NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

மணிமேகலை

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

மணிமேகலை தமிழ்ல இருக்கிற ஐந்து பெரிய காப்பியங்கள்ல ஒன்னு. இந்தக் காப்பியம் பௌத்த மதம் சம்பந்தப்பட்டது, தலைவி மணிமேகலையோட வாழ்க்கையை மையமா வைத்து எழுதப்பட்ட காப்பியம் இது.

கதையோட தொடக்கம்

மணிமேகலை சிலப்பதிகாரக் கதைல வர்ற கோவலன் மற்றும் மாதவியோட பொண்ணு. அவ பூம்புகார்ல வளருறா. ஒருநாள் இந்திர விழா நேரத்துல, தோழி சுதமதிகூட பூங்காவுக்கு பூ பறிக்கப் போறா. அங்க சோழ மன்னனோட பையன் உதயகுமரன் மணிமேகலையப் பாத்ததும் காதல்லயும் ஏக்கத்தத்துலயும் மூழ்கிப் போறான்.

முக்கியமான சம்பவங்கள்

  • மணிமேகலை, தனக்கு இருக்கிற உலக ஆசைகளை எல்லாம் விட்டுட்டு பௌத்த துறவியா ஆகணும்னு ஆசைப்படுறா.
  • சோழ இளவரசன் உதயகுமரன் மணிமேகலை மேல காதல் கொண்டாலும், அவளை அடைய முடியல.
  • மணிமேகலா தெய்வம் அவளை மணிபல்லவம் தீவுக்குக் கூட்டிட்டுப் போகுது. அங்க அவளுக்கு மூணு மந்திரங்கள் கிடைக்குது – வேற உருவமா மாறுறது, பசியைப் போக்குறது, வானத்துல பறக்குறது.
  • அவளுக்கு மணிமேகலை தெய்வம் மூலமா "அமுதசுரபி"ன்னு ஒரு பாத்திரம் கிடைக்குது; இது பசியைத் தீர்க்கிற ஒரு அற்புதமான பாத்திரம்.
  • துறவி வாழ்கையை மணிமேகலை ஏத்துக்கறது பிடிக்காத அவளோட பாட்டி சித்ராபதி, உதயகுமரனைத் தூண்டி விடுறாங்க. உதயகுமரன் மணிமேகலையை அடைய முயற்சி பண்றான்.
  • மணிமேகலை, தன் மந்திரத்தால காயசண்டிகைங்கற பொண்ணோட உருவத்த எடுத்துக்கறா. உதயகுமரன் தப்பா நினைச்சு அவளை ஆசைப்படுறான். காயசண்டிகையோட புருஷன் உதயகுமரனைக் கொன்னுடுறான், அதனால மணிமேகலை ஜெயில்ல அடைக்கப்படுறா.
  • ஜெயில்ல இருந்தப்போ, மணிமேகலை கஷ்டங்களைத் தாங்கி, எல்லாருக்கும் நல்ல விஷயங்களைச் சொல்லித் தர்றா.
  • அப்புறம் விடுதலை கிடைச்சு, ஆபுத்திரனைச் சந்திச்சு, ரெண்டு பேரும் மணிமேகலை தீவுக்குப் போறாங்க. அங்க, அவன் அவனோட போன ஜென்மத்தைப் பத்தித் தெரிஞ்சுக்கறான்.

கதையோட முடிவு

மணிமேகலை, வஞ்சி நகருக்குப் போய் கண்ணகி தெய்வத்த கும்பிடுறா. எல்லா மதங்களைப் பத்தியும், உண்மைத் தத்துவங்களைப் பத்தியும் அறிவைப் பெறறா. அப்புறம் காஞ்சி நகர்ல இருக்கிற மக்களோட பசியைப் போக்குறா. அவளோட லட்சியம் – உலக மக்களுக்கு நல்ல விஷயங்களை விதைக்கறது, பசியைப் போக்கி நல்ல மதத்தைப் பரப்பறது. கடைசியில, “புத்தம் சரணம் கச்சாமி; தர்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி”ன்னு சொல்லிட்டு, பிறப்பு இறப்பு இல்லாத நிலைக்கு நோன்பு இருக்கிறா.

இலக்கியச் சிறப்புகள்

மணிமேகலைங்கறது ஒழுக்கம், துறவு, நல்ல விஷயங்கள், பசி, மனித நேயம் மற்றும் மத ஒற்றுமையப் பத்தி வலியுறுத்திச் சொல்ற காப்பியம். பெண்களோட பெருமை, போன ஜென்மத்தோட பலன், மனித நேயம், சமூக விழிப்புணர்வு இதெல்லாம் இதுல முக்கியமான விஷயங்களா இருக்கு.

அடுத்த வாரம் வளையாபதி பத்தி பாக்கலாம் மக்களே! ஐம்பெருங்காப்பியங்கள் முடிஞ்சதும் ஒவ்வொரு காப்பியத்தில இருக்குற கிளைக்கதைகளையும் பாக்கலாம்! குட் நைட்!

1756725803-WhatsApp-Image-2025-09-01-at-164109_5e92531b.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : September 1, 2025 4:53 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images
Index