
“இங்க பாரு! மூர்த்தி மாமா சொல்லிட்டார்னுதான் உன்னை வேலைக்குச் சேர்த்திருக்கேன். ஒழுங்கா வேலை பாக்கணும். கட்டுமான வேலைக்கு வாங்கக் கூடிய ரா-மெட்டீரியல்சோட வவுச்சர்ஸ் எல்லாத்தையும் நீதான் மெயிண்டெயின் பண்ணப்போற. கவனம்”
கறாராகச் சொல்லிய பவிதரன் ‘போ’ என்று சைகை காட்ட ஈஸ்வரி நெஞ்சுக்கு நேரே கோப்பினைப் பிடித்தபடி நின்றவள் நகரவில்லையே!
“உன்னைப் போகச் சொன்னேன்”
“இந்த இத்துப்போன நாலு பில்லை ஃபைல்ல வைக்குற வேலைக்கா நான் இங்க வந்தேன்? அக்கவுண்ட்ஸ் செக்சன்லதானே வேலைனு சொன்னிங்க?” என்று மனத்தாங்கலோடு கேட்டாள் அவள்.
பவிதரன் நெற்றியை நீவிக்கொண்டான். கடந்த மாதம்தான் முதுகலை வணிகவியல் தேர்வை எழுதி முடித்திருக்கிறாள். இன்னும் கன்சாலிட்டேட்டட் மதிப்பெண் பட்டியல் கூட கைக்கு வரவில்லை.
தட்சிணாமூர்த்தி சொன்னாரே என்று கணக்குவழக்குகளைப் பார்க்கும் அக்கவுண்டெண்ட் சுமதிக்கு உதவியாளாகப் பணிக்கு அமர்த்தினால், முகத்தைத் தூக்குகிறாள் இவள்!
“மேடம்கு அக்கவுண்ட்ஸ்ல எத்தனை வருச எக்ஸ்ப்ரீயன்ஸ் இருக்கு?” கிண்டலாய்க் கேட்டான் அவன்.
“வேலை செஞ்ச எக்ஸ்பீரியன்ஸ் இல்ல! நீங்க வேலை குடுத்திங்கனா அது தானா வந்துட்டுப் போகுது” என்றாள் அவள்.
“உன் கையில அக்கவுண்ட்ஸ் செக்சனைக் குடுத்துட்டு நான் கம்பெனிய இழுத்து மூடிட்டுப் போயிடட்டுமா? இங்க பாரு, கத்துக்குட்டி கையில எல்லாம் கணக்குவழக்கை ஒப்படைக்குறது எனக்குப் பழக்கமில்ல. முதல்ல நீ ட்ரெய்ன் ஆகு. அப்புறம் பாக்கலாம்” என்று அவன் கறாராகச் சொன்னதும்
“இந்த மன்னார் அண்ட் கம்பெனிக்கு இவ்ளோ பில்டப்!” என அவள் சத்தமில்லாமல் உதடுகள் அசையும் வண்ணம் முணுமுணுக்க
“அப்ப பொடிநடையா சென்னைக்குப் போய் பெரிய மல்டிநேஷனல் கம்பெனில ஜாயின் பண்ணிக்க” என பவிதரன் சொல்லவும் திடுக்கிட்டாள்.
“நான் சத்தமா பேசவேல்லயே! உங்களுக்கு எப்பிடி கேட்டுச்சு?”
“என் காதை விட கண்ணு ரெண்டும் ரொம்ப ஷார்ப். உன் உதடு அசையுறதை வச்சே என்ன சொல்லுறனு கண்டுபிடிச்சிடுவேன்”
சாவகாசமாகச் சொல்லிக்கொண்டு சுழல்நாற்காலியில் சாய்ந்தவனின் பார்வையில் முதலாளி பாவனை விடைபெற்றிருந்தது.
இன்னும் கண்களைத் தனது முகத்திலேயே நிலைத்திருப்பவனின் செய்கையில் கொஞ்சம் திணறிப்போனவள் “நான்… சுமதி மேடம் கிட்ட போறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேற எத்தனிக்க
“ஓய் சண்டைக்காரி! வெக்கமெல்லாம் பட்டு வைக்காத! அப்புறம் பூகம்பம், நிலநடுக்கம், சுனாமினு எதுவும் வந்து தொலைக்கப் போகுது” எனக் கிண்டல் செய்தான் பவிதரன்.
ஈஸ்வரி இடுப்பில் கையூன்றி அவனை முறைக்கவும் சிரித்தவன் “இயற்கைக்கு விரோதமா நீ நடந்துக்கிட்டா அதுக்குக் கோவம் வரும்னு சொல்ல வந்தேன்” என்று அப்பாவி போல சொல்ல
“நீங்க இப்பிடியே பேசுனா எனக்குத்தான் கோவம் வரும்” என்றாள் அவள்.
“ஹான், இதுதான் ஈஸ்வரி! இப்பிடியே இரு. அதை விட்டுட்டு அச்சம், மடம், நாணம், பயிர்ப்புனு தேவையில்லாதப் பக்கம் போயிடாத. அது உனக்குச் செட் ஆகல”
கண்களைச் சுருக்கி கையை அசைத்து ‘இல்லை’ என்று அவன் சொல்ல, ஏகத்துக்கும் அவனை முறைத்துவைத்துவிட்டு விறுவிறுவென வெளியே வந்து கணக்காளர் சுமதியின் அருகே இருந்த மேஜையில் அமர்ந்த ஈஸ்வரிக்குப் படபடப்பு அடங்குவதற்கு அதிகநேரம் ஆனது.
**********
ஹலோ மக்களே!
பவிதரன் – ஈஸ்வரிக்குத் தனிக்கதை உண்டுனு சொன்னேன்ல. அதுக்கான டீசர் இது. கொஞ்சும் மஞ்சள் பூக்கள் முடிந்த பிறகு இந்தக் கதை தளத்தில் வரும். மாயப்பூவே வாசம் எங்கே கதைக்கான ரெண்டாவது டீசர் நாளைக்குத் தளத்தில் வரும். நன்றி!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Pavithran irundhalum unnaku over lollu than eswari vekkapatta natural disasters varumam la
Share your Reaction
ஐய்.. சூப்பரோ சூப்பர். என்னடா இது புவனுக்கு கூட ஆதிராவா பார்த்துட்டாங்க, இந்த நல்லவன் பவிதரனுக்குன்னு ஈஸ்வரி இருந்தும், அவனை மட்டும் கண்டுக்காம டீல்ல விட்டுட்டாங்களேன்னு என்னோட லிட்டில் ஹார்ட் ரொம்ப ஃபீல் பண்ணிச்சு, ஒருவேளை, புவனோட கதையிலயே அவனுக்கும் கொஞ்சம் ஸ்பேஸ் கொடுப்பிங்களோன்னு கூட நினைச்சேன். ஆனா, சத்தியமா இதை எதிர்பார்க்கலை. நீங்க பவிதரனுக்கும் ஒரு கதையை கொடுத்து, அதற்கும் ஒரு டைட்டிலை கொடுத்து, அட்வான்ஸ்ஸா டீஸரை போட்டு எங்களை ஆனந்த உற்சாகத்துல ஆழ்த்துவிங்கன்னு எதிர் பார்க்கவே இல்லை. டைட்டில் சூப்பர், கதையும் சூப்பரா இருக்கும்ன்னு எதிர்பார்க்கிறோம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Share your Reaction
வாவ், பவி, ஈசு 💞💞💞💞💞
Share your Reaction
😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
- பவி செம. ஈஸ்வரி வாய் சூப்பர்
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



