வணக்கம்! நான் நித்யா மாரியப்பன். டாக்ஸ் கன்சல்டண்டாகப் பணியாற்றியபடி கடந்த ஆறாண்டுகளாக இணையத்தில் எழுதி வருகிறேன். இதுவரை 49 நாவல்களும், 27 சிறுகதைகளும், இரண்டு குறுநாவல்களும் எழுதியுள்ளேன். எனது 9 நாவல்கள் அருணோதயம் பதிப்பகம் மூலமாகவும், 5 நாவல்கள் ஸ்ரீ பதிப்பகம் மூலமாகவும் புத்தகங்களாக வந்துள்ளன. எனது அன்புடை அன்றிலே எனும் குறுநாவல் ராணிமுத்துவில் 2022ல் வெளியானது.
புதிதாக ஏதாவது கற்றுக்கொண்டே இருப்பது எனக்குப் பிடிக்கும். அப்படி ஒரு ஆர்வத்தில் உருவானதுதான் இந்த NM Tamil Novel World என்ற தளம். இனி இது எனது படைப்புகள் உருவாகுமிடமாக இருக்கும்.