கார்ப்பரேட் சாமியார்களின் தகிடுதத்தங்கள் பற்றிய செய்திகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன. எந்த செய்தியிடமிருந்தும் இவர்களை நம்பும் மக்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் நம்பிக்கையும் தளர்வதில்லை. எந்த சாமியார்களின் பின்புலமும் சில ஆண்டுகளில் இவர்களின் வளர்ச்சியும் நம்பமுடியாத அளவுக்கு பிரமாண்டமானவை. குறுகிய காலத்தில் இவர்கள் மிகப்பெரிய சமூக சக்தியாக வளர்ந்துவிடுகிறார்கள். ஒரு அரசியல் கட்சியோ வர்த்தக நிறுவனமோ கூட அவ்வளவு துரிதமாக வளர்வதில்லை. இவர்களது சட்டவிரோத செயல்கள் பற்றி அவ்வப்போது செய்திகள் வந்தால்கூட அது சட்டம் […]
கோபமாகவோ, காதலாகவோ தினமும் ஒரு முறை கூட உன்னைப் பற்றி யோசிக்காமல் என் நாட்கள் முடிவதில்லை. தவிர்க்க நினைத்தாலோ தவித்துப் போகிறது என் மனம். வெளிப்பார்வைக்கு அகம்பவக்காரன் என்ற முகமூடியை அணிந்துகொண்ட ஒவ்வொரு ஆணும் மனைவியைப் பிரிந்தால் இப்படித்தான் யோசிப்பானோ என்னவோ! ஆனால் பாருங்கள்! ஆணாகிப் போன ஒரே காரணத்தால் அழக் கூட இந்தச் சமூகம் எங்களை விடுவதில்லை. எனது ஆற்றாமை, இயலாமை, வேதனையைக் கொட்ட கண்ணீர் என்ற வடிகாலைக் கூட என்னால் தேட முடியாது! எவ்வளவு […]
சாதாரணமாக படங்கள் எல்லாமே நீள்சதுர வடிவில் தான் இருக்கும். படங்களில் மையப்புள்ளிகள் (Focal Points) என்று ஒன்று உண்டு. பார்ப்பவரின் கண்கள் அந்தப் புள்ளிகள் இருக்குமிடத்திற்கு தான் அதிகமாக இழுத்துச் செல்லப்படும். ஒரு நீள் சதுரத்தில் மேலிருந்து கீழாகவும், இடவலமாகவும் இரண்டு இரண்டு கோடுகள் கிழித்து சமபாகங்களாக வெட்டும்போது அந்த நான்கு கோடுகளும் சந்திக்கும் இடங்களான A,B,C,D இவை தான் மையப்புள்ளிகள். நீங்கள் எடுக்கும் படங்களில் எந்தவொரு பொருளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறீர்களோ அதை இந்த […]
எங்கோ வீசும் தென்றல் என் மேனியைத் தீண்டுகையில் சிலிர்த்தெழும் தேகத்தில் அவன் ஸ்பரிசத்துக்கான ஏக்கம் என்னுள் எழுகிறது. வீட்டின் பின்வாயில் தோட்டத்தில் நான் வைக்கும் சாதத்தை உண்டு முடித்து என்னை உரசிவிட்டுப் போகும் பூனையின் ஸ்பரிசத்தில் கழுத்து வளைவில் வாகாய்ப் பொருந்தி என்னை குறுகுறுக்க வைக்கும் அவனது தாடை முடியின் குறுகுறுப்பு பற்றிய நினைவு கிளர்வதை என்னால் தடுக்கவே முடிவதில்லை. எங்கோ ஒரு ஜோடி கை கோர்த்து, சினேகமாய்ச் சிரித்து நடந்து போவதைப் பார்த்துவிட்டால் உன் புஜத்தில் […]
“வெற்றுக்கால்களும் எளிமையுமாக உலகவாழ்க்கை எனும் லௌகீக வாழ்க்கையை வெறுத்து இமயமலைச்சாரலில் தியானம் செய்யும் சாதுக்களின் காலம் மலையேறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரபலங்களாகவும், புகழ் வெளிச்சத்தில் உலா வருபவர்களாகவும், அரசியலையும் பெரிய தொழில் சாம்ராஜ்ஜியங்களையும் கட்டுப்படுத்துபவர்களாகவும் சாமியார்கள் உருமாறிவிட்டனர். துறவறமும் லௌகீக வாழ்க்கையும் ஒரே இடத்தில் இருக்கமுடியாது. அத்துடன் அன்பை மட்டும் போதிப்பவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் இந்தச் சாமியார்களின் பணப்பசியானது மனிதகுலத்திற்கு அமைதியைத் தராது; சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வை மட்டுமே உருவாக்கும். இங்கே நம்பிக்கைக்குப் பதில் […]
