அட்சரம் 1.2

“ஹாய்டா அச்சு! சீக்கிரமே வந்துட்ட?” “ஏர்போர்ட்ல இருந்து நேரா இங்க வர்றேன்.” “காலைல ஏர்போர்ட்ல என்னடா வேலை உனக்கு?” என்றபடி அலுவலக அறைக்குள் இருந்து குரல் கொடுத்தாள் இலக்கியா. “அருள் வந்திருக்கான்.” அவன் பதில் சொன்னதும் இருவரும் அவனிடம் வந்துவிட்டார்கள். “என்னடா சொல்லுற? எப்ப வந்தான்? உன்கிட்ட மட்டும் சொன்னானா? அப்ப நாங்கல்லாம் உங்க ரெண்டு பேருக்கும் யாரோதானே?” இருவரும் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுக்கவும், அமைதியாயப் பார்த்துவிட்டு சோஃபாவில் சரிந்தான் அட்சரன். “அவன் ஏதோ பிளான் வச்சிருக்குறதா […]

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 1.1

மைவிழிப் பார்வையில் மையல்கள் பூக்க கைவளை ஓசையிடக் கதைகள் கோர்க்க சின்னஞ்சிறு புன்னகை சிந்தும் கதிரே! வண்ணத் தமிழால் வரிப்பேன் உன்னையே! –அட்சரனின் வேதா சென்னையின் இதயப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் காலை நான்கே முக்கால் மணிக்கே அந்த டியூப்ளக்ஸ் வீடு சுறுசுறுப்பாகியிருந்தது. வீட்டின் தலைவியான ராஜேஸ்வரி சமையலறையில் காபி போட்டுக்கொண்டிருக்க, அதன் நறுமணத்தில் கண் விழித்துவிட்டார் அவரது கணவரான சதானந்தன். சென்னையில் மட்டும் நான்கு இடங்களில் இயங்கி வரும் ‘ராஜி சூப்பர் மார்க்கெட்’டின் உரிமையாளரான அவர், ஏழு மணிக்கு […]

 

Share your Reaction

Loading spinner

அலை 24.2

மதுரவாணியோ இதைக் கவனியாதவளாய் தனுஜாவின் இறைஞ்சும் விழிகளின் நினைவிலேயே இருக்க, மதுசூதனன் ஒரு கையால் ஸ்டீயரிங் வீலைப் பிடித்தபடி மற்றொரு கரத்தால் அவள் கன்னத்தைத் தட்டவும் திடுக்கிட்டுத் திரும்பினாள். அவளது முகவடிவை வட்டமிட்டுக்காட்டி, “ஏன் இவ்வளோ சோகமா வர்ற? கொஞ்சம் சிரியேன்! எனக்குத் தெரிஞ்சு சிரிக்கிறதுக்கு டாக்ஸ் எதுவும் கட்ட வேண்டாம்” என்று கேலியாயச் சொல்ல, “அது… இன்னைக்குத் தனுஜாவோட ரூம்ல….” என்று பேச ஆரம்பித்தவளின் இதழில் ஆட்காட்டி விரலை வைத்து ‘அமைதி’ என்று சைகை செய்தவன், […]

 

Share your Reaction

Loading spinner

அலை 23

உனைக் கண்டதும் துள்ளும் மனந்தனை கரையிட்டு மறைத்தவளால் மலரும் வதனத்தைத் திரையிட்டு மறைக்க இயலவில்லை என் மாயவனே! மதுரவாணி அன்றைக்குச் சீக்கிரமே விழித்துவிட்டாள். இரவு முழுவதும் நிம்மதியாக உறங்கியவள், அதிகாலையிலேயே விழித்து வீட்டின் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள். பெரிதாக ஒரு வேலையும் இல்லையென்றாலும், குழந்தைகளுக்குத் தனியாக, பெரியவர்களுக்குத் தனியாக எனச் சமைப்பதே ஒரு பெரும் வேலைதானே! அதைச் செய்துவிட்டு நிமிர்ந்தவளிடம், சுவர்கடிகாரம் நேரம் காலை ஆறு மணி என அறிவித்தது. இன்னும் யாரும் எழுந்திருக்கவில்லை. எனவே காபியோ, […]

 

Share your Reaction

Loading spinner

அலை 22

கண்ணாடியில் தெரியும் என் பிம்பமும் நாணுதே! என்னருகில் நிற்கும் உன் பிம்பம் செய்யும் மாயக் குறும்பில்! லவ்டேல்… மதுரவாணி கோப்புகளைச் சங்கவியிடம் ஒப்படைத்தவள், “அக்கா லீகல் டேர்ம்ஸ் மட்டும் ஒருதடவை செக் பண்ணுவியாம்… மத்தபடி படிச்சிட்டு சைன் பண்ணிட்டேனா நாளைக்கு மார்னிங் அவனே வந்து வாங்கிப்பானாம்,” என்று மனப்பாடம் செய்ததைப் போல ஒப்பித்துவிட்டு அகன்றாள். சங்கவி யாழினியிடம் அவற்றை நீட்டியவள், “யாழி இன்னைக்கு ரெண்டு பேரோட முகமும் சரியில்ல! நீ கவனிச்சியா?” என்று கேட்க, “ஆமா கவி! […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 30 (இறுதி)

