அத்தியாயம் 43

பெண் சைக்கோபாத்கள் தங்களுக்கென ஒரு போலியான முகமூடியைப் போட்டுக்கொண்டு உலாவுவார்கள். அன்பான பெண், அக்கறையான மனைவி, உதவிக்கு ஆளற்ற அபலைப்பெண், சுதந்திரமனப்பாங்கு கொண்ட பெண், இரக்கமுள்ள அண்டைவீட்டார், அன்பான அன்னை என சமுதாயத்திற்காக அவர்கள் அணியும் முகமுடி சமயத்திற்கு தகுந்தாற்போல மாறிக்கொண்டே இருக்கும். அனைவரும் விரும்பத்தக்க ஒரு பெண்ணாக தன்னை வெளிக்காட்டிக்கொள்வதில் பெண் சைக்கோபாத்கள் மெனக்கிடுவார்கள். ஏனென்றால் அனைவரிடமும் நல்ல பெயர் எடுப்பதில் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். அவர்களுக்குச் சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் அதிகமாக இருக்கும். தீவிர மனப்பிறழ்வு … Continue reading “அத்தியாயம் 43”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 42

மீண்டும் மீண்டும் குற்றம் செய்யும் சைக்கோபாத்களில் ஆண்கள் பெண்களை விட அதிகம் இருக்கின்றனர். காரணம் பெண் சைக்கோபாத்கள் உடல்ரீதியான கொடூரங்களில் ஈடுபடுவதை விட வார்த்தைகளால் வதைப்பதில் கைதேர்ந்திருப்பதே. அதனால் வன்முறையான குற்றங்களில் அவர்கள் ஈடுபடுவது குறைவு. பெண் சைக்கோபாத்களில் ஒட்டுண்ணித்தனமும் பொறாமையும் அதிகம். அடுத்தவர்களின் சந்தோசத்தைக் கண்டு அவர்களால் பொறுக்கவே முடியாது. அடுத்தவர்களுக்குச் சொந்தமானதை தனது உடைமையாக்கிக்கொள்ள பயமுறுத்துதல், மிரட்டல் போன்ற காரியங்களில் இறங்குவார்கள் சைக்கோபாத்கள். பெண் சைக்கோபாத்கள் அனைவரும் ஃபேட்டல் அட்ராக்சன் திரைப்படத்தில் வரும் நடிகை … Continue reading “அத்தியாயம் 42”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 41

“பெண் சைக்கோபாத்கள் கட்டுப்படுத்தும் குணம் கொண்டவர்கள். தந்திரமும், வஞ்சகமும் அவர்களின் இயல்பு. அவர்கள் தங்களது செயல்கள் உண்டாக்கும் விளைவுக்கான பொறுப்பை ஏற்கவே மாட்டார்கள். சுரண்டல் மனப்பான்மை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மேலும் அவர்கள் இளம் வயதிலேயே உணர்வுரீதியாகச் சுரண்டப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் வழிப்பறி, போதைப்பொருட்கள் சார்ந்த குற்றங்களிலும் ஈடுபட வாய்ப்புண்டு. சைக்கோபாத் தன்மை இல்லாத ஒரு குற்றவாளியிடம் இதில் ஏதோ ஒரு குற்றம் மட்டுமே இருக்கும். அதோடு பெண் சைக்கோபாத்களாலும் ஒரு தடவை ஒரு தவறு செய்து அதில் … Continue reading “அத்தியாயம் 41”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 40

