“அரசியலில் நீங்கள் ஏதேனும் ஒன்றை சொல்ல வேண்டுமாயின் ஒரு ஆணைக் கேளுங்கள்; ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமாயின் ஒரு பெண்ணைக் கேளுங்கள்”
-மார்கரேட் தாட்சர், 1965ல் கூறியது
தஞ்சாவூரின் பிரபல நட்சத்திர ஹோட்டல் கான்பரன்ஸ் ஹாலில் தமிழ்நாடு முன்னேற்றக் கழக்கத்தின் சார்பாக கூட்டப்பட்டிருந்த மீட்டிங்கிற்கு தலைமை தாங்கியிருந்தார் ராமமூர்த்தி.
கட்சியின் மாவட்ட அளவிலான முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் ஆஜராகியிருக்க அருள்மொழியும் யாழினியும் ராமமூர்த்தி என்ன தான் கட்டளையிடப் போகிறார் என்பதை அறிந்து கொள்ளும் எண்ணத்துடன் அமர்ந்து நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
“தலைவரோட மரணத்த தாங்கிக்க முடியாம ஆலக்குடில நம்ம கட்சித்தொண்டரு ஒருத்தரு விஷம் குடிச்சு இறந்துட்டாரு ஐயா… மருதகுளம், பள்ளியேரி, ராஜேந்திரம்னு இன்னும் சில இடத்துலயும் இந்த மாதிரி அசம்பாவிதம் நடந்துச்சு… இறந்தவங்களோட லிஸ்ட் இது தான்” என்று மாவட்ட செயலாளர் கோப்பு ஒன்றினை அளிக்க அதை ராமமூர்த்தி வாங்கிக் கொள்ளும் முன்னர் எழுந்து வாங்கினாள் யாழினி.
ராமமூர்த்தியின் வியப்பு பார்வையைக் கவனியாதவளாய் “அருள் இத கொஞ்சம் பாரு… இவங்க ஃபேமிலிய தான் நாளைக்கு நீ மீட் பண்ணி ஆறுதல் சொல்லப் போற” என்று அருள்மொழியிடம் கோப்பினை காட்டி பேச ஆரம்பித்தாள் அவள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
கூடவே “இனிமே கட்சியோட மாவட்டம் வட்டம் சம்பந்தப்பட்ட எல்லா விவரத்தையும் அருள்மொழி தான் கவனிச்சிப்பார்” என்று கூறியவளின் பேச்சுக்கு அங்கே இருந்த அனைத்து கரைவேட்டிகளும் பூம் பூம் மாடுகளைப் போல தலையாட்டி வைத்தனர்.
இதைக் கவனித்த ராமமூர்த்திக்கு முள்ளிருக்கையின் மீது அமர்ந்திருப்பது போன்ற உணர்வு! மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டதை போல அமர்ந்திருந்தார் மனிதர்.
யாழினி கோப்பு முழுவதையும் அருள்மொழியிடம் காட்டிவிட்டு “வாட்ஸ் யுவர் ப்ளான் அருள்?” என்று வினவ
“எப்பிடியும் என்னோட ப்ளான்படி எதுவும் நடக்கப் போறதில்ல” என்று அவளுக்கு மட்டுமே கேட்கும்வண்ணம் முணுமுணுத்தான் அருள்மொழி.
“கண்டிப்பா… நம்ம ஐ.பி.சிக்கு கோடிக்கணக்குல கொட்டிக் குடுத்திருக்கோம் அருள்… அதுக்கு அவங்களும் கொஞ்சம் வேலை பாக்கட்டும்டா” என்று அவனைப் போலவே முணுமுணுத்தாள் யாழினி.
அருள்மொழி தமக்கையின் காதருகே “எனக்கு என்னமோ அவங்க நமக்காக வேலை செய்யுற மாதிரி தெரியல… நம்மள ஆட்டி வைக்கிற மாதிரி தான் தெரியுது… அதுலயும் அந்த வானதி…” என்று பற்களைக் கடித்தவாறு கூறும் போதே
“சாரி லேட்டா வந்துட்டோமா?” என்ற கேள்வியுடன் அந்த கான்பரன்ஸ் அறையின் உள்ளே நுழைந்தாள் வானதி. கூடவே நிதர்சனா மற்றும் இன்னொரு ஆடவனும் வர அருள்மொழி அவளை அலட்சியமாய் நோக்கிவிட்டு மீண்டும் தமக்கையின் காதை கடிக்க ஆரம்பித்தான்.
