NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
அன்பனின் ஆரபி - டீச...
 
Share:
Notifications
Clear all

அன்பனின் ஆரபி - டீசர்

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

“அவர் பேருக்குப் பொண்டாட்டியா வாழ கூப்பிடுறார்மா… இதுக்காகவா என்னை அவருக்குக் கல்யாணம் பண்ணிவச்சிங்க.? அவரோட வார்த்தை ஒவ்வொன்னும் கத்தி மாதிரி என்னைக் குத்தி கிழிக்குது… என் வார்த்தைய நம்பாத மனுசனோட வீட்டுல வாழுறது எனக்கு மரியாதை இல்ல… நான் காலம் முழுக்க நம்ம வீட்டுலயே இருந்துடுறேன்” என்றாள் ஆரபி கண்ணீரோடு.

ஆனால் சுடர்விழியோ மனதைக் கல்லாக்கிக்கொண்டு “இது உன் வீடு இல்ல… எப்ப உனக்குக் கல்யாணம் ஆச்சோ அப்பவே உன் புருசன் வீடு தான் உன் வீடுனு ஏத்துக்கணும் ஆரபி… நீ அங்க இருக்குறது தான் முறை… கிளம்பு” என்று மகளை விரட்டினார்.

“நான் போகமாட்டேன்மா… என்னை ஒரு துளி கூட மதிக்காத மனுசன் கூட என்னால வாழமுடியாது”

அடுத்த நொடி பளாரென அறை விழுந்தது ஆரபியின் கன்னத்தில். முகமெங்கும் கோபத்தோடு சுடர்விழி அவளை எரித்துக்கொண்டிருந்தார் பார்வையால்.

ஆரபி வலியெடுத்தக் கன்னத்தோடு ஏறிடவும் “உன்னால நாங்க இதுவரைக்கும் பட்ட அசிங்கம் போதாதா? கல்யாணம் ஆகி வாழாவெட்டியா இருந்து எங்களை அசிங்கப்படுத்தப்போறியா? ஏன்டி இப்பிடி எங்க மானத்தை வாங்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்க? மருமகன் தான் கூப்பிடுறார்ல… அங்க போனா உன் தலைல இருக்குற க்ரீடம் இறங்கிடுமா? ஆம்பளைனா நாலு வார்த்தை கோவத்துல விடுறது சாதாரணம்… அதுக்காக புரட்சி வசனம் பேசுனா காலம் முழுக்க நீ தனியா வாழணும்… கல்யாண மண்டபத்துல நான் என்ன சொன்னேன்னு ஞாபகம் இருக்குதா இல்லையா? மருமகன் என்ன பேசுனாலும் திட்டுனாலும் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போ… நீ செய்யாத எதையும் அவர் சொல்லலையே? எத்தனை நாளு அவர் பேசுவார்? என்னைக்கோ ஒரு நாள் உன்னை மன்னிச்சுத் தானே ஆகணும்… அதுவரைக்கும் பொறுமையா உன் புகுந்தவீட்டுல காலந்தள்ளுற வழிய பாரு… ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் சரியாகிடும்… உன்னைக் காலம் முழுக்க சுமக்க நானோ என் புருசனோ தயாராயில்ல” என்று அவர் கூற ஆரபி அக்கணம் நொறுங்கிப்போனாள்.

கணவனின் புறக்கணிப்பு ஒரு புறம்! பெற்றோரும் ஆதரவளிக்காத ஏமாற்றம் மறுபுறம்!

எதுவும் பேசாமல் தனது உடைமைகளைப் பெட்டியில் அடுக்கிக்கொண்டாள். தனது அறையாய் இத்தனை நாட்கள் உரிமையாய் புழங்கிய அறையை விட்டு வெளியேறினாள்.

ஹாலில் அவளுக்காகக் காத்திருந்த அன்பரசனை ஏறிட்டும் பாராமல் தந்தையிடம் மட்டும் “நான் போறேன்பா” என்று சொல்லிவிட்டு வெளியேறினாள் ஆரபி.

காரிலேறியவளின் மனம் வேதனையில் தத்தளித்தது. விசித்திரமான வகையில் முறுவல் பூத்தது இதழ்களில். அது இயலாமையின் அடையாளம்! கையறுநிலையின் அறிகுறி! எந்தப் பெண்ணுக்குப் பிறந்தகத்தின் ஆதரவு இல்லையோ அந்தப்பெண்ணைப் புகுந்தவீடு மதிக்காது. இது காலங்காலமாக நடைபெறுவதே!

ஆரபிக்கோ புகுந்தவீட்டினர் அனைவரும் சொக்கத்தங்கம், அவளது கணவனைத் தவிர! ஆனால் பிறந்தகம், இனி நீ எங்களுக்கு வேண்டாத சுமை என்று தூக்கியெறிந்துவிட்டது.

*******

ஹலோ மக்களே

நாளை முதல் டெய்லி ரெண்டு எபி வரும். காத்திருங்கள்!

1770543972-WhatsApp-Image-2026-02-08-at-104808-AM.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : February 8, 2026 3:16 PM
(@kothai-suresh)
Honorable Member Member

அன்பு, அரபி👍👍👍👍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 8, 2026 4:49 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images