சில குறிப்பிட்ட வழக்குகள் பெண் சைக்கோபாத்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் காட்டுகின்றன. அவற்றில் ஒன்று தான் ஆமி என்ற இருபது வயதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கொலைக்குற்றவாளியின் வழக்கு. ஆமியைப் பரிசோதித்த போது அவளுக்கு ‘ஆன்டி சோசியல் பெர்ஷனாலிட்டி டிஸ்சார்டர்’ எனப்படும் சமூக விரோத மனப்பாங்கு நோயோடு மனப்பிறழ்வுக்கான அறிகுறிகளும் இருந்ததாகக் கண்டறிப்பட்டது. அதீத மனப்பிறழ்வுக்கான அனைத்து அறிகுறிகளும் அப்பெண்ணுக்கு இருந்தன என சோதித்தவர்கள் கூறினார்கள். அவள் தனது பதின்வயதிலேயே சமூகவிரோத மனப்பாங்கை வெளிப்படுத்தியிருக்கிறாள். அடிக்கடி வீட்டை விட்டுக் … Continue reading “அத்தியாயம் 40”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 39

பெண் சைக்கோபாத்களுக்குத் தங்கள்மீது எந்த நல்லெண்ணமும் இருக்காது. அதற்காக அவர்கள் வருத்தப்படவும் மாட்டார்கள். நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்தாலும் அதற்கான நன்றிக்கடனை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் விரும்பிய அனைத்தையும் அடைந்தே தீரவேண்டுமென்ற வெறியோடு செயல்படுவார்கள். அவர்களை வாழ்க்கை ஏமாற்றிவிட்டதாகக் கருதுவார்கள் இந்தப் பெண் சைக்கோபாத்கள். இத்தனைக்கும் அவர்கள் ஆசைப்படும் அனைத்துமே எளிதில் கிட்டாதவை, நடக்கக்கூடாதவையாகவே இருக்கும். அவர்களை யாராலும் திருப்திப்படுத்தவே முடியாது. இம்மாதிரி பெண் சைக்கோபாத் ஒருவர் உங்களிடம் ஏதோ ஒரு ரகசியம் அல்லது … Continue reading “அத்தியாயம் 39”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 38

பெண் சைக்கோபாத்கள் யாருக்கும் விசுவாசமாக இருக்கமாட்டார்கள். அனைவரையும் தனது தேவைக்குப் பயன்படுத்திக்கொள்வது தன் உரிமை என்ற மனப்பாங்கு அவர்களுக்கு இருக்கும். உங்களது துன்பங்களில் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். மகிழ்ச்சியில் அவர்கள் சிரிப்பதை நீங்கள் கண்கூடாகக் காணலாம். வேண்டுமென்ற அடுத்தவர்களின் உடமைகளைத் திருடுவதும் பெண் சைக்கோபாத்களில் சிலர் செய்வார்கள். தப்பித் தவறிப் பிடிபட்டுவிட்டால், தனக்குச் சாதகமாகச் சூழ்நிலையைத் திரித்து கட்டுக்கதை ஒன்றை கூறி தங்களது தகாத செயலைக் கூட நியாயப்படுத்துவார்கள். கடைசியில் உங்கள் மீதே பழியைத் திருப்புவார்கள். செய்த இழிகாரியத்துக்கு … Continue reading “அத்தியாயம் 38”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 35

சைக்கோபாத்கள் என்றாலே கொலைகாரர்கள், குற்றவாளிகளாகத் தான் இருக்கவேண்டுமென எந்தக் கட்டாயமுமில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சைக்கோபாத்கள் வன்முறையோடு இன்னும் பல குற்றவியல் செயல்களிலும் ஈடுபடுவதாக அவர்கள் கூறுகிறார்கள். அதீத மனக்கிளர்ச்சி, பழியைத் திசை திருப்பும் போக்கு, இதற சமூகவிரோதபோக்குகள் இவையனைத்தும் சேர்ந்து ஒரு சைக்கோபாத்தை மற்ற குற்றங்கள் செய்பவர்களை விட அபாயகரமானவனாகக் காட்டுகின்றன. இருப்பினும் மனப்பிறழ்வுக்குறைபாட்டுக்கும், வன்முறை மனப்பான்மைக்கும் இடையே சில விசயங்கள் ஒத்துப்போகலாம். எல்லா சைக்கோபாத்களும் கொலைகாரர்கள் குற்றவாளிகளாக மாறுவதில்லை. அவர்களின் மூர்க்கத்தனத்தைத் தணிக்கவும் கட்டுப்படுத்திக்கொள்ளவும் தெரிந்தவர்கள் … Continue reading “அத்தியாயம் 35”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 34