“ஸ்பீக் ஆப் த டெவில்” என்றவனைக் கண்டிக்கும் பார்வை பார்த்த யாழினி “இட்ஸ் ஓகே… பை த வே, இவர் தான் நீங்க சொன்ன பாலாவா?” என்று கேட்டபடி அவர்களுக்கான இருக்கையைக் காட்ட மூவரும் அமர்ந்தனர்.
அங்கே இருந்த கரைவேட்டிகள் இவர்களை விசித்திரமாகப் பார்ப்பதைக் கண்ணுற்றவாறே
“யெஸ் மேம்… இவர் தான் தஞ்சாவூர் டிஸ்ட்ரிக்ட்ல ஃபீல்ட் ஒர்க்கர்ஸுக்கு ஹெட்… டுமாரோ ஷூட் பத்தி எல்லா விசயத்தையும் நான் இவர் கிட்ட எக்ஸ்ப்ளெய்ன் பண்ணிட்டேன்” என்றாள் வானதி.
யாழினி முறுவலித்தவள் அவர்களை மாவட்ட பிரதிநிதிகளிடம் அறிமுகம் செய்து வைத்தாள்.
“இவங்க நம்மளோட சேர்ந்து இந்த எலக்சனுக்காக வேலை செய்யப் போறாங்க… கட்சியோட ஒவ்வொரு உறுப்பினரும் இவங்களுக்கு ஆதரவா இருக்கணும்ங்கிறது என்னோட வேண்டுகோள்”
அவள் கூறியதும் அங்கிருந்த கரைவேட்டிகளின் தலை ஆமோதிப்பாய் அசைந்தது.
யாழினி கையோடு கிராமங்களின் பெயர் அடங்கிய கோப்பினை நிதர்சனாவிடம் நீட்ட அதை வாங்கிப் படித்தவள்
“இந்த வில்லேஜ்ஜுக்கு எங்க டீமை அனுப்புற வேலை, ஷூட் பண்ணுற வேலை எல்லாத்தையும் பாலா பாத்துப்பார்… பட் ஒன் கண்டிசன், அருள்மொழி சார் அங்க போறப்ப பார்ட்டி மெம்பர்ஸ், டிஸ்ட்ரிக்ட் செகரட்டரினு யாரும் கூடப் போக வேண்டாம் மேம்” என்று கூறவும் அங்கே சலசலப்பு எழுந்தது.
அதை எதிர்பார்த்தவர் போல ராமமூர்த்தி விசமமாய் புன்னகைத்தார்.
“இவங்க வேணும்னா கார்பரேட்காரங்க ஆட்டி வைக்கிற மாதிரி ஆடலாம்… ஆனா வட்டம் மாவட்டம்னு இருக்குற எவனும் இவங்க ஆட்டத்துக்கு ஈடு குடுக்க மாட்டான்… ராமமூர்த்தி இனிமே தான்டா வேடிக்கையே இருக்கு… இந்தச் சின்னப்பயலும், அவனோட அரைவேக்காடு அக்காவும் என்ன சொல்லி சமாளிக்காங்கனு பாப்போம்”
தனக்குள் குதூகலித்தவர் முகத்தில் எவ்வுணர்வையும் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அவரது விசமப்புன்னகை அருள்மொழி மற்றும் வானதியின் கவனத்தை எப்போதோ ஈர்த்துவிட்டது.
அந்த மனிதர் எதிர்பார்த்தது போலவே மாவட்ட செயலாளர் எழுந்து தனது மறுப்பைத் தெரிவிக்க ஆரம்பித்தார்.
“தலைவரோட காலத்துல இருந்தே அவர் தஞ்சாவூருக்கு வந்தா அவருக்கு உதவியா இருக்குறது நான் தான்… நானும், எனக்குக் கீழ இருக்குற கட்சியாளுங்களும் தான் அவர பாதுகாப்பா எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப் போறது வர்றதுமா இருப்போம்… இவங்க திடீர்னு வந்து கட்சியாளுங்க கூட வரக்கூடாதுனு சொன்னா என்ன அர்த்தம்? நாங்க வர்றது தலைவர் மகனோட பாதுகாப்புக்குத் தான்… அதுக்கு இவங்களால உத்திரவாதம் குடுக்க முடியுமா? கட்சிக்காரங்களும் காசுக்கு வேலை பாக்குற கம்பெனிக்காரங்களும் ஒன்னா?”
