அலை 12

இரும்பாய் இறுகியவன் உன்னால் மெழுகாய் உருகுகிறேன்! சுவாசிக்கும் காற்றில் தினசரி உன் வாசம் தேடுகிறேன்! கவனமாய் இருப்பவன் இடறி உன் கன்னக்குழியில் வீழ்கிறேன்! மதுசூதனனுடன் வீட்டுக்குள் நுழைந்த மதுரவாணியைச் சங்கவி திட்டித் தீர்க்க ஆரம்பித்தாள். யாழினி அவனை வரவேற்று அமர வைக்க, மதுசூதனன் திட்டு வாங்கும் மதுரவாணியை நமட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். “மழைல நனைஞ்சா ஒத்துக்காதுனு தெரிஞ்சும் இப்பிடி தொப்பலா நனைஞ்சுருக்கியேடி,” என்று அவளைத் திட்டிக் கொண்டே டவலால் அவளது கூந்தலைத் துவட்ட ஆரம்பித்தாள் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 11

கடற்கரை மணலில் எழுதிய பெயர்களாய் அலை வந்ததும் அழியக் கூடியவை அல்ல கல்வெட்டில் பதிக்கப்பட்ட எழுத்துகளாய் காலம் கடந்தும் நிற்கும் உன் நினைவுகள்  நதியூர்… ரத்தினவேல் பாண்டியனின் வீட்டில் எப்போதும் போல அவரது ஏவலாட்களின் அரவம் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டின் இளவரசி காணாமல் போய் வெகுநாட்களாகி விட்டது. இன்னும் அவளைத் தேடிக் கண்டுபிடிக்க இயலாது அவர்கள் திரும்பி வரும்போதெல்லாம் அழகம்மையின் ஏச்சுப்பேச்சையும் வாங்கிக் கட்டிக் கொண்டனர். சரவணனும் கார்த்திக்கேயனும் அவ்வப்போது அழகம்மைக்குப் பதிலடி கொடுத்தாலும், தன் பேத்தி […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 27

“வார்த்தைகள் குடுக்காத சிலிர்ப்பையும் இதத்தையும் அவளோட கைவிரல் உரசுன அந்த ஒரு நொடி குடுக்குது எனக்கு. எங்களுக்குள்ள மௌனச்சுவர் எழுறப்ப எல்லாம் இந்தச் சின்ன கெஸ்டர் தான் அதைச் சில்லு சில்லா உடைக்கும். ஒரு யுகப்பெருங்கோபத்தைத் தணிக்குறதுக்கு இந்தச் சின்ன தீண்டல் போதுமானது. இமயமலை அளவுக்கு இருக்குற ஈகோவ கூட நொறுக்கித் தள்ளிடும் அந்த ஸ்பரிசம்” –பவிதரன் மேரு பில்டர்ஸ் அலுவலகத்தில் தனது அலுவலக அறையில் பதற்றமாய் ஜூம் மூலம் வீடியோ அழைப்பில் தனது நண்பன் சாஜனுடன் […]

 

Share your Reaction

Loading spinner