துளி 3

ஸ்ராவணி அன்று அலுவலகத்துக்கு வேகவேகமாகத் தயாராகிக் கொண்டிருந்தாள். கழுத்துப் பக்கம் மடங்கியிருந்த டாப்பை இழுத்து நேராக்கியவள் கண்ணாடியில் கழுத்து வெறுமையாக இருப்பதைக் கண்டு திகைத்தாள்.  படுக்கையைப் புரட்டிப் பார்த்துப் போர்வையை உதறினாள். ஆனால் செயினைதான் காணவில்லை. இவள் செய்த அதகளத்தை பார்த்தபடி உள்ளே வந்த மேனகா “என்னாச்சு வனி? ஏன்டி இப்பிடி கலைச்சு போடுற?” என்று கேட்க ஸ்ராவணி பதற்றத்துடன் “என் செயினைக் காணும் மேகி. அதான் தூங்கறப்போ கழண்டு விழுந்துடுச்சானு பார்க்கிறேன்” என்றாள் தலையணைகளை உதறிப் […]

துளி 2

காலையில் சோம்பல் முறித்த வண்ணம் எழுந்தான் அபிமன்யூ. இரவு பார்ட்டி முடித்து அதிகாலையில் தான் வீடு திரும்பியிருந்தான். இருந்தாலும் அவனது தினசரி ஷெட்யூலில் உடற்பயிற்சிக்கு ஒதுக்கியிருந்த நேரத்தில் அவனுக்கு விழிப்பு தட்ட மெதுவாக எழுந்தவனுக்கு தலை வலிக்கவே எப்போதும் போல ஹேங் ஓவருக்கு போடக்கூடிய மாத்திரையை போட்டுக் கொண்டான் அவன். வீட்டினுள்ளேயே மேல்தளத்திலிருக்கும் அவனது பிரைவேட் ஜிம்மிற்கு சென்றவன் வியர்வை வழியும் வரை உடற்பயிற்சி செய்ய தொடங்கினான். டிரெட் மில்லில் ஓடத் துவங்கியவனின் நினைவலைகளில் தோன்றினாள் அந்த […]

துளி 1

இரவு நேரத்தில் நியான் விளக்குகளின் ஒளியில் “கோல்டன் கிரவுன் பப்” என்ற வார்த்தை மிளிர அந்தக் கட்டிடத்தின் பார்க்கிங்கில் நிற்கும் விலையுயர்ந்த கார்களே அதனுடைய தரத்தைக் காட்டியது. கிழக்கு கடற்கரை சாலையின் எத்தனையோ பப்களில் அது மட்டும் தனித்து நின்றதற்கானக் காரணம் தமிழகத்தின் திரைத்துறை பிரபலங்கள், அரசியல்கட்சியினரின் வாரிசுகள், பெரும் பணமுதலைகள் மட்டுமே அங்கே வந்துச் செல்ல முடியும் என்பது மட்டுமே! அதன் வாயிலில் வந்து நின்ற ஊபர் டாக்சியிலிருந்து இறங்கினாள் அவள். கறுப்புநிற ஸ்லீவ்லெஸ் ஷார்ட் […]