கடைசி வாக்கியம் குறி தவறாது தாக்கியதில் வானதி சிலிர்க்கவும் அருள்மொழி அவளைக் கேலியாய் பார்த்து வைத்தான். இதை எப்படி சமாளிப்பாய் என்று புருவத்தை ஏற்றியிறக்கி அவன் செய்த அபிநயத்தில் கடுப்புற்று எழுந்து சென்றுவிட அவள் ஒன்றும் பதின்வயதில் அவன் கண்ட வானதி இல்லையே!
அவனைச் சவாலாய் நோக்கிவிட்டு விழிகளை மாவட்ட செயலாளரிடம் திருப்பியவள்
“நீங்களே சொல்லிட்டீங்களே, நாங்க காசுக்கு வேலை பாக்குறோம்னு… வாங்குன காசுக்கு ஒழுங்கா வேலை செய்யலனா எங்களுக்குக் காசு குடுத்தவங்க எங்களை சும்மா விடமாட்டாங்கனு எங்களுக்குத் தெரியாதா? அதோட இந்த கண்டிசன் எதுக்காக போட்டோம்னு தெரிஞ்சா நீங்க கோவப்பட மாட்டிங்க… இப்போ கட்சிக்காரங்களோட சேர்ந்து மிஸ்டர் அருள்மொழி கிராமங்களுக்குப் போனார்னா அது என்னவோ அரசியல் சுற்றுப்பயணம் மாதிரி ஆகிடும்… இது அப்பிடிப்பட்ட சுற்றுப்பயணம் இல்ல… உங்க கட்சி தலைவரை இழந்து தவிக்கிற நிலமைல தொண்டர்கள் மேல அக்கறை இருக்குற ஒருத்தரை தான் நீங்க தலைவரா செலக்ட் பண்ணிருக்கீங்கனு தொண்டர்கள் நம்பணும்… அதுக்கு உங்களோட இந்த புது தலைவர் தனியா போனா தான் சரியா வரும்…
வட்டம் மாவட்டம்னு கூட்டம் சேர்த்துட்டுப் போனா ஆப்போசிட் பார்ட்டிக்காரங்க ஆறுதல் சொல்லுறத கூட அரசியலாக்குறாங்கனு கேலி பேசுவாங்க… கட்சியாளுங்க கிட்ட மட்டும் இல்லாம வெகுஜனம் மத்தில ஒரு அரசியல்வாதியோட பிம்பம் எப்பிடி பதிவாகுதுங்கிறது ரொம்ப முக்கியம்… நீங்க அருள்மொழிய உங்க கட்சியோட தலைவரா மட்டும் தான் பாக்குறிங்க.. ஆனா நாங்க அவரை உங்க மக்களோட தலைவரா வெகுஜனம் மத்தில பதிய வைக்க பிரயத்தனப்படுறோம்… ஓட்டு வங்கி ஓட்டு வங்கினு ஒன்னு இருக்கு… அது உங்க கட்சிக்காரங்க மட்டுமில்ல… நீங்க அதை புரிஞ்சுக்குவிங்கனு நம்புறேன்” என்று கறாராகக் கூற மாவட்டச்செயலாளர் கப்சிப்பானார்.
அவர் அமைதியாய் அமரவும் ராமமூர்த்திக்குச் சொத்தென்று ஆனது.
அருள்மொழிக்கு அப்படியே அவள் சொல்வதை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை.
தொண்டையைச் செருமியவன் “எனக்குச் செகரட்டரி சொன்னதும் சரி தான்னு தோணுது… நிறைய பேர் என்னோட வந்தா தானே நீங்க சொன்ன மாதிரி ஆப்போசிட் பார்ட்டி சொல்லுவாங்க… எனக்கு இறந்தவங்களோட குடும்பத்தாளுங்கள தெரியாதுல்ல, அதோட அந்த வில்லேஜுக்கு நான் போனதே இல்ல… சோ இவர் கைட் மாதிரி என் கூட வரட்டும்.. மத்ததெல்லாம் உங்க ஃபீல்ட் டீம் வச்சு அரேஞ்ச் பண்ணிக்கோங்க மிஸ் வானதி” என்று அவளுக்குக் கட்டளையிட வானதி அவனை வெட்டுவது போல பார்த்துவிட்டு தலையசைத்தாள்.
பின்னர் நடந்த அரைமணி நேர பேச்சுவார்த்தையில் ஒருவாறு கட்சியின் மாவட்டத்தலைமை ஐ.பி.சியின் களப்பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்குவோமென மனதார ஒத்துக்கொண்டதும் கூட்டம் முடிவுக்கு வந்தது.
