.
.
நான் கதைல அடிக்கடி செங்கோட்டை அதை சுற்றியிருக்குற இலஞ்சி, வல்லம், குற்றாலம் பத்தி எழுதுறண்டு. நான் மிஸ் பண்ணுன ஒரு இடத்தைப் பத்தி இப்ப சொல்ல வந்திருக்கேன். செங்கோட்டைல இருந்து ஈசியா போயிட்டு வரக்கூடிய ஊரான தென்மலை பத்தி இன்னைக்குப் பாப்போமா?
தென்மலை - இந்தியாவுல முதன்முதலா ஆரம்பிச்ச சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் (Eco-Tourism Spot). அதாவது, இயற்கைக்கு எந்தப் பாதிப்பும் வராம, எல்லாத்தையும் திட்டமிட்டு செஞ்சிருக்காங்க.
அடர்ந்த காடுகளையும், மலை அருவிகளையும் எந்தப் பயமும் இல்லாம ஜாலியா ரசிக்கிற மாதிரி அழகா மாத்தி வச்சிருக்காங்க.
தமிழ்நாட்டுக்கு ரொம்பவே பக்கத்துல இருக்கு இந்த இடம். தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து கிளம்பினா போதும், வெறும் அரை மணி நேரத்துலயே இங்க போயிடலாம். செங்கோட்டைல இருந்து பஸ்சும் உண்டு.
செங்கோட்டைக்கும் கொல்லத்துக்கும் போற ரயில் பாதைல, ஒரு பெரிய 13 கண் மதகுப் பாலம் இருக்கும் பாத்திருக்கிங்களா? படத்துல வரும் அந்தப் பாலம், அந்தப் பாலம் தென்மலை பக்கத்துலதான் இருக்கு. அது சும்மா சாதாரண பாலம் இல்ல, 108 வருஷம் பழமையானது!
தென்மலையில சுத்திப் பாக்க தகுந்த இடங்கள்:
பாலருவி நீர்வீழ்ச்சி: தென்மலைக்கு பக்கத்துல இருக்குற ஒரு அழகான நீர்வீழ்ச்சி இது. குற்றால அருவி மாதிரி, இங்கயும் நிறைய பேர் குளிக்க வருவாங்க. அடர்ந்த காட்டுக்குள்ள அமைஞ்சிருக்க
செந்தூருணி வனவிலங்கு சரணாலயம்: இது தென்மலையை ஒட்டி இருக்குற ஒரு பெரிய வனவிலங்கு சரணாலயம். இங்கயும் ட்ரெக்கிங் போகலாம், காட்டு விலங்குகளைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
போட்டிங்: தென்மலை அணைக்கட்டுல படகு சவாரி போறது ஒரு தனி அனுபவம். சுத்தி மலைகளும், அடர்ந்த காடுகளும் இருக்கும். அமைதியா தண்ணில மிதந்து போறது மனசுக்கு ரொம்ப இதமா இருக்கும்.
தென்மலை அணை: கல்லடா ஆத்துக்கு மேல கட்டப்பட்ட இந்த அணைதான் தென்மலையோட முக்கியமான அம்சம். அணையும் அதை சுத்தி இருக்குற இயற்கை காட்சிகளும் சூப்பரா இருக்கும்.
மியூசிக்கல் ஃபவுண்டன் (Musical Fountain): ராத்திரி நேரத்துல வண்ண விளக்குகளோட, மியூசிக் போட்டு தண்ணி மேலெழும்பி டான்ஸ் ஆடும். பாக்க ரொம்ப அழகா இருக்கும்.
தென்மலைக்கு எப்ப போகலாம்?
தென்மலைக்கு போறதுக்கு அக்டோபர் மாசத்துல இருந்து பிப்ரவரி மாசம் வரைக்கும் ரொம்ப நல்லா இருக்கும். இந்த நேரத்துல வானிலை இதமா இருக்கும். வெயிலும் அதிகமா இருக்காது.
முடிஞ்சா, செங்கோட்டை, குற்றாலம், தென்மலைன்னு இந்த மூணு இடத்தையும் ஒன்னா சேர்த்து பிளான் பண்ணி போயிட்டு வாங்க. செங்கோட்டையிலிருந்து 29 கிலோமீட்டர் தூரத்துலதான் தென்மலை இருக்கு. ட்ரிப் சூப்பரா இருக்கும்!
சென்னையில இருந்து போறவங்க, பொதிகை எக்ஸ்பிரஸ்ல ஏறி தென்காசிக்கு போயிட்டு, அங்க இருந்து செங்கோட்டை வழியா தென்மலைக்கு ஈஸியா போயிடலாம்.
காரோ இல்ல வண்டிலயோ போறிங்கனா, செங்கோட்டையிலிருந்து கொல்லம் போற ரோட்ல போனா போதும், தென்மலை வந்துரும். வழி ரொம்ப ஈஸிதான்!
Share your Reaction
🥰
Share your Reaction
Super da 👌 👌 👌
Panpozhi antha side thaana solluvaanga....
Share your Reaction
@sasikumarmareeswari ஆமாக்கா... புளியரை வழியா போனா ஈசி... போன வாரம் என் தம்பி போயிட்டு வந்தான்... அவன் கிட்ட இன்னும் ரெண்டு மூனு இடம் கேட்டு வச்சிருக்கேன்
Share your Reaction
.
வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மிட் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved
.
தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan