
அச்சன்கோவில், கேரளாவில் கொல்லம் மாவட்டத்துல இருக்கிற ஒரு ஆன்மீகத் திருத்தலம். இது மேற்குத் தொடர்ச்சி மலைகள் நடுவுல அமைஞ்சிருக்கு. புனலூர்ல இருந்து சுமார் 80 கி.மீ. வடகிழக்குல இருக்கு.
கோவில் வரலாறு
அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலைப் பத்தி சொல்லப்படுற ஒரு கதை இந்தக் கோவிலோட பின்னணியையும், அங்க பின்பற்றப்படுற வழக்கங்களையும் நமக்குச் சொல்லுது.
ஒரு காலத்துல, அச்சன்கோவில் காட்டுப் பகுதியில ஒருத்தர் தனியா போயிட்டு இருந்தாராம். அடர்ந்த காடு, வழி தெரியல, ரொம்ப பயந்துபோன அவர், மனசுல ஐயப்பனை நினைச்சு, 'வழி காட்ட ஒரு வாள் வேணும்'னு வேண்டிக்கிட்டாராம்.
உடனே ஐயப்பனோட அருளால ஒரு வாள் மின்னிக்கிட்டு அங்க வந்ததாம். அந்த வாள் வழிகாட்ட, இவர் அதைப் பின் தொடர்ந்து போனாராம். கடைசியில ஒரு இடத்துக்கு வந்ததும், வாள் அங்கேயே நின்னுடுச்சாம். பயத்துல இருந்து அவர் முழுசா வெளிய வந்ததும், அந்த வாளைக் கொண்டு போய் கோயிலோட கருவறைக்குள்ள வச்சுட்டாராம்.
அப்போல இருந்து அந்த வாளை இங்க வழிபட்டு, இந்த இடத்தை பாதுகாப்போட வாழ வைக்கறதா இந்தக் கதை சொல்லுது.
இந்தக் கோவிலை பரசுராமர், அவர் அமைச்ச அஞ்சு சாஸ்தா கோவில்கள்ல ஒண்ணா வச்சதா ஒரு நம்பிக்கையும் இருக்கு.
கோயிலின் சிறப்பு அம்சங்கள்
- பழமையான ஐயப்பன் சிலை: இங்குள்ள அய்யப்பன் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயம் ரொம்பவே பிரபலமானது. பரசுராமர் இந்த கோயிலைக் கட்டியிருக்கலாம்னு சொல்லப்படுது. மற்ற ஐயப்பன் கோயில்கள்ல இருக்கிற சிலைகளைவிட இங்குள்ள சிலை ரொம்ப பழமையானது. ஐயப்பன் பயன்படுத்தின வாள் இங்க ஒரு சிறப்பான பொருளா பார்க்கப்படுது. 
- அரச கோலத்தில் ஐயப்பன்: இங்கு ஐயப்பன், அவருடைய மனைவிகளான பூர்ணா மற்றும் புஷ்கலையுடன் அரச கோலத்தில் காட்சியளிக்கிறார். இதனால இவரை 'கல்யாண சாஸ்தா' மற்றும் 'மகா வைத்யா' (பெரும் மருத்துவர்) அப்படின்னு சொல்வாங்க. 
- வித்தியாசமான திருவிழா: இங்க 10 நாள் திருவிழா நடக்கும். அதுல 9-வது நாள் தேரோட்டம் நடக்கும். இது மற்ற ஐயப்பன் கோயில்களைவிட இது ஒரு வித்தியாசம். ரேவதி பூஜை அன்னைக்கு புஷ்பாபிஷேகமும் நடக்கும். 
- விஷக்கடிக்கு வைத்தியம்: இந்த கோயிலுக்கு ஒரு தனித்துவமான வழக்கம் இருக்கு. விஷப்பூச்சி கடிச்சவங்க கோயிலுக்கு வந்து மணியை அடிச்சா, அவங்களுக்குத் தீர்த்தம், சந்தனம் மருந்தா கொடுப்பாங்க. அதனால விஷம் இறங்கி குணமாயிடுவாங்கனு இங்க நம்புறாங்க. இந்த வழக்கம் இன்னும் இங்க இருக்கு. 
இயற்கை அழகு
இந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதிங்கிறதால, சுத்தி ரப்பர் தோட்டங்கள், இயற்கை காட்சிகள், பசுமைனு பார்க்கவே அழகா இருக்கும். அச்சன்கோவில் ஆறு, சுமார் 128 கி.மீ. தூரம் பாயுது. இது கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா மாவட்டங்கள் வழியா போகுது. அச்சன்கோவில்ல ஐயப்பன் சாஸ்தாவா பூர்ணா புஷ்கலாவோட இருக்குறதால இங்க பெண்கள் போகலாம். நேரமும் வாய்ப்பும் அமைஞ்சா போய் தரிசனம் பண்ணுங்க.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde 
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop 
என் வாட்சப் சேனல் 
என் ஃபேஸ்புக் குரூப்  

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