சைக்கோபாத்களின் தனிமை, மறைக்கப்பட்ட துன்பங்கள், தன்னம்பிக்கையற்ற போக்கு போன்றவை வன்முறை மற்றும் குற்றவியல் நடத்தைக்கான தீவிரமான அறிகுறிகள் என்பதால் அவற்றை அடையாளம் காண்பது மிகமிக முக்கியம். ஒவ்வொரு சைக்கோபாத்தின் வாக்குமூலங்களைக் கேட்டறியும் போது தான் அவர்கள் எந்தளவுக்குப் பலகீனமாகவும் காயப்பட்டும் இருக்கிறார்கள் என்பது புரியும். இந்தச் சைக்கோபாத் குணங்களைத் தவிர்க்கவும், சிகிச்சை அளிக்கவும் இன்னும் நிறைய சைக்கோஃபார்மோதெரபி சிகிச்சை சோதனைகள், நியூரோ ஃபீட்பேக் மற்றும் ஒருங்கிணைந்த சைக்கோதெரபி ஆராய்ச்சிகள் கட்டாயம் தேவை. சைக்கோபாத்கள் பற்றி சமுதாயத்தில் இப்போதிருக்கும் … Continue reading “அத்தியாயம் 34”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 33

சைக்கோதெரபி மட்டும் மனப்பிறழ்வுக்குறைபாடான சைக்கோபதியைக் குணப்படுத்த போதாது. சைக்கோஃபார்மோதெரபியானது நரம்புயிரியல் செயல்பாடுகளை இயல்புக்குக் கொண்டு வர உதவியாக இருக்கும். லித்தியம் சமூகவிரோதப்போக்கு, முரட்டுத்தனம் மற்றும் தாக்கும் குணம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு பங்காற்றுகிறது. ஹோலண்டர் என்பவர், மனநிலையை நிதானமாக்கும் மருந்துகளான டைவல்ப்ரோயெக்ஸ், SSRI, MAOI மற்றும் நியூரோலெப்டிக்ஸ் போண்றவை முரட்டுத்தனம் மற்றும் விரோத மனப்பாங்குடன் கூடிய மனப்பிறழ்வு நோயாளிகளைக் கட்டுக்குள் வைப்பதில் சிறப்பாக வேலை செய்வதாக ஆவணப்படுத்தியுள்ளார். சைக்கோபதியை எந்தளவுக்கு சைக்கோஃபார்மாதெரபி குணமாக்கும் என்பது பற்றி இன்னும் … Continue reading “அத்தியாயம் 33”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 32

தேவையற்ற தூண்டுதல்கள் குறைந்த அளவிலான MAO மற்றும் கார்டிசோல், அதிகளவிலான கொனாடல் ஹார்மோன்களால் ஏற்படுகின்றன. எனவே பெரும்பான்மையான சைக்கோபாத்கள் இத்தகைய நரம்புயிரியல் குறைபாடுகளால் இயல்புக்கு மீறிய நடத்தைகளை வெளிப்படுத்துகின்றனர். இதுவே அவர்களுக்கும் இவ்வுலகிற்குமிடையே பிளவை உண்டாக்குகிறது. தேவையற்ற தூண்டுதல்கள், விரோதம், முரட்டுத்தனம் மற்றும் உணர்வுரீதியான வேதனைகளை வேண்டுமானால் சைக்கோதெரபியின் உதவியால் ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரலாம். மற்றபடி சைக்கோபதியைக் கண்டறியவும் கட்டுக்குள் கொண்டுவரவும் சைகோஃபார்மாதெரபி மற்றும் நியூரோ ஃபீட்பேக் எனப்படும் நரம்பு சம்பந்தப்பட்ட கருத்தறிக்கை அவசியம். நீண்டகால சைக்கோதெரபி … Continue reading “அத்தியாயம் 32”

 

Share your Reaction

Loading spinner