NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்

.

.

Share:
Notifications
Clear all

நந்தவன நறுமலரே

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

ஒரு குட் நியூஸ்! எனது புதிய நாவலான ‘நந்தவன நறுமலரே’ கண்மணியில் வெளிவந்துள்ளது. அருகிலுள்ள கடைகளில் இன்று முதல் கிடைக்கும். படித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துக்கோங்க.

 

கதையிலிருந்து சில வரிகள்...

 

“வீட்டுக்காரம்மா கடைக்கே வந்துட்டாவளா?”

எதிர்ப்பக்கத்துக்கடையிலிருக்கும் டெயிலர் பொன்னுரங்கம் சத்தமாகச் சொல்லிச் சிரிக்கவும் தேவயானியின் முகத்தில் நாணச்சிவப்பேறியது.

அதை மறைத்தவள் சுரேஷிடம் “முதல் தடவையா உங்களை எல்லாம் பாக்க வந்திருக்கேன். குடிக்க, சாப்பிட எதுவும் தரமாட்டிங்களா தம்பி?” என்று கேட்க

“நீங்க உக்காருங்க மதினி. நான் ஓடிப்போய் உங்களுக்கு ஸ்பெஷல் டீயும், காரவடையும் வாங்கிட்டு வர்றேன்” என்று உற்சாகமாகச் சொல்லிவிட்டுச் சில அடிகள் தொலைவில் இருக்கும் தேநீர்க்கடைக்கு ஓடினான் சுரேஷ்.

தேவயானி வாடிக்கையாளர்கள் அமரப் போடப்பட்டிருந்த நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தாள்.

சரவணன் திகைப்பாய் நிற்கவும் “பயப்படாதிங்க. என் மிஸ்ட் கால்ஸ் பாத்தும் ஏன் கூப்பிடலனு சண்டை போடுறதுக்காக நான் இங்க வரல” என்று சொன்னாள்.

“அதில்ல தேவா…”

“அப்புறமா பேசலாம். முதல்ல சட்டைய போட்டுட்டு வாங்க”

சிவந்த முகத்தை எங்கோ பார்ப்பது போல திருப்பிக்கொண்டாள்.

வேலை செய்யும்போது அழுக்காகிவிடுமெனச் சட்டையைக் கழற்றிவிட்டு பனியனோடு வேலை செய்வது சரவணனின் வழக்கம்.

கையில்லாத பனியனில் திமிறி நிற்கும் புஜங்களும், அகன்ற தோளும் தேவயானியை ஏதோ ஒரு வகையில் இம்சித்தன. அவனும் புரிந்துகொண்டு சட்டையை அணிந்துவிட்டு வந்தான்.

“உங்களுக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம் தானே?” தடாலடியாகக் கேட்டாள் அவள்.

“இப்ப எதுக்கு இந்தக் கேள்வி?”

“நீங்க இன்னும் பதில் சொல்லலையே”

“எனக்குப் பரிபூரண சம்மதம் தேவா”

“அப்ப எதுக்காக என்னை அவாய்ட் பண்ணுறிங்க சரவணன்?...

********

சரவணன் – தேவயானியின் வாழ்க்கையில் அடுத்து நடக்கப்போவது என்ன? நந்தவன நறுமலரே – கண்மணியில் படித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

 

 

1747294521-WhatsApp-Image-2025-05-15-at-130248_b88f1bcf.jpg

 

Share your Reaction

Loading spinner
Quote
Topic starter Posted : May 15, 2025 1:05 PM

.

.