யுத்தம் 17

“அரசியலில் ஆர்வமில்லை என்பவர்களுக்கும் அரசியலில் பங்கேற்க விரும்பாதவர்களுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய தண்டனையே தங்களை விட தகுதியில் குறைந்தவர்களால் ஆளப்படுவதே!                                                                     -ப்ளேட்டோ தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகம்… மூவரணியாய் அருள்மொழி கொடுத்த பணியை நிறைவேற்ற தயாராக இருப்பதாக சந்திரகுமாருடன் தெய்வநாயகமும் மந்திரமூர்த்தியும் கிட்டத்தட்ட உறுதிமொழியளித்து கொண்டிருந்தனர். அருள்மொழியுடன் அமர்ந்திருந்த யாழினிக்கும் இளைய சகோதரனின் இந்த நகர்வில் சம்மதமே! தங்களை குறைத்து மதிப்பிடும் சித்தப்பாவுக்குத் தகுந்த பாடத்தைக் கற்பிக்க இளைய சகோதரன் என்ன செய்தாலும் ஆதரவளிக்கத் தயாராக […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 16

“அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள். அவர்கள் நதியே இல்லாத இடத்தில் பாலம் கட்டுவதாக உறுதியளிப்பார்கள்” -முன்னாள் சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் செகரட்டரி நிகிடா க்ரூச்சேவ் மவுண்ட் கல்லூரி மாணவர் சந்திப்பிற்கு பிறகு அருள்மொழி தனது கவனத்தை அரசியலில் செலுத்த வானதியோ அடுத்து நெசவாளர்களை அவன் சந்திப்பதற்கான வேலைகளில் மூழ்கிப் போனாள். நிதர்சனாவில் ஆரம்பித்து மொத்த ஐ.பி.சி சென்னை அலுவலகமும் அவரவர் டெஸ்கும் பீன் பேக்கும் மடிக்கணினியுமே கதியென வேலையில் ஆழ்ந்துவிட்டனர். இதற்கிடையே ஆகாஷ் […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 15

“மனிதர்கள் அழுவதற்கு காரணம் அவர்களின் பலவீனம் அல்ல! அவர்களது மனவுறுதி நீண்டகாலம் அத்தகைய சோகங்களை தாங்கிவிட்டது என்பதால் தான்!”                                                                -ஜானி டெப் மவுண்ட் கல்லூரியின் கலையரங்கு… மாணவர்களுக்கும் அருள்மொழிக்குமான கலந்துரையாடலில் நேரம் போனதே தெரியவில்லை. இன்றைய இளைய தலைமுறையினர் கேள்வி கேட்டே வளர்ந்தவர்கள்! அவர்களை எந்தவொரு விசயத்திற்கும் சம்மதிக்க வைப்பது கடினம்! அதை அன்றைய கலந்துரையாடலில் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டான் அருள்மொழி. அவனை நோக்கி வைக்கப்பட்ட கேள்விகள் அப்படிப்பட்டவை! அவனது கல்லூரிப்பருவம், அரசியல்வாதியின் மகனாக இருந்தும் […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 14

பசியினால் திருடுகிற ஏழைகளைக் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அரசிடமிருந்து கோடிக்கணக்காகத் திருடுபவர்கள் ஒரு நாள் கூட சிறைத் தண்டனை அனுபவித்ததில்லை.                                                                                                                           -பிடல் காஸ்ட்ரோ மவுண்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊட்டி… கல்லூரியின் கலையரங்கமானது மாணவர்களால் நிரம்ப ஆரம்பித்தது. அன்றைய தினம் அருள்மொழி அக்கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாட இருந்தான். அதற்கான பரபரப்பு அங்கே இருக்கும் ஒவ்வொருவரிடமும் நிரம்பி வழிய பேராசிரியர்கள் மாணவர்களை கலையரங்கத்திற்கு செல்லும்படி கட்டளையிட்டுக் கொண்டிருந்தனர். இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 14

ஸ்ராவணி பக்கத்து ஃப்ளாட்டில் இருப்பவர்களை எச்சரித்துவிட்டு வந்ததும் பிரச்சனை முடிந்து விட்டதாக அனைவரும் நினைக்க ஆனால் அவர்களோ தங்களின் அடுத்தத் தாக்குதலை ஆரம்பித்தனர். அன்று இரவு நன்றாக உறங்கி கொண்டிருந்த போது கதவு தட்டப்பட ஸ்ராவணி விழித்துவிட்டாள். கண்ணை கசக்கியபடி “இந்த நேரத்துல யாரு?” என்று சொல்லிக்கொண்டே ஹாலின் விளக்கை போட்டவள் தூக்க கலக்கத்துடன் கதவை திறக்க பக்கத்து ஃப்ளாட்டிலிருந்த வினோத ஜீவன் தான் கதவை தட்டிவிட்டு நின்றுகொண்டிருந்தான். ஸ்ராவணி கடுப்புடன் “பைத்தியமா உனக்கு? எதுக்கு கதவை […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 13

