துளி 4

தேர்தலுக்கான பரபரப்பு அபிமன்யூவுக்கு இருந்ததோ இல்லையோ அவனது தந்தை தன்னுடைய மகனின் வெற்றிக்காக ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்திருந்தார். அவரது கோரிக்கையை கட்சித்தலைமையிடம் ஏற்கெனவே வைத்திருந்தவர் உட்கட்சி கோஷ்டி சண்டைகளையும் சமாளித்தவராய் மகனுக்காக வெற்றிப்பாதையை போட்டுவிட்டு அதில் அவன் நடைபோடப் போகும் நாளை எதிர்நோக்கியிருந்தார். அந்நிலையில் தான் அபிமன்யூ அவருடன் கட்சி அலுவலகத்துக்கு சென்றவன் அவன் காதில் விழுந்த தகவல் ஒன்றைக் கேட்டு அமைதியற்று திரிந்தான். அந்த கட்சியில் அவனது தந்தைக்குச் சமமான செல்வாக்கு படைத்தவர் கல்வித்துறை அமைச்சரான […]

யுத்தம் 4

“தனது ஆசைகள், சுயவிருப்பு வெறுப்புகளைக் கட்டுப்படுத்தி வெல்லக் கூடிய ஒருவரே நன்முறையில் பாரபட்சமற்ற ஆட்சியைத் தரத் தகுதியானவர்”                                                                    -சாணக்கியர் சுந்தரமூர்த்தி ஆதித்யனின் மரணமும் அருள்மொழியின் அரசியல் பிரவேசமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்து அரசியலில் பரபரப்பு அலைகளை உண்டாக்கியது. சுந்தரமூர்த்தியின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியால் அவரது தீவிரத் தொண்டர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்ட அவலமும் நடந்தேறியது. அதிலும் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் இம்மாதிரி துக்கச் சம்பவங்கள் அதிகமாக நடந்துவிட ஆளுங்கட்சியின் குற்றசாட்டு மழையில் நனையத் துவங்கியது […]

அத்தியாயம் 21

என் தவிப்பையும் பயத்தையும் தணிக்கும் ஒரே மருந்து அவனுடைய அணைப்பு மட்டுமே! எனது கண்ணீரும் கவலையும் காணாமல் போவது அவனது அண்மையில் மட்டுமே! என்னோடு சேர்த்து என் காதலையும் சுருட்டி மனதில் பூட்டிக்கொண்டவனே இனி என் சகலமும் என்று என் இதயச்சுவடியில் உயிரெனும் மை தொட்டு எழுதி வைத்திருக்கிறேன். காலத்துக்கும் அவனது பெயரைச் சொல்லிக்கொண்டே துடிக்கும் என் இதயத்துக்குத் தெரியும், அவனை நான் மறக்கும் நாளில் அது தனது துடிப்பை நிறுத்திக்கொள்ளும் என்பது!                                                                       -வான்மதி “பணக்காரி […]

துளி 3

ஸ்ராவணி அன்று அலுவலகத்துக்கு வேகவேகமாகத் தயாராகிக் கொண்டிருந்தாள். கழுத்துப் பக்கம் மடங்கியிருந்த டாப்பை இழுத்து நேராக்கியவள் கண்ணாடியில் கழுத்து வெறுமையாக இருப்பதைக் கண்டு திகைத்தாள்.  படுக்கையைப் புரட்டிப் பார்த்துப் போர்வையை உதறினாள். ஆனால் செயினைதான் காணவில்லை. இவள் செய்த அதகளத்தை பார்த்தபடி உள்ளே வந்த மேனகா “என்னாச்சு வனி? ஏன்டி இப்பிடி கலைச்சு போடுற?” என்று கேட்க ஸ்ராவணி பதற்றத்துடன் “என் செயினைக் காணும் மேகி. அதான் தூங்கறப்போ கழண்டு விழுந்துடுச்சானு பார்க்கிறேன்” என்றாள் தலையணைகளை உதறிப் […]

யுத்தம் 3

நம் பழைய செருப்பைத் தைப்பதற்கு அந்தத் தொழிலை நன்றாய்ப் பழகிய தொளிலாளியிடமே கொடுக்கிறோம். ஆனால், ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை மட்டும் பசப்பாகப் பேசி ஓட்டைப் பறிக்கும் வாய்சொல் வீரர்களிடம் ஒப்படைத்து விடுகிறோம்.                                                                                                         -பிளேட்டோ தமிழ்நாடு முன்னேற்ற கழகம் கட்சியின் தலைமை அலுவலகம்… சுந்தரமூர்த்தியும் ஆதித்யனும் ஹெலிகாப்டரோடு மாயமாகி இருபது மணி நேரம் கடந்திருந்தது. கட்சி அலுவலகத்திலும் வாயிலிலும் கூடிய தொண்டர்கள் கூட்டம் கலையவில்லை. யாழினிக்குத் துணையாக அகத்தியன் கட்சி அலுவலகத்திலேயே இருந்துவிட அருள்மொழி வீட்டில் அன்னைக்கு […]

