NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

VMN PART 2 - TEASER

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

மே மாத இறுதியில நாங்க பெங்களூர் ஷிப்ட் ஆகிடுவோம்னு நினைக்குறேன். அதுக்குள்ள நந்தவனம்ல சந்தம் கதை முடியும். இங்க வந்தாயே மழையென நீயும் பாகம் 1 முடியும். அடுத்து பாகம் 2 ரெகுலரா வரும். அதுக்கான முன்னோட்டம் இது. யசோதரா - சித்தார்த், மயூரி - மாதவன், ஹேமலதா - கௌதம் இந்த மூனு ஜோடிகளோட சாருலதா - இந்திரஜித்தும் இந்தக் கதைல மெயின் கேரக்டர்சா வருவாங்க. செகண்ட் பார்ட்ல ரெண்டு பேருமே பெரிய பசங்க என்பதை இங்கே குறிப்பிடுகிறேன். வாங்க முன்னோட்டத்தைப் படிக்கலாம். ஜூன் முதல் கதை வரும்.

யசோதராவுக்கும் போய் பார்த்தால் தான் என்ன என்று தோணி விட “சரி சித்து... நானும் மய்யூவும் சேர்ந்தே போறோம்... அப்புறம் இன்னொரு விசயம் என் என்ட்ரி ஃபீசை நானே பே பண்ணிக்கிறேன்” என்றாள்.

“ஃபர்ஸ்ட் செசன்லயே நீ வித்தியாசத்த ஃபீல் பண்ணுவ யசோ... உனக்கு நான் என்ட்ரி ஃபீஸ் பே பண்ணக்கூடாதா?”


“ப்ளீஸ் சித்து! என்னை சங்கடப்படுத்தாத... இன்னும் நமக்குள்ள எதுவும் கன்ஃபார்ம் ஆகல”

“கன்ஃபாம் ஆகாம தான் மேடம் அன்னைக்கு என்னை கிஸ் பண்ணுனிங்களா?” குறும்பாக ஒலித்தது அவனது குரல்.

யசோதரா மறுமுனையில் தலையிலடித்தவாறு “அது ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஷிப் கிஸ்... அதை நீ தப்பா நினைச்சுக்கிட்டா நான் பொறுப்பாக முடியாது” என்று தனது பரபரப்பை மறைத்தபடி கூற அதை அவன் நம்பவேண்டுமே!

“சரிங்க மேடம்! உங்க என்ட்ரி ஃபீசை நீங்களே பே பண்ணிக்கோங்க... ஆனா த்ரீ டேய்ஸ் கண்டிப்பா அட்டெண்ட் பண்ணு யசோ... எனக்காக” என்று கடைசி வார்த்தையில் அழுத்தம் கொடுத்தான் அவன்.

“நீயும் வரலாம் தானே” ஆர்வத்துடன் கேட்டாள் யசோதரா.

“என்னை பாக்கணும்னு ஆசையா இருக்குதா டார்லிங்?”

 

“ஐயோடா! நீ வந்தா அந்த யோகா மெத்தட்லாம் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுவியேனு நினைச்சேன்”

“எப்பிடியும் நீ உண்மைய சொல்லமாட்ட... லீவ் தட்... எனக்கும் வரணும்னு ஆசை தான்... ஆனா தேவையில்லாம கூட்டம் கூடும்... நானும் மேடியும் நெக்ஸ்ட் வீக் ருத்ராஜிய பாக்க முக்திக்குப் போறோம்... அவர் கூடவே ஒன் வீக் இருந்துட்டு தான் வருவேன்... சோ இப்போ நீ மட்டும் போயிட்டு வா”

“ஓகே! என்ட்ரி ஃபீஸ் எவ்ளோ?”

“செவன் ஹன்ட்ரெட் தான்”

“செவன் ஹன்ட்ரெட் குடுத்து போகணுமானு இப்போ என் மூளை கேக்குது சித்து”

“அப்போ அதை ஆப் பண்ணிடு யசோ... இந்த மாதிரி இடத்துக்குப் போகறப்ப மனசை மட்டும் ஆன் பண்ணுனா போதும்”

“ஓகே ஓகே! நான் கிளம்புறேன்”

“போனை வைக்கிறதுக்கு முன்னாடி பை சீ யூ, லவ் யூ இப்பிடி எதையும் சொல்லக்கூடாதுனு முன்னாடியே முடிவு பண்ணிவச்சிட்டுத் தான் கால் பண்ணுவியா யசோ?”
மறுமுனையில் யசோதராவின் இதழில் புன்னகை துளிர்த்தது.

