்தில் ஆண்கள் … Continue reading “அத்தியாயம் 7”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 5

இரக்கமற்ற நபர்களுடன் இருப்பது அவர்களுக்கு நெருங்கியவர்களைப் பாதிக்கிறது. தீவிரமான உளப்பிறழ்வுக் குறைபாடு கொண்டவர்களுடன் வாழ்பவர்கள் சோர்வடைந்துவிடுகின்றனர் என்கிறார் மார்ஷ்.உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுக் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீதே பெரும்பான்மையான உளப்பிறழ்வுக்குறைபாடு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக மார்ஷ் கூறுகிறார்.பொதுவாக, உளப்பிறழ்வுக் குறைபாடு பெண் கைதிகளுடன் ஒப்பிடும் போது ஆண் கைதிகளிடம் அதிக அளவில் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. -An article from BBC இனியாவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நான்காவது நாள் அவளது மரணம் ஊடகங்களில் பேசுபொருளாக மாறியது. அவள் சமூக … Continue reading “அத்தியாயம் 5”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 3

“உலகின் முன்னணி கல்வியாளர்கள் உளப்பிறழ்வுக்கான வரையறையை விவாதித்துள்ளனர். நீங்கள் ஒரு தடயவியல் உளவியலாளரிடம் பேசுகிறீர்களா அல்லது ஒரு குற்றவியல் நிபுணரிடம் பேசுகிறீர்களா என்பதைப் பொறுத்து மனநோய் குறித்த பல்வேறு விளக்கங்களைப் பெறுவீர்கள்” என்கிறார் வாஷிங்டன்னில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக உளவியலாளரும் நரம்பியல் விஞ்ஞானியுமான அபிகயில் மார்ஷ். வன்முறை மற்றும் தீவிரமான நடத்தையை வெளிப்படுத்தும்போது மட்டுமே ஒருவரை மனநலக் குறைபாடுடையவராக குற்றவியல் உளவியலாளர்கள் கருதுவதாகஅபிகயில் மார்ஷ் கூறுகிறார். எனினும், தன்னைப் பொறுத்தவரை, இந்த நிலை நபருக்கு நபர் மாறும் … Continue reading “அத்தியாயம் 3”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 2

‘சைக்கோபதி’ எனும் இந்தச் சொல் 1900களின் தொடக்கத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டது. 1941ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க மனநல மருத்துவர் ஹெர்வி எம்.கிளெக்லியின் (The Mask of Sanity) என்ற புத்தகத்திற்குப் பிறகு இந்தச் சொல் மிகவும் பிரபலமானது. -An article from BBC சாந்திவனம்… பொன்மலையின் மொத்த அழகையும் ஒரே இடத்தில் குவித்தால் எப்படி இருக்குமோ அதைக் கற்பனை செய்து கலிங்கராஜன் கட்டிய வீடு. வீட்டின் பெயருக்கேற்ப குட்டி வனம்போல மரங்கள் … Continue reading “அத்தியாயம் 2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 1

மனநலக் குறைபாடு என்ற வார்த்தை மருத்துவ உலகில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும் மனநலக் கோளாறுகளைக் கண்டறிதல் மற்றும் புள்ளியியல் கையேட்டின் சமீபத்திய பதிப்பில் சொல்லப்பட்ட வரைவிலக்கணப்படி மனநலக் குறைபாடு என்பது சமூக விரோத ஆளுமைக் கோளாறு (Antisocial Personality Disorder) என்று பொருள்படுமாம். இதுவொரு நரம்பியல் சம்பந்தப்பட்ட மனநலக்கோளாறாகும். இதனால் பாதிக்கப்பட்ட நபர் வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த அளவு குற்ற உணர்ச்சியுடன் காணப்படுவார்கள். இது, பெரும்பாலும் சமூக விரோதச் செயல்களுக்கும் மற்றும் குற்றவியல் நடத்தைக்கும் வழிவகுக்கும். -An article … Continue reading “அத்தியாயம் 1”

 

Share your Reaction

Loading spinner