“பதினெட்டாம் நூற்றாண்டில் மூன்று விதமான மனநோய்களைப் பற்றி மருத்துவ உலகம் அதிகம் பேசியிருக்கிறது. மனச்சோர்வு எனப்படும் டிப்ரசன், சைகோசிஸ், டெல்யூசன் போன்றவையே. ஆனால் மனப்பிறழ்வுக்குறைபாடு என்பதோ நரம்பியல் சார்ந்த மனநலக்கோளாறாகும். உணர்ச்சிகளைக் கையாளுவதில் பற்றாக்குறை, இரக்கமின்மை மற்றும் மோசமான நடத்தைகள் போன்றவை இதன் அறிகுறிகளாகும். சைகோபாத்கள் பார்ப்பதற்கு சாதாரணமாக, ஏன் கவர்ச்சியாகக் கூட இருப்பார்கள். அவர்களை ஊன்றி கவனிக்கும்போது தான் மனசாட்சியற்று செயல்படுவதைக் கண்டுகொள்ள முடியும். அவர்களின் சமூக விரோத இயல்பானது பெரும்பாலும் குற்றச்செயல்களில் போய் முடிவடையும். […]
Share your Reaction

