NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
மாயப்பூவே வாசம் எங்...
 
Share:
Notifications
Clear all

மாயப்பூவே வாசம் எங்கே - கதை விமர்சனங்கள்

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

பரணி சிஸ் விமர்சனம்

 

நித்யா மாரியப்பனின்
🌺 மாயப்பூவே வாசம் எங்கே 🌺
நித்யாவின் எழுத்துக்களில்
அவரின் பெரும்பாலான கதைகள்
ஃபீல் குட் ஸ்டோரிஸ்தான். 🤗
சிந்து பூந்துறையில்
பிறந்தவுடன் தந்தை மரணித்ததால்
தாயின் ராசியில்லாதவள்
பட்டத்துடன் வளர்ந்த பெண்ணான
சுபத்ரா அவரிடமிருந்து விலகி
ஊட்டி செயின்ட் பீட்டர்ஸ் பள்ளிக்கு
ஆசிரியையாக செல்கிறாள்.🙂
சென்னையில் திரை உலக நட்சத்திர குடும்பத்தில் பிறந்து
நான்கு வருடங்களுக்கு முன் மக்களின் கனவுலக
நட்சத்திர நாயகனாக
இருந்த பார்த்திபன்
நண்பன் விக்ரமாதித்யா மற்றும்
முன்னாள் மனைவி மாயாவின்
சதி தீட்டலில் தங்கை மற்றும்
தனது குழந்தையை இழந்த
துயரத்தில் திரையுலகில் இருந்து
விலகி இருக்கும் நிலையில்
மீண்டும் இயக்குநர் மாதேஷ் படத்தில் நடிக்க
படப்பிடிப்புக்காக படக்குழுவினருடன் ஊட்டி
செயின்ட் பீட்டர்ஸ் வருகிறான்.🙂
பார்த்திபன் சுபத்ராவின் காதலை
மிகவும் அழகாக கதையில்
படைத்திருக்கும் நிலையில்
பார்த்திபனின் வேதனை கோபம்
மற்றும் அவனின் வாழ்க்கையில் நடந்த
துயரங்களுக்கு உரிய
நியாயத்தினையும் எழுத்தாளர் அருமையாக
வழங்கியிருக்கிறார். 🤜🤛👍
சுபத்ராவின் மீதான பார்த்திபனின்
அடாவடிக் காதல் ரசிக்க
வைக்கிறது என்றால் செயின்ட்
பீட்டர்ஸ் பள்ளி வளாகத்தையும் அதன்
சுற்றுப் புறத்தையும் தனது எழுத்துக்களால் படிப்பவர்களின் கண்களில் மேலும் ரசிப்பை
கூட்டுகிறார் என்பது நிஜம். 🤗
பார்த்திபனின் மாயப்பூவே
வாசம் எங்கே கவிதைகள் எல்லாம்
அருமை. 👍ம்ம்ம் செமத்தியான
நெஞ்சை நிறைக்கும் வாசம்தான்.
🌺🌺🌺❤️❤️❤️❤️❤️❤️❤️🌺🌺🌺
1760368708-Screenshot-2025-10-13-204603.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : October 13, 2025 8:48 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

கலை கார்த்தி (சிவஞானலெட்சுமி சிஸ்) ரிவியூ

மாயப்பூவே வாசம் எங்கே கதை அருமைடா.பார்த்திபன் சூழ்ச்சியால் தங்கை மகளை இழந்து மனைவியை விவாகரத்து செஞ்சு அதில் இருந்து மீளா நாலு வருடம் ஆகிறது அவனுக்கு துணையாக அம்மா அப்பா நண்பன் இருக்கிறார்கள். சுபத்ரா இவள் ராசிகெட்டவள் என்று பெற்ற அன்னையே பழிச்சு பேசுவது வெளியே போய்விடு இங்கே இருக்காதே சொல்வது டூ மச். சுபி அக்கா அண்ணா அண்ணி துணை. இவளும் வேலைக்காக வர அங்கே படம் சூட்டிங் நடக்க பார்த்திபன் மனது சுபியை விரும்ப சுபி மனதிற்கு தனிமை என்று இருந்தாலும் பார்த்திபனையும் நேசிக்க பூனை நட்பு என்று அழகாக போகிறது. பார்த்திபன் படத்தில் மாயா விக்ரம் வர அவர்களை பற்றி அறியும் போது சீ என்று தோன்றுகிறது. மாயா இறக்க சுபி பார்த்திபன் அதிரடி திருமணம் . பார்த்திபன் மனதிற்கு பாதுகாப்பு சுபி யுடன் என்று சொல்லும் போது அழகாக இருந்தது. சுபி பார்த்திபன் எல்லோரையும் மற்றும் நடந்த விசயம் என்று விறுவிறுப்பாக போகுது. விக்ரம் இறப்பு அவனின் துரோகம். பார்த்திபன் எழுதியது போல் நிரம்ப சரிதான். பார்த்திபன் கடைசியாக சொன்னதும் சரிதான். வினைக்கு எதிர்வினை ஆற்றுவது நிரம்ப சரி. மரணங்களை கொடுத்தவர்களுக்கு தண்டனை செம. சுபி பார்த்திபன் குழந்தை என முடிப்பது செமடா. பார்த்திபன் சுபி காதல் அழகு. வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்.— with Nithya Mariappan.

1760368908.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : October 13, 2025 8:51 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

செல்வராணிம்மா ரிவியூ

மாயப்பூவே வாசம் எங்கே

பிஆர் டீம்கள் சூழ் உலகில் எதுவும் நிஜமாகவும் பொய்யாகவும் உலவும்.தினம் தினம் பார்க்கிறோமே?
 
சூழ்ச்சியால் வீழ்த்தப்படும் பார்த்திபனின் கதை பரிதாபம்.உண்மைகள் தெரிந்து அவன் பழி வாங்குவது அபாரம்.சுபியைப் போலவே நமக்கும் பல சந்தேகங்கள்.ஒவ்வொன்றாய் அவிழ்வது சுவாரஸ்யம்.பணத்துக்காக எதுவும் செய்யும் மாயாவைப் போன்றவர்களை நிஜ உலகில் பார்க்கிறோம்.விக்ரம்,வினை விதைத்தவன் கதை தான்.அந்தக் குழந்தையும் விஸ்வமயாவும் தான் பரிதாபத்துக்குரியவர்கள்.இறப்புக்குக் காரணமான விஷயங்கள் வாவ் தான்.நல்ல ஒரு திரில்லிங் சம்பவங்கள்.சவ்வூடு பரவல் என்னும் வார்த்தையை எனக்குத் தெரிந்து யாரும் இதுவரை பயன்படுத்தவில்லை.திரும்பவும் அதை படிக்க தேடினேன்.கிடைக்கவில்லை.
1760369306.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : October 13, 2025 8:58 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images
Index