NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்

.

.

கபாடபுரத்து இடைச்சங...
 
Share:
Notifications
Clear all

கபாடபுரத்து இடைச்சங்கம் - ஒரு பார்வை

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

போன தடவை முதல் தமிழ் சங்கம் பத்தி பாத்தோம். அது அமைந்திருந்த மதுரை கடற்கோள் எனப்படும் சுனாமியால அழிஞ்ச அப்புறம் பாண்டிய மன்னர்கள் வடக்கு நோக்கி நகர்ந்து கபாடபுரத்தைத் தலைநகரமா வச்சு தங்களோட ஆட்சியைத் தொடர்ந்தாங்க. அங்க அவங்க ஆரம்பிச்ச தமிழ் சங்கத்தை 'இடைச்சங்கம்'னு இறையனார் களவியல் உரை சொல்லுது. அதைப் பத்தி இந்தப் பகுதில விரிவா பாக்கலாமா?

அமைவிடம்

இந்த இடைச்சங்கம் கபாடபுரம்ங்கிற அழகான நகரத்துல இருந்துச்சு. இந்த கபாடபுரம் எங்கேன்னு உறுதியா தெரியலைன்னாலும், இதுவும் கடற்கரையோரமா இருந்த ஒரு பெரிய நகரமா இருந்திருக்கும்னு சொல்றாங்க. வால்மீகி ராமாயணத்துல கூட கபாடபுரம் பத்தி குறிப்பு இருக்குறதா சொல்லுறாங்க.

இடைச்சங்ககாலம்

இறையனார் களவியல் உரைப்படி, இடைச்சங்கம் சுமார் 3700 வருஷம் நடந்ததா சொல்றாங்க. இது ரொம்ப பெரிய காலம்! இவ்வளவு காலம் ஒரு சங்கம் தொடர்ந்து இயங்கறதுங்கிறது ஒரு ஆச்சரியமான விஷயம்தான்.

யார் யார் ஆட்சி செஞ்சாங்க?

இந்த சங்கத்தை மொத்தம் 59 பாண்டிய மன்னர்கள் ஆதரிச்சு வளர்த்திருக்காங்க. வெண்தேர்ச் செழியன்ங்கிற மன்னன்தான் இந்த சங்கத்தை ஆரம்பிச்சதா சொல்றாங்க. அதுக்கப்புறம் முடத்திருமாறன் வரைக்கும் பல மன்னர்கள் தமிழ் வளர்க்கிறதுல ரொம்ப ஆர்வமா இருந்திருக்காங்க.

எத்தனை புலவர்கள்? என்ன நூல்கள்?

இந்த இடைச்சங்க காலத்துலதான் தமிழ் வளர்ச்சி உச்சத்தை தொட்டிருக்கு. அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர் கருங்கோழி, மோசி, வெள்ளூர் காப்பியன், சிறுபாண்டரங்கன், திரையர்மாறன், துவரைக்கோன், கீரந்தை என 59 பேரோட மொத்தம் 3700 புலவர்கள் இந்த சங்கத்துல இருந்து தமிழ் சேவை செஞ்சிருக்காங்க. இவங்க நூற்றுக்கணக்கான நூல்களை இயற்றியிருக்காங்க. முக்கியமா, தொல்காப்பியம்ங்கிற உலகப் புகழ் பெற்ற இலக்கண நூல் இந்த சங்க காலத்துலதான் எழுதப்பட்டு அரங்கேற்றப்பட்டுச்சு. இதுக்கு முன்னாடி, அகத்தியம்ங்கிற இலக்கண நூலும் இருந்துச்சு.

இசை சம்பந்தமான நூல்களான இசை நுணுக்கம், பூதபுராணம், மாபுராணம், கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல்ன்னு பல வகையான நூல்கள் இடைச்சங்க காலத்துலதான் உருவாக்கப்பட்டுச்சு. ஆனா, துரதிர்ஷ்டவசமா, இந்த நூல்கள்ல பெரும்பாலானவை இப்போ நம்மகிட்ட இல்லை.