“ஒரு பொண்ணுக்கு அவளோட ஹஸ்பண்ட் குடுக்குற பெரிய கௌரவம் அவளை அவன் எவ்ளோ மதிக்கிறான்ங்கிறதை அவளுக்குப் புரியவைக்குறது மட்டும்தான். ஆயிரம் பிரச்சினை வந்தாலும் உன் கூட இருக்குறப்ப அது எனக்கு ஒரு பொருட்டா கூட தெரியாதுனு அவங்க சொல்லுற ஒரு வார்த்தை போதும் எனக்கு. ரெண்டு குட்டி ரோஜாக்களோட ஆரம்பிச்ச எங்க தோட்டம் இன்னைக்கு நிறைய பூச்செடிகளோட ஒரு குட்டி நந்தவனமா மாறுன மாதிரி, நானும் அவரும் மட்டுமா இருந்த எங்க வாழ்க்கைல இன்னொரு குட்டி உயிர் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 21

கலவரமாய் எனை நோக்கும் உன் விழிகள் காதலாய் எனை ஈர்க்கும் நன்னாளுக்காய் காத்திருக்கிறேன் என் கண்மணியே! மதுரவாணி குழப்பமும் கோபமுமாய்த் திகைத்தவள் மதுசூதனனை உறுத்து விழிக்க, அவனோ சிறுகுழந்தை தன்னிடம் கொடுக்கப்பட்ட பொம்மையைக் காணும் ஆவலுடன் அவளை நோக்கிக் கொண்டிருந்தான். அவனது பார்வையை விலக்கியவள், “நீ வரச் சொன்னது உன்னோட அப்கம்மிங் மேரேஜ் ஆஃபர் பத்திப் பேசத்தானே! நம்ம பேச ஆரம்பிப்போமா?” என்று வருவித்துக் கொண்ட இயல்பான குரலில் கேட்டவளை நமட்டுச்சிரிப்போடு எதிர்கொண்டவன், “யெஸ்! அஃப்கோர்ஸ்… பேசலாமே,” […]

 

Share your Reaction

Loading spinner

அலை 20

கோபத்தில் சிவக்கும் வதனம் நாணத்தில் சிவந்த மாயம் என்ன! வாதமும் விவாதமுமாய் நகர்ந்த வாழ்க்கை வர்ணஜாலமான மாயம் என்ன! புரியாமல் விழித்தவள் உன்னால் உணர்கிறேன் என் வாழ்வின் முதல் அழகிய குழப்பந்தனை! “நீ பார்த்த விழிகள்! நீ பார்த்த நொடிகள்! கேட்டாலும் வருமா! கேட்காத வரமா!” நன்றாக உறங்கிக்கொண்டிருந்த மதுரவாணியின் காதுக்குள் பாடல் சத்தம் கேட்டதும், கனவில் கேட்டது போல இருக்கவே கண்ணை மூடி உறக்கத்தில் ஆழத் துவங்கினாள் மதுரவாணி. ஆனால் பாடல் ஒலித்த இடமோ அவளது […]

 

Share your Reaction

Loading spinner

அலை 19

அதிகாலை குளிர்க்காற்றில் பரவும் வேப்பம்பூவின் மணமாய் உன் காதல்! வயலுக்குள் சாய்ந்தாடி வரவேற்கும் பச்சைநிற நாற்றுகளாய் உன் காதல்! மூடியிருக்கும் கதவை இரவில் சுரண்டும் பூனையாய் உன் காதல்! உள்ளங்கையில் மணம் பரப்பும் மருதாணிச் சிவப்பாய் உன் காதல்! லவ்டேல்…. யாழினி முகத்தைத் தூக்கி வைத்தபடி அமர்ந்திருந்த சாய்சரணையும் ஆரத்யாவையும் அதட்டி உருட்டிச் சாப்பாடு ஊட்டிவிட்டவள், சங்கவியிடம் மனதை அலட்டிக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டு மகனுடன் ஆரத்யாவையும் அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்குக் கிளம்பினாள். செல்லும் முன்னர் தங்கைகளிடம் […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 28.2

அவள் கிளம்ப எத்தனிக்கையில் ஒரு பாலிதீன் கவரில் பனம்பழங்களைப் போட்டுக் கொடுத்தார் சௌந்தரவல்லி. “இதை அதிகமா சாப்பிடக்கூடாதுல. பிள்ளை மந்தமாகிடும்னு சொல்லுவாவ. அளவா சாப்பிடு” என்று அன்போடு சொல்லி அவளை வழியனுப்பிவைத்தார். ஈஸ்வரி வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது பவிதரன் அவளுக்காகக் காத்திருந்தான். சந்தோஷமிகுதியில் வேகநடை வைத்து வந்து அவனருகே திண்ணையில் அமர்ந்தவளை அவன் பார்த்த பார்வையில் அத்துணை காட்டம்! “சொல்லாம கொள்ளாம எங்க போன நீ? எழுந்திரிச்சதும் உன்னைக் காணலனு நான் பதறிட்டேன்டி” ஈஸ்வரி அசடு வழிந்தபடி […]

 

Share your Reaction

Loading spinner