“சரிங்க ஹீரோ! பை சீ யூ! போதுமா” என்றவள் அவன் கேலியாய் பதிலளிப்பதற்குள் அழைப்பைத் துண்டித்தாள்.

 

**

மாதவன் கன்னத்திலிருந்த கையை எடுத்துக்கொண்டவன் “சிம்பிள்! ஹீ இஸ் அவர் ஸ்பிரிச்சுவல் கைட்… அவர் மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு மய்யூ… எங்க நம்பிக்கை எங்களுக்கு…. அதை அப்பிடியே விட்டுடேன் மய்யூ” என்று கண்களைச் சுருக்கி வேண்டினான்.

“அப்போ பஞ்சமா பாதகத்தைப் பண்ணி ஊரை ஏமாத்திட்டுக் கடவுள் கிட்ட சரணடைஞ்சுட்டா அந்த மனுசனை நீங்க நம்புவீங்க… ஒரு விசயத்தை புரிஞ்சுக்கோங்க, உங்களுக்கு அவரோட பேச்சும் யோகாவும் மனநிம்மதியைக் குடுக்குறதுங்கிறது உண்மை…. இவ்ளோ ஏன் நானும் யசோவுமே அந்த யோகா குடுக்குற மனஅமைதிய அனுபவிச்சவங்க தான்… ஆனா அதுக்குனு அந்த முக்தி ஃபவுண்டேசனோட தப்பை நாங்க அந்த யோகாவுக்காக மறைக்க நினைக்கலயே! அதை தான் உங்க கிட்ட எதிர்பாத்தேன்… எனி ஹவ், இன்னைக்கு இல்லனா என்னைக்காச்சும் அந்த மனுசன் செய்யுற தப்பு உலகத்தோட பார்வைக்கு வரும்… அப்போவும் உங்களை மாதிரி சிலர் அவருக்குச் சப்போர்ட் பண்ணுவாங்க… சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லங்க”

சலித்துக்கொண்டபடி தோசையைத் திருப்பியவள் “சாப்பிடுறீங்களா?” என்று கேட்க அவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் தளர மாதவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

“இது தான் மய்யூ! ஆர்கியூ பண்ணுனாலும் என் வயித்தைப் பத்தி யோசிக்கிறீயே” என்று சிலாகித்தவனின் பேச்சில் புன்னகைத்தவள் விசமத்துடன் அவனைப் பார்த்து

“காலியான உங்க மூளைய தான் என்னால நிரப்ப முடியல… அட்லீஸ்ட் காலியான வயித்தையாச்சும் நிரப்பலாமேனு ஒரு நப்பாசை தான்” என்று கூறிவிட்டுக் கண்ணைச் சிமிட்டினாள்.

மாதவனோ அதைக் கேட்டு நகைத்தவன் “நீ என்ன வேணாலும் திட்டு… சாப்பாடுனு வந்துட்டா நான் யார் கழுவி ஊத்துனாலும் கண்டுக்க மாட்டேன்” என்று சாப்பாட்டில் கண் பதித்தான்.

 

****

 

“போட்டோகிராபி படிக்க நிறைய செலவாகும் கௌதம்… சாருவ எதாச்சும் டிகிரி படிக்க வைக்குற அளவுக்குத் தான் என் கிட்ட சேவிங்ஸ் இருக்கு” என்றாள் ஹேமலதா யோசனையுடன்.

அதைக் கேட்ட கௌதமின் முகம் இறுகிப்போனது. இவனுக்கு என்னவாயிற்று என அவள் பதற “நான் உன்னை எப்போவோ என்னோட லைப் பார்ட்னரா நினைக்க ஆரம்பிச்சிட்டேன்… ஆனா நீ அப்பிடி நினைக்கலல்ல” என ஆற்றாமையுடன் ஒலித்தது அவனது குரல்.

தொடர்ந்து “சாருவோட படிப்பு, கல்யாணம் இது ரெண்டுமே இது வரைக்கும் உன்னோட ரெஸ்பான்சிபிளிட்டியா இருந்துச்சு… ஆனா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணுனதும் அதை நான் நம்மளோட ரெஸ்பான்சிபிளிட்டியா ஏத்துக்கிட்டேன், நீ நந்தனை ஏத்துக்கிட்ட மாதிரியே… அவ விரும்புறதை படிக்கவைக்க உனக்கு மட்டும் தான் உரிமை இருக்குங்கிற மாதிரி நீ பேசுறது எனக்கு கஷ்டமா இருக்கு ஹேமா… உன்னை நம்பி நந்தனோட பொறுப்பை நான் உன் கூட ஷேர் பண்ணிக்கிட்டேன்… ஆனா சாரு விசயத்துல நீ இன்னும் என்னை மூனாவது மனுசனா தான் பாக்குறல்ல?” என்றான் வேதனையுடன்.

அதைக் கேட்டு பதறிய ஹேமலதாவோ “ஐயோ நீங்க சொல்லுற மாதிரி நான் யோசிக்கவே இல்ல கௌதம்… நான் எப்போவுமே உங்களை பிரிச்சு பாத்தது கிடையாது” என்றாள் வேகமாக.

“அப்போ சாரு ஆசைப்படுற போட்டோகிராபிய அவ படிக்கட்டும்… அதுக்கு எவ்ளோ செலவானாலும் நம்ம சேர்ந்தே சமாளிப்போம்… சரியா?” என்று கேட்டவனுக்குப் பதிலாக வேகமாக தலையை ஆட்டினாள் அவள்.
இவர்களின் பேச்சினூடே நந்தன் வந்துவிட்டான். அவனது பெரிய குறை பள்ளிக்கு சீருடை அணிந்து செல்வது தான்.

“எனக்கு யூனிஃபார்ம் வேண்டாம் மம்மி”

 

*

“நீ ஏன்டி ஜித்துவ திங்குற மாதிரி பாக்குற?” என்று கேட்டபடி முறைத்தாள் சாருலதா.

“ஒரு பையன் பாக்குறதுக்கு ஸ்மார்ட்டா இருந்தா சைட் அடிக்கத் தான் செய்வேன்... எல்லாரும் உன்னை மாதிரி சாமியாரிணியா இருக்கணுமா? போடி” என்றபடி எழுந்த ரியா புன்முறுவலுடன் இந்திரஜித்தின் பக்கம் திரும்பினாள்.

“ஹாய் இந்து! டுமாரோ நாங்க எல்லாரும் குமரகம் போறோம்... நீங்க எப்போவும் சாருவ தனியா விடமாட்டீங்களே! நீங்களும் வர்றீங்களா?” என்று கண்கள் மலர கேட்க இந்திரஜித்தின் முகமும் மலர்ந்தது.

“நீங்களே கூப்பிட்டதுக்கு அப்புறம் வராம இருக்கமுடியுமா? கண்டிப்பா வர்றேன் ரியா”

“ப்ரியா” என்று வேகமாக இடையிட்டாள் சாருலதா கண்கள் பளபளக்க. அதைக் கேட்டு இருவரும் கேள்வியாய் விழிக்க அவளோ

“இவளை நீ ப்ரியானு கூப்பிட்டா போதும்... அண்ட் யூ நீயும் இவனை இந்திரஜித்னு கூப்பிடு, சரியா? இந்து சந்து பொந்துனு சொல்லி அவனோட அழகான நேமை டேமேஜ் பண்ணாத” என்றாள் அதட்டலாக.

அதைக் கேட்டு ரியா என்ற ப்ரியா தோளைக் குலுக்கிவிட்டு “ஓகே! நாளைக்கு ட்ராவல் பண்ணுறப்ப மிச்சத்த பேசிக்கலாம் இந்திரஜித்... இங்க வாஸ்து சரியில்ல” என்று கேலியாக உரைத்துவிட்டு அகன்றாள்.
அவளுக்கு இந்திரஜித் கையசைக்கவும் வாயைப் பிளந்த சாருலதா வேகமாக அவனது கையைப் பிடித்து கடித்துவைத்தாள்.

“அவ்வ்! அடியே போன ஜென்மத்துல ஜெர்மன் ஷெப்பர்டா பிறந்தியா? ஏன்டி கடிச்ச?” கையை உதறியபடி கேட்டான் இந்திரஜித்.

“டாட்டாவா காட்டுற டாட்டா?” என்று முகம் சிவக்க முறைத்தவள் அவன் புஜத்தில் அடித்துவிட்டு கடந்து செல்ல வேகமாக அவள் முன்னே சென்று நின்றான் இந்திரஜித்.

“கம் ஆன் சாரு! ஷீ இஸ் வெரி கியூட்... அவளே பேசுறப்ப நான் மட்டும் ஊமையா நடிக்க முடியுமா?” என்று கேட்டான் அவன்.

சாருலதா அவனது கழுத்தை நெறிப்பது போல கரங்களை உயர்த்தியவள் பின்னர் தான் ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்று அதே கையால் தன் தலையில் மடேர் என அடித்துக்கொண்டாள்.

இந்திரஜித் அவளது செயல்களைக் கண்டு நகைக்க கடுப்புடன் திரும்பியவள் “சிரிக்காதடா! நீ இனிமே ரியா கிட்ட பல்லை காட்டுனனு வையேன், அதை பயோரியா பல்பொடி மாதிரி பவுடர் ஆக்கிடுவேன்” என்று கடுகடுத்தாள்.

இந்திரஜித் நமட்டுச்சிரிப்புடன் அவளைத் தள்ளிச் சென்று இருக்கையில் அமரவைத்தவன் தானும் மற்றொரு இருக்கையை இழுத்துப் போட்டு அவளருகே அமர்ந்தான்.

பின்னர் எதுவும் பேசாமல் கன்னத்தில் கைவைத்து அவள் முகத்தைக் குறுகுறுவென நோக்கவும் சாருலதா அசவுகரியமாக உணர்ந்தாள். அவளுக்கு என்ன தலையில் கொம்புகள் முளைத்துவிட்டதா? அல்லது பற்கள் தான் உதட்டைத் தாண்டி வளர்ந்துவிட்டதா? இப்படி கண்களால் ஸ்கேன் செய்யவேண்டிய என்ன அவசியம் வந்துவிட்டது.

எண்ணற்ற கேள்விகள் சரசரவென்று எழ அவள் கேட்பதற்குள் இந்திரஜித் முந்திக்கொண்டான்.

அவளது இருக்கையின் கைப்பிடியில் கரங்களை வைத்து அணை கட்டிவிட்டு அவளை நோக்கியவன்

“நீ என் ஃப்ரெண்ட் சாருலதா இல்ல... வேற யாரோ” என்றான் தீவிரக்குரலில். சாருலதா குழம்பி விழிக்கவும் அவளது நாசியை நிமிண்டிவிட்டு

“அவளுக்குப் பொறாமை படவே தெரியாது... ஆனா நீ அழகா அப்பட்டமா பொறாமை படுற... எவ்ளோ அப்பட்டமானா நீ ரியாவயும் என்னையும் பாத்த பார்வைல இருந்த ஃபயர்ல எனக்கே வேர்த்துடுச்சுனா பாரேன்” என்று கூறவும் சாருலதா புருவம் சுருக்கினாள்.

“எனக்கென்னடா பொறாமை? நீயும் என் ஃப்ரெண்ட், அவளும் என் ஃப்ரெண்ட்... நீங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ரூட் விடுறது பட்டவர்த்தனமா தெரியுது... அதனால சிங்கிள் பொண்ணு வயிறு எரியுது... அதோட ரிப்ளெக்சன் தான் ஃபேஸ்ல தெரிஞ்சுருக்கும்... மத்தபடி பொறாமைலாம் ஒன்னுமில்ல” என்று அவள் பார்வையை வேறுபக்கம் திருப்பியபடி அசட்டையாக மறுக்க

“பொய் சொல்லுறப்போ உன்னோட கண் என்னை பாக்காது சாரு” என்று அமர்த்தலாக கூறினான் இந்திரஜித்.

சாருலதா நெற்றியில் மெதுவாக குட்டிக்கொண்டவள் கண்களை இறுக மூடித் திறந்தவள் “ஐயா சாமி வந்த வேலைய பாரேன் ப்ளீஸ்” என்று வேண்டிக்கொள்ள

“இப்போ பேச்சை மாத்துற... எனி ஹவ் இப்போதைக்கு இந்த டாபிக்கை கேன்சல் பண்ணிட்டு உன்னோட சைட்ல என்னாச்சுனு பாப்போம்” என்று பெரிய மனது வைத்து தன்னை அவள் அழைத்த விசயத்தைப் பேச ஆரம்பித்தான் இந்திரஜித்.

 

 

1747309325-WhatsApp-Image-2025-05-15-at-165302_e1e46cda.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : May 15, 2025 5:12 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images
Index