NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

கரை தீண்டும் கடல் அலையே‌ - முன்னோட்டம்

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

பொக்கே ஷாப்புக்கு எதிரே ஸ்கோடாவை நிறுத்திவிட்டு இறங்கினான் மதுசூதனன்.

 

இவனது ரெனால்ட் க்விட்டுக்கு என்னவாயிற்று என்ற யோசனையுடன் நின்ற ராகினி, இவனுக்குக் கடை முகவரி எப்படித் தெரிந்திருக்கும் என்று அதிர்ந்தாள். அதன் பின்னர் ஒருவேளை இவன் மதுரவாணியைத் தேடி வந்திருப்பானோ என்று எண்ணியவள், வேகமாய்க் கடைக்குள் ஓடினாள்.

 

மதுரவாணியை எச்சரிக்க அவள் ஓடிவந்ததைக் கண்டு ஸ்ரீரஞ்சனி இவளுக்குப் பைத்தியம் பிடித்ததா என்று சந்தேகிக்க, மதுரவாணியோ உள்ளே உள்ள மலர்க்கூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஸ்லாப்பை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள்.

 

“அக்கா அந்த வளர்ந்தவன் வர்றான்… போய் ஒளிஞ்சுக்கோங்க” என்ற ராகினியின் எச்சரிக்கைக் குரலில் தலை நிமிர்த்தியவள், கண்ணாடிக் கதவுகளினூடே தெரிந்த வெளிப்புறத்தை உற்று நோக்கினாள். அங்கே தெரிந்த காட்சியில் கண்ணை விரித்துப் பார்த்தவள், சட்டென்று ஓடிப்போய் மலர்க்கூடைகளை அடுக்கி வைத்திருந்த ஸ்லாப்பிற்குப் பின்னே ஒளிந்து கொண்டாள். இவர்கள் இருவரையும் பார்த்துக் கடுப்புடன் முறைத்த ஸ்ரீரஞ்சனி, கடையை நோக்கி வந்தவனைப் பார்த்ததும் தலையில் அடித்துக் கொண்டாள்.

 

மதுரவாணியோ, வீட்டில் சகோதரிகள் இருக்கும்போதே மன்னிப்புக் கேட்குமாறு திமிராய் முணுமுணுத்தவன் இப்போது எதற்கு வருகிறான் என்ற கேள்வியுடன், கடைக்குள் வந்து கொண்டிருந்தவனைத் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“ஆத்தாடி! இன்னைக்கு சனியன் ஸ்கோடால வந்திருக்குடி மது… இவன் மட்டும் உன்னைப் பாத்தான் இருக்கிற கோவத்துல ப்ரேக்பாஸ்டுக்கு உன்னையே கடிச்சு முழுங்கிருவான் போலயே… பெருமாளே நீ தான் என்னை இவன் கிட்ட இருந்து காப்பாத்தணும்” என இஷ்டதெய்வத்திடம் வேண்டுதல் வேறு வைத்தாள்.

 

வந்தவன் நேரே ராகினியிடம் நின்று, “எங்க போனா அந்த குட்டிபிசாசு? இங்க தான் ஒளிஞ்சிருக்கணும்னு நினைக்கிறேன்… ஒழுங்கா அவளை வெளிய வரச்சொல்லு… இல்லனா விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்” என்று எச்சரிக்க ராகினியின் வாய் தந்தியடித்தது.

 

“அது…. வந்து…. அக்கா” என்றவளைக் கேலியாய் நோக்கிவிட்டு, “என் பேரு ஒன்னும் அது வந்து அக்கா இல்ல… ஐ அம் மதுசூதனன்… அண்டர்ஸ்டாண்ட்? அந்த குட்டிபிசாசைப் பாக்காம நான் இங்கே இருந்து போறதா இல்ல” என்று பிடிவாதமாய் உரைத்தவனுக்குத் தனுஜாவிடம் இருந்து போன் வரவும், போனைக் காதுக்குக் கொடுத்தான்.

 

“தனு பேபி! உன்னோட மது மேல உனக்கு நம்பிக்கை இல்லயா? அந்தப் பொண்ணே உன் கிட்ட வந்து சொல்லுவா… என்னை நம்புடா ப்ளீஸ்” என்றவனின் குரலில் அவ்வளவு உருக்கமும் காதலும் வழிந்ததை, மதுரவாணி அந்த ஸ்லாப்புக்கும் சுவருக்கும் இடையேயுள்ள இடைவெளி மூலம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

ஆனால் பேசுகிறவனோ இது தனுஜாவிடம் பேசும் கடைசிப் பேச்சு என்பதில் மிகத் தெளிவாக இருந்தான். போனை வைத்தவன் ஸ்ரீரஞ்சனியிடம் திரும்பினான்.