“அரசியலானது எப்போதுமே வெற்றிடத்தை விரும்புவதில்லை. அங்கே உண்டாகும் வெற்றிடமானது நிரம்பியே ஆகவேண்டும். அதை நம்பிக்கையால் நிரப்புவதற்கு எவரும் இல்லையெனில், அவ்விடமானது பயத்தைக் கொண்டு நிரப்பப்படும்”                          -எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் நவோமி க்ளெய்ன் ராமமூர்த்தி அவரது வீட்டில் அவருக்கென அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக அலுவலக அறையில் யோசனையுடன் அமர்ந்திருந்தார். அவர் முன்னே சிதறி கிடந்த செய்தித்தாள்கள் அனைத்திலும் தலைப்புச்செய்தியாகவோ, ஒரு பக்க செய்தியாகவோ அல்லது மாவட்டச்செய்தியாகவோ அருள்மொழி சிரித்துக் கொண்டிருந்தான். தமிழக அரசியலில் இத்தகைய அணுகுமுறைகள் கூட […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 12

“அரசியலைப் பொறுத்த வரை எந்த ஒரு நிகழ்வும் தற்செயலாக நடப்பதில்லை. அப்படி ஒரு நிகழ்வு நடக்குமாயின் அது கட்டாயமாக ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்றாக மட்டுமே இருக்குமென நீங்கள் அறுதியிட்டுக் கூறலாம்”                                            -ஃப்ராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் வானதி அருள்மொழியிடம் அளித்திருந்த கட்சிப்பிரமுகர்கள் பற்றிய அறிக்கையானது அவனுக்குள் பெரும் குழப்பத்தை உண்டாக்கி இருந்தது. அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து வேட்பாளர் தேர்வு நடைபெறுமாயின் கட்டாயம் அது கட்சிக்குள் அதிருப்தி அலையை உண்டாக்கும் என்று யூகித்தவன் அவள் இரண்டாம் கட்ட […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 11

“வாழ்வில் படிக்க வேண்டுமென்றால் குருவிற்கு மாணவனாய் இரு! அரசியல் படிக்க வேண்டுமென்றால் தலைவனுக்குத் தொண்டனாய் எப்போதும் இருந்து விடாதே! ஏனென்றால் தலைவன் உன்னை வைத்து அரசியல் செய்வானே தவிர அதை உனக்குக் கற்றுத் தர மாட்டான்”                                                               -சாணக்கியர் ஆஷிஸ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் அன்றைய தினம் சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தின கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆண்டுதோறும் டிசம்பர் இரண்டாம் தேதி இத்தினம் அங்கே கொண்டாடப்படுமா என்றால் அதற்கு இல்லையென்ற பதில் தான் பள்ளியின் தரப்பிலிருந்து கிடைக்கும். […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 10

“அதிகாரம் மனிதர்களைக் கெடுப்பதில்லை. மாறாக அதிகாரமளிக்கக் கூடிய உயர்பதவிகளில் அமரும் முட்டாள்களே அந்த அதிகாரத்தைக் கெடுத்து துஷ்பிரயோகம் செய்கின்றனர்”                                                      -ஜார்ஜ் பெர்னாட்ஷா அருள்மொழி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த செய்தி அவனது கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியலையை உண்டாக்கியது. அவன் வெளியே வந்த தினத்தை மாவட்டம் தோறும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு கொடுத்து கொண்டாடிய வீடியோவெல்லாம் செய்தி தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகி ஆளுங்கட்சியினரின் வயிற்றெரிச்சலைச் சம்பாதித்தன. ராமமூர்த்தி இனி கட்சித்தலைமை தனக்குத் தான் என்று நம்பிக் கொண்டிருந்த […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 9

“தவறுகளைச் செய்யத் தூண்டுவது அதிகாரமல்ல, பயம் மட்டுமே! அதிகாரத்திலிருப்பவர்களை அந்த அதிகாரத்தை இழந்துவிடுவோமோ என்ற பயம் தான் தவறுகளைச் செய்யத் தூண்டுகிறது. அதிகாரத்தின் மீதான பயமோ அதற்குட்பட்டவர்களைச் சிதைத்துவிடுகிறது”                                                             -ஆங் சான் ஷ்யூகி அருள்மொழியின் பதினான்கு நாட்கள் சிறைவாசம் அவனுக்கு ஏகப்பட்ட படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்தது. சிறைவாசத்தின் இடையே கட்சிப்பிரமுகர்களுக்கு அவனைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது கூட முக்கியச் செய்தியாக சில நாட்களுக்குப் பேசப்பட்டது. அவனது வழக்கறிஞரும் யாழினியும் அகத்தியனுடன் அருள்மொழியைச் சந்திக்க இரு முறை […]

 

Share your Reaction

Loading spinner