புகைப்படக்கருவியில் மூன்று விசயங்கள் முக்கியமானவை. அவை அபஷர் (aperture), ஷட்டர் ஸ்பீட் (shutter speed) மற்றும் ஐ.எஸ்.ஓ. அபஷர் என்பது நமது புகைப்படக்கருவியின் லென்சிற்குள் வெளிச்சம் பாய்வதற்கான வட்டமான வழியாகும். இந்த வழியில் வெளிச்சம் எவ்வளவு நேரம் பாயவேண்டும் என்பதை தீர்மானிப்பது தான் ஷட்டர் ஸ்பீட். ஐ.எஸ்.ஓ என்பது ஒரு புகைப்படத்தின் பிரகாசத்தைக் குறிக்கும். ஜஸ்டிஷ் டுடே… தனது கேபினில் அமர்ந்து சமீபத்தில் முடித்த வேலையைப் பற்றிய குறிப்புகளை தட்டச்சு செய்து கொண்டிருந்தாள் யசோதரா. இன்னும் சில […]
கோபம் அறிவின் சத்துரு என்பார்கள். பல நேரங்களில் அது உறவுகளுக்கும் சத்துருவாகிவிடுகிறது. கோபத்திற்கான காரணம் வலுவாக இருந்தாலும் அது உருவாக்கும் காயத்தின் வலியோடு ஒப்பிடுகையில் அந்தக் காரணத்தைப் பெரிதாகக் கருதுவதில்லை மனிதர்கள். நியாயம் கூட கோபத்தோடு வெளிப்பட்டு எதிரிலிருப்பவரைக் காயப்படுத்துமாயின் அது அநியாயமாகிவிடுகிறது. -பூபாலன் “இதுக்குப் பேர் தோசையா? எவன் விக்கிச் செத்தா என்ன, என் வேலை சீக்கிரமா முடியணும்னு இப்பிடி தடிமனா சுட்டு வச்சிருக்கியா?” என்று சுள்ளென்று விழுந்தபடி தோசையை விழுங்கிக்கொண்டிருந்தார் குணசேகரன். அவருக்காகச் […]
“இந்தியமக்கள் விசித்திரங்களை நம்பி அதன் பின்னே ஓடுபவர்கள். அதனாலேயே காவியுடைகளை நம்பி அவர்கள் பின்னே செல்கின்றனர். அவர்களைத் தங்களது ரட்சகராக கருதுகின்றனர். இதன் முடிவில் குருட்டு நம்பிக்கை அனைத்தையும் அழித்துவிடுகிறது” -பிரதீப் சிங், சமூகவியலாளர் சவி வில்லா… இரவுணவுக்குப் பின்னர் சர்வருத்ரானந்தாவுடன் பேச அமர்ந்திருந்தனர் மாதவனும் சித்தார்த்தும். ரவீந்திரன் பணிவு காட்டி இன்னும் இருக்கையில் அமராது நின்று கொண்டிருக்கவும் மாதவன் அவரை அமருமாறு பணித்தான். அவர் இன்னும் யோசனையுடன் ருத்ராஜியைப் பார்க்க “உக்காருங்க ரவீந்திரன்… நீங்க தானே […]
எங்கிருந்து வந்தது அந்நேரத்துக் கோபம்? இந்தக் கேள்வியை நான் என்னிடம் கேட்காத நாளே இல்லை. நேசிப்பவர்களின் கோபமும் உதாசீனமும் தற்காலிகமானது என்ற பெரிய உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வராத காலம் அது. கூடவே என்னை இரண்டாம்பட்சமாகப் பார்க்கிறாரோ என்ற கோபமும் உச்சாணிக்கொம்பில் ஏறி நின்று ஆட்டிவைத்துக்கொண்டிருந்த நேரம் அது. என்னை ஒருவர் வேண்டாமெனச் சொல்லும் முன்னர் நான் அந்த வார்த்தையைச் சொல்லிவிடவேண்டும் என்ற வெறி நிரம்பியிருந்த சமயம் அது. இப்போதும் நான் செய்த செயல்கள் தவறென எண்ணி […]
புகைப்படம் எடுப்பதில் ஸ்போர்ட்ஸ் மோட் நகரும் பொருட்களைப் படமெடுக்க உதவும். நகரும் பொருளொன்றின் நகர்வை படமெடுக்க உதவுகிறது இந்த ஸ்போர்ட்ஸ் மோட். இந்த முறையில் படமெடுக்க கேமரா ஷட்டர் மூடும் வேகம் முக்கியமானது. அதாவது அந்த கேமரா எவ்வளவு வேகமாக அந்த நகரும் பொருளை படம்பிடிக்கிறதோ அந்த அளவுக்கு அந்தப் பொருளின் புகைப்படம் தெளிவாக வரும். -Jim Miotke in his book ‘Better Photo Basics’ லோட்டஸ் ரெசிடென்சி… வழக்கமான பரபரப்பின்றி இலகுவாக கல்லூரிக்குக் […]