ராமமூர்த்தி அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்குச் சென்றுவிட செல்பவரைக் கவனித்தபடி நிதர்சனாவையும் பாலாவையும் ஓய்வெடுக்க அவரவர் அறைக்குச் செல்லும்படி கட்டளையிட்டாள் வானதி.
யாழினியிடம் “அப்ப நான் சென்னைக்குக் கிளம்புறேன் மேம்… சனாவும் பாலாவும் ஒர்க்கை பெர்ஃபெக்டா முடிச்சுக் குடுத்துடுவாங்க… நான் அடுத்தக்கட்ட வேலைய ஆரம்பிக்கிறேன்” என்று விடைபெற்றாள் வானதி.
அவள் ஆமோதிப்பாய் தலையசைக்கையில் அகத்தியனின் மொபைல் அழைப்பு வந்துவிட “எக்ஸ்யூஸ் மீ” என்று கேட்டுக்கொண்டு சற்று விலகிச் சென்றாள் யாழினி.
அவள் நகர்ந்ததும் வானதியின் பார்வை அருள்மொழியின் பக்கம் திரும்ப அவனோ “உன்னை பாத்த டே ஒன்ல இருந்து ஒரு கொஸ்டீன் என் ப்ரெய்னை போட்டுப் பாடாப்படுத்துது… மே ஐ ஆஸ்க்?” என்று கேட்க
“யூ கேன்… பட் அதுக்குக் கண்டிப்பா நான் ஆன்சர் பண்ணியே தீரணும்னு நீ எதிர்பாக்கக்கூடாது… பதில் சொல்லுறதும் சொல்லாம போறதும் என் இஷ்டம்” என்றபடி மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டாள் வானதி.
அருள்மொழி உதட்டைப் பிதுக்கியவன் “இந்த ஆட்டிட்டியூட் மட்டும் மாறவேல்ல… லீவ் தட்… என்னோட கொஸ்டீன் இது தான்… வேர் இஸ் யுவர் ஹீரோ? மேரேஜ் பண்ணிக்கிட்டீங்களா? எத்தனை பசங்க?” என்று விசாரிக்க வானதியின் முகம் மாறத் தொடங்கியது.
அவளது முகமாற்றத்திற்கு வேறு மாதிரி அர்த்தம் எடுத்துக் கொண்டவன்
“ஓ! அப்ப இன்னும் மேரேஜ் ஆகல… ஆனா உன்னால அவனை விட்டு ஒரு இன்ச் கூட நகரமுடியாதுனு சினிமா டயலாக் பேசுனியே… ஒருவேளை லிவினா?” என்று விசமமாகக் கேட்டு வைத்து அவளது எரிமலைக்கண்களில் சிக்கிக் கொண்டான்.
வானதி சினம் மேலிட “மைண்ட் யுவர் லாங்வேஜ் அருள்” என்று சீற ஆரம்பிக்க அவனோ நக்கலாய் சிரித்தான்.
“சில்! இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு இவ்ளோ கோவம்? லவ் பேர்ட்ஸ்ல ஒன்னு இங்க இருக்கு… இன்னொன்னு எங்கனு கேட்டது ஒரு குத்தமா?”
கேலியாய் கேட்டவனின் முகம் திடீரென இறுக்கத்தைப் பூட்டிக்கொண்டது.
தனது எதிரில் கை கட்டி நிற்பவளை நெருங்கியவன் “என்னால அவனை மறக்கவே முடியாதுடி… வாழ்க்கைல சின்ன விசயத்துல கூட தோத்து பழகாத எனக்கு தோல்வியோட டேஸ்டை இன்ட்ரடியூஸ் பண்ணுனவன்… அவன் அப்பிடி செய்யுறதுக்கு பேக்போனா இருந்து எல்லாத்தையும் செஞ்சு முடிச்சவ நீ… என் வாழ்க்கைல அதுக்கு அப்புறம் நான் இறங்குன எந்த ஃபீல்ட்லயும் எனக்குத் தோல்வியே வந்தது இல்ல… ஆனா டீனேஜ்ல நான் அடைஞ்ச தோல்விய என்னால மறக்கவே முடியாது… பிகாஸ் முதல் காதல், முதல் வலி, முதல் தோல்வி இதெல்லாம் ரொம்ப ஸ்பெஷல்ல” என்று அடிக்குரலில் கூற வானதி பின்னோக்கி நகர்ந்தவள் சுவரில் இடித்து நின்றாள்.

