
முன்னுரை: தமிழ்ல 'ஐஞ்சிறு காப்பியங்கள்'ல ரொம்ப முக்கியமான ஒன்னுதான் இந்த நாககுமார காவியம். இதை 'நாகபஞ்சமி கதை'ன்னும் சொல்லுவாங்க. உலகத்துல நாம அனுபவிக்கிற சந்தோஷங்கள் எல்லாம் நிலையானது இல்ல, 'முக்தி' அடையறதுதான் ஒரு மனுஷனோட உண்மையான லட்சியம்னு இதோட கதை சொல்லுது.
நூலும் ஆசிரியரும்:
இந்தக் கதையை எழுதினது ஒரு சமணப் பெண்துறவி. ஆனா அவங்க பேர் என்னன்னு நமக்குத் தெரியல. 16-ஆம் நூற்றாண்டுல எழுதப்பட்டதா சொல்லப்படுற இந்த நூல்ல மொத்தம் 170 பாடல்கள் இருக்கு. இதை அஞ்சு 'சருக்கங்களா' (பிரிவுகளா) பிரிச்சிருக்காங்க. ஒரு காலத்துல இந்த நூல் அழிஞ்சு போயிடுச்சுன்னு நினைச்சாங்க, ஆனா மு. சண்முகம் பிள்ளை அப்படிங்கற அறிஞர் கஷ்டப்பட்டு இதை மீட்டு நம்ம கைக்குக் கொண்டு வந்திருக்கார்.
காப்பியக் கதைச் சுருக்கம்:
பிறப்பும் அந்த 'நாக'ப் பெயரும்: மகத நாட்டோட தலைநகரம் இராசமாகிரியம். அங்க சிரேணிகன்னு ஒரு ராஜா இருந்தான். அவன் வர்த்தமான தீர்த்தங்கரரை (சமண கடவுள்) வணங்கி, 'நாகபஞ்சமி' நோன்போட மகிமையைச் சொல்லுங்கன்னு கேக்குறான். அப்போ கௌதம முனிவர் இந்த நாககுமாரனோட கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.
சயந்தரன்-பிரிதிவி தேவி தம்பதிக்கு மகனாப் பிறந்தவன் தான் நம்ம ஹீரோ நாககுமாரன். அவன் பிறந்தப்பவே நிறைய அதிசயங்கள் நடந்துச்சு. ஒருமுறை அவன் சின்னப் பிள்ளையா இருக்கும்போது 'நாக வாவி' (பாம்பு குளம்) ஒன்னுல விழுந்துட்டான். அப்போ ஒரு பாம்பு அவனைத் தாங்கிப் பிடிச்சதால தான் அவனுக்கு நாககுமாரன்னு பேர் வந்துச்சு. கலை, வீரம், அழகுன்னு எல்லாத்துலயும் அவன் கில்லி!
காதல் மன்னன் (இன்ப வாழ்வு): இந்தக் கதையில முக்கியமான விஷயம் என்னன்னா, நாககுமாரன் மொத்தம் 519 பெண்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதா சொல்லப்படுது. தன் வீரத்தாலயும், வீணை வாசிக்கிற திறமையாலயும் பல நாட்டு இளவரசிகளை இவன் கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவனுக்கு வியாளன், மாவியாளன்னு ரெண்டு உயிர் நண்பர்கள் இருந்தாங்க. அவங்க கூடச் சேர்ந்து ஜாலியா ஊர் சுத்திக்கிட்டு, போகம் அனுபவிச்சுக்கிட்டு இன்பமா வாழ்ந்தான்.
மன மாற்றம் (துறவறம்): இளமை காலத்துல இவ்வளவு இன்பங்களை அனுபவிச்சாலும், ஒரு கட்டத்துல அவனுக்குப் பொறி தட்டுது. வானத்துல வர்ற மேகம் மறைஞ்சு போற மாதிரியும், மின்னல் வந்துட்டுப் போற மாதிரியும் நம்ம வாழ்க்கையும், இந்த சிற்றின்பங்களும் நிலையானது இல்லன்னு அவன் புரிஞ்சுக்கிட்டான். உடனே தன் மகன் தேவகுமாரனுக்குப் பட்டம் கட்டிட்டு, எல்லாத்தையும் விட்டுட்டுத் துறவி ஆயிட்டான். அவனைத் தொடர்ந்து அவன் மனைவி இலக்கணையும் மத்தவங்களும் துறவறம் போயிட்டாங்க. கடைசியில பயங்கரமா தவம் செஞ்சு அவங்க முக்தி (சித்தி) அடைஞ்சுட்டாங்க.
இந்தக் காப்பியத்தோட ஸ்பெஷல் என்ன?
நாகபஞ்சமி நோன்பு: கார்த்திகை, பங்குனி இல்லன்னா ஆடி மாசத்துல வர்ற வளர்பிறை பஞ்சமி திதியில இந்த நோன்பு இருக்கணும். இந்த விரதத்தோட பெருமையை இந்தக் கதை ரொம்ப அழகா விளக்குது.
வினைப்பயன்: நாககுமாரன் போன ஜென்மத்துல செஞ்ச நல்ல விஷயங்களால தான் இந்த ஜென்மத்துல இவ்வளவு சொகுசா வாழ்ந்தான் அப்படின்னு 'கர்ம வினை' பத்தி இது பேசுது.
எளிமையான தமிழ்: மத்த காப்பியங்கள் மாதிரி ரொம்ப கஷ்டமா இல்லாம, படிக்க எளிமையா இருக்குறது இதோட பெரிய பிளஸ்.
நூற்பயன் : இந்தக் கதையை படிக்கிறவங்களுக்கு கவலைகள் நீங்கும், நல்ல குழந்தை செல்வம், செல்வம் எல்லாம் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலா, வாழ்க்கையோட உண்மையான அர்த்தம் புரியும்னு நூல் சொல்லுது.
முடிவுரை: "அறம் செய்யாம வேற எதுவும் நமக்குத் துணையா வராது" அப்படிங்கறதுதான் இந்தக் காவியம் நமக்குச் சொல்லுற மெசேஜ். போகத்துல (என்ஜாய்மென்ட்) ஆரம்பிச்சு யோகத்துல (தவம்) முடியுற ஒரு மனுஷனோட வாழ்க்கை பயணத்தை நாககுமார காவியம் தெளிவா விவரிச்சிருக்கும்.
இதோட ஐஞ்சிறு காப்பியங்கள் முடிவடையுது மக்களே! அடுத்தடுத்த பதிவுகள் தமிழ் களஞ்சியம்ல போடணும்னு நினைக்குறேன். நேரம் வாய்ச்சா தொடர்ந்து பதிவுகள் வரும்.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



