மேனகா லேப்டாப்பில் அவளது வேலை விஷயங்களை டைப் செய்து கொண்டிருக்க கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் ஸ்ராவணி தான் வந்துவிட்டாளென்று ஆவலுடன் ஹாலுக்குச் சென்றவள் ஸ்ராவணியின் அழுதுச் சிவந்த முகத்தைக் கண்டதும் ஏதோ தவறென்று மூளையில் பட அவளை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள். “என்னாச்சு வனி? ஏன் அழுற? இஸ் எனிதிங் ராங்?” என்று ஆதரவாகக் கேட்டவளைக் கண்டதும் ஸ்ராவணிக்கு துக்கத்தில் கண்ணைக் கரித்துக் கொண்டு அழுகை வர அவள் தோளில் சாய்ந்து அழுது கொண்டே […]
Share your Reaction