ஒரு முக்கியமான குறிப்பு

இந்த சங்கங்களோட காலம், புலவர்கள் எண்ணிக்கை இதெல்லாம் இறையனார் களவியல் உரையில இருந்துதான் தெரியுது. இதுல சொல்லப்பட்ட சில தகவல்கள் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டதா இருக்கலாம்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. ஏன்னா, பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாடி நடந்த சம்பவங்களை துல்லியமா கணக்கு பண்றது கஷ்டம்.

ஆனாலும், பாண்டிய மன்னர்கள் தமிழ் வளர்க்கிறதுக்கு மூணு சங்கங்களை ஏற்படுத்தினாங்கங்கிறதும், அந்த சங்கங்கள்ல தமிழ் செழித்து வளர்ந்துச்சுங்கிறதும் உண்மை. இடைச்சங்கம்ங்கிறது தமிழ் இலக்கிய வரலாற்றுல ஒரு பொற்காலமாவே பார்க்கப்படுது.

கபாடபுரத்தின் அழிவு

கபாடபுரம்  ஒரு பெரிய கடல்கோள் (சுனாமி) வந்ததாலதான்  அழிஞ்சுதுனு சங்க இலக்கியங்களும், வரலாற்றுத் தகவல்களும் சொல்லுது. இறையனார் களவியல் உரையில, இடைச்சங்கம் இருந்த கபாடபுரம், இரண்டாவது பெரிய கடல்கோளால அழிஞ்சது அப்படின்னு தெளிவா சொல்லப்பட்டுருக்கு. முதல் சங்கம் இருந்த தென்மதுரையும், அதுக்கப்புறம் இடைச்சங்கம் இருந்த கபாடபுரமும் அடுத்தடுத்து வந்த கடல்கோள்களால அழிஞ்சு போச்சு. இந்த கடல்கோள்கள் வந்ததாலதான், பாண்டியர்கள் தன்னோட தலைநகரத்தை வடக்கே இருக்கிற இன்றைய மதுரைக்கு மாத்துனாங்க. புவியியல் ரீதியா பார்த்தா, லட்சக்கணக்கான வருஷங்களுக்கு முன்னாடி, இந்தியப் பெருங்கடல் பகுதியில பல பெரிய புவித்தட்டுகள் ஒண்ணோட ஒண்ணு மோதினதால நிலநடுக்கங்களும், சுனாமிகளும் அடிக்கடி வந்திருக்கலாம்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. இந்தக் கடல்கோள்கள் தான் தென்மதுரை, கபாடபுரம் போன்ற கடலோர நகரங்களை அழிச்சிருக்கலாம்னு நம்பப்படுது.

தமிழ் இலக்கியங்களில் கபாடபுரம்

நா.பார்த்தசாரதி எழுதுன கபாடபுரம் என்ற வரலாற்று புதினத்துல தமிழ் சங்கங்கள், குமரி கண்டம் பற்றி குறிப்பிட்டிருப்பார். இடைச்சங்கத்தை உருவாக்குன பாண்டிய மன்னர் வெண்தேர்ச்செழியரோட பேரன் சரகுனப்பாண்டியனை ஹீரோவா வச்சு எழுதப்பட்ட புதினம் இது. வாய்ப்பிருந்தா படிச்சுப் பாருங்க. 

இன்னைக்குத் தமிழ் கள..ஞ்சியம் இதோட நிறைவடையுது. அடுத்த திங்கள் கடைச்சங்கம் பத்தி பாக்கலாம். இந்தப் பதிவு பற்றிய உங்க கருத்தைப் பகிர்ந்துக்கோங்க. உங்களுக்கு இது போல சுவாரசியமான தகவல்களை பகிர விருப்பமிருந்தா பகிரலாம். நன்றி!

1753115133-WhatsApp-Image-2025-07-21-at-215245_a5f971fa.jpg

 

Share your Reaction

Loading spinner
Quote
Topic starter Posted : July 21, 2025 9:55 PM

.

.

Index