 

“சிஸ்டர் உங்களோட ஃப்ரெண்ட் என் வாழ்க்கைல பண்ணி வச்ச குழப்பத்துக்கு இப்போ அவ பதில் சொல்லியே ஆகணும்… அவளைக் கூப்பிடுங்க” என்று கேட்க, அவள் என்ன செய்வது என்று புரியாது விழிக்க, மதுசூதனனின் விழிகள் மதுரவாணியைக் கடைக்குள் தேட ஆரம்பித்தது.

 

அவளது டாப்பின் நுனி தெரியவும் மெதுவாய் அங்கே சென்றவன், குனிந்து ஸ்லாப்பின் பின்னே மறைந்திருந்தவளின் காதைப் பிடிக்க, மதுரவாணி திடுக்கிட்டு விழித்தாள். காது மடல் சுளீரென்று வலிக்க, “ஐயோ காது வலிக்குதே!” என்று முகத்தைச் சுருக்கியபடி எழுந்தவள், அவனது கையைத் தட்டிவிட முயல, அவனோ காதுமடலைத் திருகியவன்,

 

“வலிக்குதா? நல்லா வலிக்கட்டும்… நேத்து டார்லிங்னு உருகி ட்ராமா பண்ணுறப்போ சந்தோசமா இருந்துச்சுல்ல” என்றவன், அவள் முகம் வலியில் சுருங்குவதைக் கண்டதும் அவளது காது மடலை விடுவித்தான்.

 

மதுரவாணி தனது காது மடலைத் தேய்த்துக் கொண்டிருக்கும் போதே, “என் கூட வா” என்று சொல்லி அவளது கரத்தைப் பற்றி அழைத்துச் செல்ல முற்பட்டான் மதுசூதனன்.

 

“நான் எதுக்கு உன் கூட வரணும்?” என்று சீறியபடி மதுரவாணி தனது கையை அவனிடமிருந்து உருவிக் கொண்டாள்.

 

“ஏன்னா உன்னால நேத்து என்னோட உலகமே தலை கீழ மாறிப் போச்சு… ஒழுங்கு மரியாதையா என் கூட வந்து நீ நேத்து பேசுன எல்லாமே ப்ராங்க்னு சொல்லணும்…” என்று சொல்லவும் அவள் அவனை வினோதமாய் நோக்கினாள்.

 

“நேத்து நான் சொன்னதுல உன் தங்கச்சி கோவப்பட்டு உங்க வீட்டுல போட்டுக் குடுத்துட்டாங்கனு தெரியுது… கோவத்துல உங்க அம்மா நேத்து நைட் சாப்பாடு கட் பண்ணிருப்பாங்க… மார்னிங்கும் திட்டிட்டே சாப்பாடு போட்டிருப்பாங்க… அதுக்கு இவ்ளோ பில்டப்பா? அதனால உலகமே மாறிடிச்சுனு சினிமா டயலாக் பேசாம கிளம்பு.”

 

“ஏய் யாருடி என் தங்கச்சி? அவ என் கேர்ள் ஃப்ரெண்ட்… நீ பேசுன பேச்சால எங்களுக்குப் ப்ரேக் அப் ஆகப்போகுது” என்றான் மதுசூதனன் எரிச்சலாக.

 

“என்னது கேர்ள் ஃப்ரெண்டா?” என்று மதுரவாணி வாயைப் பிளக்க, அவன் அவளை முறைத்தபடி, “ஆமா! நேத்து என் கூட ரெஸ்ட்ராண்ட்ல இருந்தவ என்னோட கேர்ள் ஃப்ரெண்ட்… இன்னும் கொஞ்சநாள்ல மேரேஜ் கூட பண்ணிக்கிறதா இருந்தோம்… ஆனா இந்த கவுன் போட்ட சகுனி எல்லாத்தையும் ஸ்பாயில் பண்ணிட்டா… அதை கூட மன்னிச்சிடுவேன்… இவளால தனு என் கேரக்டரையும் தப்பா நினைக்கிறா” என்றான் பல்லைக் கடித்தபடியே.

******

ஹலோ மக்களே! நாளை முதல் தினமும் 2 பதிவுகள் வரும். அடுத்த வாரத்துக்குள் முழு நாவலாக ப்ரீமியம் தளத்தில் அப்டேட் செய்யப்படும். குட் நைட் 🌝

1768755664-InShot_20260118_222754904.png

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : January 18, 2026 10:31 PM
(@kothai-suresh)
Honorable Member Member

👍👍👍👍👍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 18, 2026 11:02 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images