NM Tamil Novels | Tamil Novels

மோர்க்குழம்பு
 
Share:
Notifications
Clear all

மோர்க்குழம்பு

 
(@nithyamariappankngmail-com)
Member Admin
 
மோர்க்குழம்பு
 
 
சின்ன வயசுல சுத்தமா பிடிக்காதக் குழம்பு இது. இத்தனைக்கும் எங்கம்மா ருசியா வைப்பாங்க. நான் ஒரு சாம்பார் பிரியை. அதைத் தவிர மத்த குழம்பு எல்லாம் விரோதியா தெரிஞ்ச நாட்கள் அது. ஆஃப்டர் மேரேஜ் ஒரு மாசத்துக்கு ஒன் பாட் ரைஸ் சாப்பிட்டுப் போரடிச்சதால கத்துக்கிட்ட ரெசிபி இது. சாம்பார் எல்லாம் கண்ணன் என்னை விட பிரமாதமா வைப்பார். அதனால அவருக்குப் போட்டியா மோர்க்குழம்பு வைக்க கத்துக்கிட்டேன்.
 
 
எந்தக் குழம்பையும் கத்துக்கிட்ட மாதிரி அப்பிடியே டிட்டோவா வைக்க மாட்டேன். கஷ்டமைஸ் பண்ணி வைக்குறதுதான் வழக்கம். நீங்களும் மோர்க்குழம்பு செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க. மோர்க்குழம்பு வித் பருப்பு வடை பெஸ்ட் காம்பினேசன். இப்ப ரெசிபிக்குள்ள போகலாமா!
 
 
தேவையானப் பொருட்கள் :
 
 
புளிக்காத தயிர் – ½ லி (நான் வைக்கும் அளவு)
தேங்காய்        - அரை முறி (துருவியது)
பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப
இஞ்சி           - சிறு துண்டு
துவரம் பருப்பு    - ஒரு டேபிள் ஸ்பூன்
வெந்தயம்       - தாளிக்க
கடுகு            - தாளிக்க
கறிவேப்பிலை   - தாளிக்க
உளுத்தம் பருப்பு - தாளிக்க
பெருங்காயம்    - தேவையான அளவு
உப்பு            - தேவையான அளவு
 
 
காய்கறிகள் :
 
 
வெண்டைக்காய், பரங்கிக்காய், சின்ன வெங்காயம், மாம்பழம் – இதில் எதுவாக இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
 
 
செய்முறை:
 
 
  • ஒரு டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பை ஊறவைத்துகொள்ளவும்.
  • எந்தக் காய்கறியை வைத்துச் செய்யப்போகிறீர்களோ அதை எடுத்துக்கொள்ளவும். வெண்டைக்காயை வதக்கிவிட்டுக் குழம்பிப் போடவேண்டும். சின்ன வெங்காயம் மட்டும் என்றால் எண்ணெய்யில் வாசம் வரும் வரை வதக்கிய பிறகு குழம்பில் போடலாம். மாம்பழம் (அ) பரங்கிக்காயில் வைப்பதாக இருந்தால் சிறு துண்டுகளாக நறுக்கி மஞ்சள்பொடி, உப்பு போட்டு கிள்ளிப் போட்ட பச்சை மிளகாயுடன் தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும்.
  • காய்கறி வேகும்போது தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாய், ஊற வைத்த துவரம் பருப்பு, இஞ்சி துண்டு இவை அனைத்தையும் மிக்சியில் விழுதாக (fine paste) அரைத்துக்கொள்ளவும்.
  • காய்கறி வெந்துவிட்டால் அரைத்த விழுதை அதனுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் மீடியம் ஃப்ளேமில் வைக்கவும். சிறிதளவு பெருங்காயத்தைத் தூவிவிடவும்.
  • தயிரைச் சிறிது அளவு தண்ணீர் ஊற்றி கடைந்து கொள்ளவும். மத்து இல்லை என்றால் விஸ்க் அல்லது ஸ்பூன் வைத்து கலக்கிக் கொள்ளுங்கள்.
  • குழம்பு கொதித்துவிட்டதன் அறிகுறியாக பபிள்ஸ் வந்த பிறகு கடைந்த மோரை அதில் ஊற்றவும். மோர் ஊற்றிய பிறகு அதிக நேரம் குழம்பை அடுப்பில் வைக்கக்கூடாது. எனவே நன்கு கொதித்தப் பிறகே மோரை ஊற்றி கலந்துவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
  • தேங்காய் எண்ணெய்யில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம் மற்றும் சிவப்பு மிளகாய் ஒன்று போட்டுத் தாளித்துக் குழம்பில் ஊற்றவும். மோர்க்குழம்பு தயார்.
 
 
அரை லிட்டர் மோர் நான், கண்ணன், ஷிவானி மூனு பேரும் ஒருவேளை சாப்பிட சரியா இருக்கும். உங்க குடும்ப உறுப்பினர்களோட எண்ணிக்கையைப் பொறுத்து மோர் மற்றும் தேங்காய் அளவை மாற்றிக்கொள்ளுங்கள்!
 
 
 
1748515940-WhatsApp-Image-2025-05-29-at-150049_691b9208.jpg
Quote
Topic starter Posted : May 29, 2025 4:22 PM