அத்தியாயம் 20

கையில் இதமானச் சூட்டுடன் ஒரு கோப்பை காபி, என் தோள் மீது சாய்ந்திருக்கும் நீ, நாம் இருவரும் கண்டு ரசிக்க மேகம் மிதக்கும் நீலவானம்! இதைத் தாண்டி என் மனம் இப்போதெல்லாம் வேறு எந்த பெரிய விசயங்களுக்கும் ஆசைப்படுவதில்லை. என் நாட்களை இனிமையாக்கவும் இதமாக்கவும் நீ மட்டுமே போதும் என்று எண்ணுமளவுக்கு என்னை மயக்கி வைத்திருக்கிறாய் நீ! போலித்தனம் இல்லாத இயல்பான உன் அன்பில் மூழ்கிக் கரைய ஒவ்வொரு நாளும் ஆவல் கொள்கிறது என் இதயம்.       […]

துளி 2

காலையில் சோம்பல் முறித்த வண்ணம் எழுந்தான் அபிமன்யூ. இரவு பார்ட்டி முடித்து அதிகாலையில் தான் வீடு திரும்பியிருந்தான். இருந்தாலும் அவனது தினசரி ஷெட்யூலில் உடற்பயிற்சிக்கு ஒதுக்கியிருந்த நேரத்தில் அவனுக்கு விழிப்பு தட்ட மெதுவாக எழுந்தவனுக்கு தலை வலிக்கவே எப்போதும் போல ஹேங் ஓவருக்கு போடக்கூடிய மாத்திரையை போட்டுக் கொண்டான் அவன். வீட்டினுள்ளேயே மேல்தளத்திலிருக்கும் அவனது பிரைவேட் ஜிம்மிற்கு சென்றவன் வியர்வை வழியும் வரை உடற்பயிற்சி செய்ய தொடங்கினான். டிரெட் மில்லில் ஓடத் துவங்கியவனின் நினைவலைகளில் தோன்றினாள் அந்த […]

அத்தியாயம் 19

இதயத்தில் நேசப்பூ மலரும் தருணம் அவ்வளவு அழகானது! அதை விவரிக்க வார்த்தைகள் கிடையாது! அதை ஆராய மூளைக்கு வலு கிடையாது! ஒரு பார்வை, ஒரு அக்கறையான அன்புச்செய்கை, கொஞ்சம் கடிதலுடன் கூடிய ஒரு எச்சரிக்கும் பேச்சு இதில் கூட காதல் மலரும். இதைச் சொன்னால் உங்களில் சிலருக்குச் சிரிப்பு கூட வரலாம். Shall I compare thee to a summer’s day? என்று  முதல் பார்வையில் உதிக்கும் காதலைப் பற்றி சொன்ன ஷேக்ஸ்பியர் கூட ‘As […]

யுத்தம் 2

ஒருவரது இலக்கு அல்லது அவர் விரும்பும் பொருள் அவரிடமிருந்து எவ்வளவு தொலைவிலிருந்தாலும் அவர் அடைய முடியாதளவுக்கு கடினமானதாக இருந்தாலும் உறுதியான மனதுடன் தீர்மானித்துவிட்டால் அந்த இலக்கையோ பொருளையோ அவரால் அடைய முடியும். உறுதியான மனம் கொண்ட மனிதரால் அடைய முடியாததென்று எதுவுமே இவ்வுலகில் இல்லை.                                                                    -சாணக்கியர் ஜாய்ஸ் ரெசிடென்சியல் கம்யூனிட்டி, கந்தசாமி நகர், போரூர்… I was broken from a young ageTaking my sulking to the massesWriting my poems for […]

துளி 1

இரவு நேரத்தில் நியான் விளக்குகளின் ஒளியில் “கோல்டன் கிரவுன் பப்” என்ற வார்த்தை மிளிர அந்தக் கட்டிடத்தின் பார்க்கிங்கில் நிற்கும் விலையுயர்ந்த கார்களே அதனுடைய தரத்தைக் காட்டியது. கிழக்கு கடற்கரை சாலையின் எத்தனையோ பப்களில் அது மட்டும் தனித்து நின்றதற்கானக் காரணம் தமிழகத்தின் திரைத்துறை பிரபலங்கள், அரசியல்கட்சியினரின் வாரிசுகள், பெரும் பணமுதலைகள் மட்டுமே அங்கே வந்துச் செல்ல முடியும் என்பது மட்டுமே! அதன் வாயிலில் வந்து நின்ற ஊபர் டாக்சியிலிருந்து இறங்கினாள் அவள். கறுப்புநிற ஸ்லீவ்லெஸ் ஷார்ட் […]