அவனுக்குச் சற்றும் குறையாத சீற்றத்துடன் தலை நிமிர்ந்தவள் “அவன் எங்க இருக்கான்னு தெரிஞ்சு என்ன பண்ணப்போற?” என்று வினவ
“அவனுக்கு என்னோட ஸ்டேட்டஸை காட்டுவேன்… ட்ராமால ராஜா வேஷம் போட்டவன்லாம் நிஜத்துல ராஜா ஆகமுடியாதுடானு புரிய வைப்பேன்” என்றான் அருள்மொழி.
வானதி கோபம் மேலிட “அப்ப செத்துப் போடா” என்றாள்.
அருள்மொழி “ஏய்” என்று சீற
“ஆமா! செத்துப் போ… நீ செத்துப் போனா தான் அவனை பாத்து உன்னோட திமிர்த்தனத்த காட்டமுடியும்… ஏன்னா என்னோட யுவா இறந்து ஏழு வருசம் ஆகுது”
சொல்லி முடிக்கும் போது அவளின் குரல் உடைந்து போனது. அருள்மொழி அவள் கூறிய செய்தியில் அதிர்ச்சியுற்றவன் “வாட்?” என்று நம்பமாட்டாமல் விழிக்க வானதி தன்னைச் சமனப்படுத்திக் கொண்டாள்.
பழைய நிமிர்வை மீட்டெடுத்தவளாய் “நாளைக்கு உங்களோட ஜர்னி நல்லபடியா நடந்து முடிய வாழ்த்துக்கள் மிஸ்டர் அருள்மொழி” என்று அவனை வாழ்த்தியவள் சற்றும் தாமதிக்காது அங்கிருந்து வெளியேறினாள்.
அருள்மொழி அதிர்ச்சியின் உச்சத்திலிருக்க அவனது செவிகளில் “த வின்னர் ஆப் சி.பி.எல் எலக்சன் இஸ் யுவராஜ்” என்று என்றோ யாரோ ஒலிபெருக்கியில் அறிவித்தது இப்போது கூறுவது போல கேட்டது.
அதைத் தொடர்ந்து மாணவர்கள் கூச்சலிடுவதும் “விடுறா அருள்… சி.பி.எல் எலக்சன்லாம் சொப்பு ஜாமான் வச்சு விளையாடுறது மாதிரி… நீ நினைச்சா ஒரிஜினல் எலக்சன்லயே நிக்கலாம் மச்சான்” என்று நண்பன் ஒருவன் ஆறுதல் சொல்வதும் கூட அவனது செவிகளில் நிகழ்கால சம்பவமாய் ஒலித்தது.
“டேய் அந்த யுவா எலக்சன்ல நிக்கலனு தான்டா சொன்னான்… ஆனா அவன் கூடவே சுத்துமே ஒன்னு… அது பேர் என்ன? ஹான், வானதி… அந்த வானதி தான் அவனை இழுத்துவிட்டுச்சு… சாருக்கும் அதுக்கும் லவ் போல… மேடம் சொல்லுறத சார் தட்டவே மாட்டாராம்”
இது இன்னொரு நண்பனின் குரல்! அதை தொடர்ந்து யுவராஜ் புன்னகையுடன் அவன் முன்னே வந்து நிற்க அவனுடன் கரம் கோர்த்தபடி நின்றிருந்தாள் வானதி.
“என் யுவாக்கு என்ன தகுதி இருக்குனு கேட்டல்ல… தகுதிங்கிறது பிறவில வர்றதுல இல்ல… நம்ம முயற்சி பண்ணி வளத்துக்கிறது… அத காசு குடுத்து வாங்க முடியாது அருள்”
என்றோ கண்களில் கர்வம் மின்ன அவள் சொன்னது இன்று சொல்வது போல தோன்றியது அருள்மொழிக்கு. இந்தக் காட்சிகள் எல்லாம் முடிந்ததும் நிகழ்காலத்திற்கு வந்தவனின் பார்வையில் வானதி தென்படவில்லை. அவள் தான் எப்போதோ கிளம்பியிருந்தாளே!
வாழ்க்கை தான் எவ்வளவு நிலையற்றது! இன்று நம் கண் முன்னே நடமாடுபவர்கள் நாளையும் அவ்வாறு நடமாடுவார்களா என்பது சந்தேகம் தான்! இதற்கிடையே தான் நமக்குள் எத்தனை போட்டிகள்! பொறாமைகள்! ஆற்றாமைகள்! இதை அருள்மொழிக்கு அத்தருணத்தில் புரியவைத்துவிட்டுத் தான் வானதி சென்றிருந்தாள்.
Ghost Writers!இங்கே உள்ள கதைக்கருவைத் திருடாதீர்கள்!