
ஹலோ மக்களே!
இருதயப்பூவில் கண்டேன் - இந்தக் கதைக்கு நான் நம்ம ஃபேஸ்புக் குரூப்ல மார்ச் மாதம் ஒரு டீசர் போட்டிருந்தேன். ஞாபகம் வச்சிருக்கிங்களானு தெரியல. ஆன்லைனில் வெளிவராத இந்தக் கதை ராணிமுத்துவில் செப்டம்பர் 1ல் வெளிவரப்போகுது. விலை ரூ.10/- வாங்க வாய்ப்புள்ளவர்கள் கடைகளில் வாங்கி படித்து உங்க கருத்துகளைப் பகிர்ந்துக்கோங்க. தளத்தில் இந்தக் கதை இன்னும் இரண்டு வருடங்களுக்கு வருவதற்கான வாய்ப்பு குறைவு. அதனால புத்தகமா வாங்கி படிக்க முடிஞ்சவங்க படிக்கலாம். கதைல இருந்து சின்னதாக ஒரு காட்சி!
❤️ ❤️ ❤️ ❤️ ❤️
“வாவ்! ரொம்ப அழகா இருக்கு பவி” கண்களில் ஆச்சரியம் கொட்டி அதைக் கேமராவில் வீடியோவாக்கினான் ஆதித்யன்.
“இங்கயே டைம் வேஸ்ட் பண்ணப்போறிங்களா? அருவிக்கரை பாக்க இதை விட அழகா இருக்கும்” என அவர்களுக்கு ஆசை காட்டினாள் நந்தினி.
“அப்ப உடனே கிளம்பலாம்”
மீண்டும் நடக்க ஆரம்பித்தார்கள்.
சுற்றுலாப்பயணிகள் ஆங்காங்கே நடந்து சென்று கொண்டிருந்தார்கள். காட்டுப்பாதை தான் என்பதால் இரு பக்கமும் விருட்சங்கள், புற்கள், காட்டுச்செடிகள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து வஞ்சனையில்லாமல் அந்தப் பாதையை அழகாக்கியிருந்தன.
“இதுதான் தொட்டாச்சிணுங்கி”
இளம்ரோஜாவண்ணத்தில் பஞ்சு போன்ற மலர்களுடன் படர்ந்திருந்த தொட்டாச்சிணுங்கியின் இலைகளைத் தொட்டுக் காட்டினாள் நந்தினி.
ஆதித்யனின் விழிகள் சுருங்கிய தொட்டாச்சிணுங்கி இலைகளை விடுத்து நந்தினியின் விரல்களிலிருந்த மருதாணிச்சிவப்பில் படிந்தன.
பவித்ரா மற்ற இருவருடனும் வாயாடியபடி முன்னே செல்ல ஆதித்யன் நந்தினியிடம் பேச்சு கொடுத்தான்.
“அந்தப் பக்கம் போனா ஒரு தோட்டம் உண்டு. அங்க நிறைய மிளகு கொடி படர்ந்திருக்கும்” என்று பக்கவாட்டில் கை காட்டிச் சொன்னவளிடம்
“உனக்கு மருதாணி வைக்கப் பிடிக்குமா?” என்று சம்பந்தமில்லாமல் கேட்டு வைத்தான் அவன்.
“திடீர்னு ஏன் இந்தக் கேள்வி?”
“உன் விரலுக்கு அந்த மருதாணி அழகா இருக்கு. தெரிஞ்சிக்கலாமேனு கேட்டேன்.”
தோள்களைக் குலுக்கியவன் “எனக்கு மருதாணியோட நறுமணம் ரொம்ப பிடிக்கும்” என்றான் கண்களில் ஆர்வத்தோடு.
❤️❤️❤️❤️❤️
ஆதித்யனும் நந்தினியும் நிச்சயம் உங்களை மெஸ்மரைஸ் பண்ணுவாங்க. மறந்துடாதிங்க - செப்டம்பர் 1 ராணி முத்துவில் 'இருதயப்பூவில் கண்டேன்' நாவலை வாங்குறதுக்கு!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
இருதயப்பூவில் கண்டேன் - ராணிமுத்துவில் செப்டம்பர் 1 பிரதியில்...
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@praveena-thangaraj thanks dolli 😍 😍 😍
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan




