
அபோகலிப்டோ படம் யாருல்லாம் பாத்திருக்கிங்க? இப்ப எதுக்கு இந்தக் கேள்வினு உங்களுக்குத் தோணலாம். இன்னைக்கு நாம பாக்க போற மாயன் நாகரிகம் பத்தி அந்தப் படத்துல சீன்ஸ் உண்டு. காட்டுவாசிகளை மாயன் மக்கள் அடிமைகளா நடத்துன விதத்தை அந்தப் படத்துல விவரிச்சிருப்பாங்க. நம்ம ஊர் கே.ஜி.எஃப் எல்லாம் அபோகலிப்டோவுல இருந்து உருவுன கதைதான். இப்ப அந்த டாபிக்குக்கு போகவேண்டாம், மாயன் இன மக்களோட அழிவுக்கு என்ன காரணம்னு இப்ப புதுசா ஒரு ஆராய்ச்சில தகவல் கிடைச்சிருக்கு. அதை பத்தி பார்ப்போம்.
ஆராய்ச்சி தகவல்
மெக்ஸிகோ குகைக்குள்ள இருந்த ஒரு கல், கிட்டத்தட்ட 1,000 வருஷத்துக்கு முன்னாடி மாயன் நாகரிகம் ஏன் அழிஞ்சுபோச்சுங்கிற கேள்விக்கானப் பதிலைச் சொல்லி இருக்கு. மாயன் மக்கள் வாழ்ந்த காலகட்டத்துல, கிட்டத்தட்ட 13 வருஷத்துக்கு விடாம மழை பெய்யாதனாலதான் அந்த நாகரிகம் அழிஞ்சுபோச்சுன்னு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க. இந்த ஆய்வு 'சைன்ஸ் அட்வான்ஸ்'ங்கிற பத்திரிகையில வெளியாயிருக்கு.
அந்த கல்லுல என்ன இருந்துச்சு?
பிரிட்டன்ல இருக்கிற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேனியல்.ஹெச்.ஜேம்ஸ்ங்கிறவரு தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, மெக்ஸிகோவுல இருக்கிற ட்ஜாப்னாங்கிற குகையில இருந்த ஒரு கல்லை ஆய்வு செஞ்சாங்க. அதுல, கி.பி 871-க்கும் 1021-க்கும் இடையில மழை எப்படி இருந்துச்சுன்னு பார்த்து, காலநிலை எப்படி மாறுச்சுன்னு கண்டுபிடிச்சாங்க.
அந்த காலத்துல 13 வருஷம் தொடர்ந்து மழை இல்லாம இருந்துச்சு. இவ்வளவு பெரிய பஞ்சம் அந்த இடத்துல இதுக்கு முன்னாடி வந்தது இல்லைங்கறது குறிப்பிடத்தக்கது.
அந்த குகை கல்லுல (stalagmite) வருஷத்துக்கு ஒரு லேயர், சுமார் 1 மில்லிமீட்டர் கனத்துல வளர்ந்திருக்கு. இது மரத்துல இருக்கிற வளையங்கள் மாதிரி, அந்தக் காலத்து காலநிலை பத்தின எல்லா தகவலையும் பாதுகாத்து வெச்சிருக்கு.
அந்தக் கல்லை ஆய்வு செஞ்சு பார்த்தப்போ, கி.பி 871-க்கும் 1021-க்கும் இடையில, மாயன் நாகரிகம் முடிஞ்ச கடைசி 200 வருஷத்துல, 44 வருஷம் கடுமையான வறட்சி இருந்துச்சுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க. இதுதான் அவங்க நாகரிகம் அழிஞ்சதுக்கான ஒரு முக்கிய காரணம்னு சொல்றாங்க.
ஊகம் இப்ப உண்மையானது
மாயன் நாகரிகம் அழிஞ்சதுக்கு காலநிலைதான் காரணம்னு 1990-கள்ல இருந்தே ஆராய்ச்சியாளர்கள் ஒரு யூகத்துல இருந்தாங்க. ஆனா, இதுக்கு முன்னாடி நடந்த ஆய்வுகள்ல, காலநிலை 'வறண்டு' இருந்துச்சா இல்ல 'ஈரப்பதமா' இருந்துச்சான்னு மட்டும்தான் சொல்ல முடிஞ்சது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துல டேவிட் ஹோடல்னு ஒருத்தர் ஆய்வு செஞ்சாரு. அதுல, கி.பி 800-க்கும் 1000-க்கும் இடையிலதான் கடந்த 7,000 வருஷத்துலயே ரொம்ப மோசமான வறட்சி இருந்துச்சுன்னு கண்டுபிடிச்சாரு. அந்த காலத்துல வழக்கமா பெய்யுற மழையில 41%ல இருந்து 70% வரைக்கும் குறைஞ்சிருந்துச்சுன்னும் சொன்னாரு.
மாயன் நாகரிகம் அழிஞ்சதுக்கு ஒரே காரணம் இந்த வறட்சி மட்டும்தான் அப்படின்னு சொல்லி, இதை சுருக்கிப் பார்க்கக் கூடாதுன்னு சில நிபுணர்கள் சொல்றாங்க. UC ரிவர்சைடுல இருக்கிற ஸ்காட் ஃபெடிக் என்ன சொல்றாருன்னா, மாயன் இன மக்கள் வறட்சியை சமாளிக்கிற சக்தி படைச்சவங்க. அவங்க மக்காச்சோளம் மாதிரி சீக்கிரத்துல அழியுற பயிர்களை மட்டுமில்லாம, வறட்சியை தாங்குற மத்த பயிர்களையும் கூட வளர்த்திருப்பாங்கன்னு சொல்றாரு.
ஆனா, மெக்சிகோவுல இருக்கிற ஒரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த வரலாற்றாளர் ரஃபேல் கோபோஸ், "மாயன் நாகரிகம் மக்காச்சோளத்தை நம்பிதான் வாழ்ந்தாங்க. இவ்வளவு பெரிய பஞ்சத்தை சமாளிக்க அவங்களால முடிஞ்சிருக்காது" அப்படின்னு சொல்றாரு.
இந்த ஆய்வுல, மாயன் மக்கள் தண்ணீர் சேமிப்பு தொட்டிகள் மாதிரி நிறைய முன்னேறிய நீர் மேலாண்மை முறைகளை பயன்படுத்தியிருந்தாலும், தொடர்ச்சியான வறட்சியை அவங்களால சமாளிக்க முடியலைன்னு தெரிஞ்சிருக்கு. டேனியல் ஜேம்ஸ் என்ன சொல்றாருன்னா, "13 வருஷத்துக்கு மழைக்காலத்துல மழை இல்லைன்னா, தொடர்ந்து 13 அறுவடை கெட்டுப்போகும். அது எவ்வளவு பெரிய அழிவை உருவாக்கும்னு நமக்குத் தெரியாதா?"னு சொன்னாரு.
இந்த ஆய்வு மாயன் நாகரிகத்தோட முடிவைப் பத்தி இன்னும் நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்க ரொம்ப உதவுது. இதை வச்சு, அந்த காலத்துல இருந்தவங்களுக்கு காலநிலை மாற்றங்கள் எவ்வளவு பெரிய சவாலா இருந்திருக்கும்னு புரிஞ்சுக்கலாம்.
அடுத்த வாரம் வேற ஒரு புது தகவலோட உங்களை மீட் பண்ண வர்றேன். குட் நைட்!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde 
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop 
என் வாட்சப் சேனல் 
என் ஃபேஸ்புக் குரூப்  

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



