
ஏ.சி.பி ராகவர்தன் - மெல்டிங் பாட் அனுக்ரஹாவை ஞாபகம் இருக்குதா? இந்த புக் ஃபேருக்காக அவங்களோட கதையான 'அனுராகம் ஆரம்பமே' புத்தகமா வெளிவந்தாச்சு.
விலை ரூ.430/-
புத்தகம் வாங்க - 7200836063
கதையிலிருந்து சில வரிகள்...
“என்னால அவன் கிட்ட பேசவே முடியாது… அவனுக்கும் எனக்கும் எப்பவுமே ஆகாது சௌமி… என்ன செஞ்சா நான் ஹர்ட் ஆவேன்னு தேடி தேடி என்னைக் காயப்படுத்துவான்… ப்ச்! இது சரியா வராது”
“என்ன சரியா வராது?”
திடுமென ஒலித்த ராகவர்தனின் குரலில் துள்ளிக் குதிக்காதக் குறையாகத் திரும்பினார்கள் இரு பெண்களும்.
டக்-இன் செய்த நேவி ப்ளூ வண்ண சட்டை, வெண்ணிற பேண்ட்டின் பாக்கெட்டில் கைகளை நுழைத்த வண்ணம் நின்றவன் கேட்ட தொனியில் அத்துணை அழுத்தம்!
‘இவனுடைய கேள்விக்கு நான் ஏன் பதிலளிக்க வேண்டும்?’
அனுக்ரஹாவுக்குள் இருந்த ஈகோவுக்குக் கொம்பு முளைத்தது.
“நீங்க பேசுங்க சௌமி… என்னைப் பிரபா கூப்பிட்ட மாதிரி கேட்டுச்சு” என்று விலகப் போனவளை நகர விடாமல் நிற்க செய்தது குறுக்கே தடையாய் வந்த ராகவர்தனின் கரம்!
வெகு கவனமாக அதிலிருந்து சில மில்லிமீட்டர்கள் தொலைவில் நின்றுவிட்டாள் அனுக்ரஹா.
“எனக்குச் சௌமித்ராவோட அம்மா தான் அவளைத் தேடுனதா ஞாபகம்” அவன் அமர்த்தலாகச் சொன்னதும் தலையை உயர்த்தி அவனை முறைத்தாள் அனுக்ரஹா.
சௌமித்ரா இன்னும் அங்கேயே நிற்கவும் “கொஞ்சம் பெர்ஷனலா பேசணும்” என்றான் ராகவர்தன் அனுக்ரஹாவைச் சுட்டிக்காட்டி.
உடனே ‘விட்டால் போதுமென’ அங்கிருந்து அவள் போய்விட ராகவர்தன் நிதானமாக அனுக்ரஹாவைப் பார்த்தான்.
பார்வை என்றால் சும்மா விழிகளை ஒட்டவைத்து பின் எடுப்பது அல்ல.
வெகு நிதானமாக அவளது சிகையலங்காரத்தில் தப்பித்து கன்னத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்த கூந்தல் இழையில் ஆரம்பித்து கால் நகத்துக்குப் போட்டிருந்த ‘பேர்ல்’ வண்ண நகப்பூச்சு வரை ஒவ்வொன்றாக அலசும் பார்வை அது.
அதில் அனுக்ரஹா அசௌகரியமாக உணர்ந்தாள். அவனுக்கு முதுகு காட்டி நின்றுகொண்டாள். சற்று முன்னர் துவாரகா சொன்னாளே, இருவருக்கும் திருமணம் ஆகப்போகிறது, இனியாவது இயல்பாகப் பேசிக்கொள்ளுங்கள் என்று! அப்போது அதிர்ந்தாலும் அதற்கு அர்த்தம் இருவருக்கும் அவரவர் குடும்பங்களில் வரன் தேடி வருகிறார்கள் என்பது புரிந்த பிற்பாடு அந்த அதிர்ச்சி மறைந்து போனது. இப்போது இவன் எந்த அதிர்ச்சியைப் பரிசளிக்க வந்திருக்கிறான்?
“என்ன விசயம்?” என்று மொட்டையாக வினவினாள்.
ராகவர்தன் அலட்டிக்கொள்ளாமல் “என்னோட ஃபியான்சி கிட்ட தனியா பேசுற அளவுக்கு என்ன சீக்ரேட் இருக்கு உன் கிட்ட?” என்று விசாரிக்க
“இது உன்னோட ஏ.சி.பி ஆபிஸ் இல்ல, நானும் நீ விசாரிக்க வேண்டிய சஸ்பெக்ட் இல்ல… டோனை மாத்துனா நல்லது” என நறுக்கெனப் பதிலளித்தாள் அவள்.
ராகவர்தன் அந்தப் பதிலில் சினமடையவில்லை. சுவாதீனமாக அவளைக் கடந்து போய் அவள் முன்னே சுவரை ஒட்டிக் கிடந்த சிறிய மேஜை மீது அமர்ந்து ஒரு காலைத் தரையில் ஊன்றிக்கொண்டான்.
“எனக்கு ஆர்டர் போடுற அளவுக்கு நீ வளர்ந்துட்டியா?” என்று கேட்டவனின் குரலில் எள்ளல் ஒட்டியிருக்க அனுக்ரஹாவின் நாசி கோபத்தில் விடைத்தது.
அதைப் பார்த்ததும் அவனது இதழ் சிரிப்பில் வளைந்தது.
“இங்க வர்றப்ப சௌமித்ராவ கல்யாணம் பண்ணிக்க ஓ.கே சொல்லலாமா வேண்டாமானு யோசிச்சேன்… இப்ப வேண்டாம்னு முடிவே பண்ணிட்டேன்”
அனுக்ரஹாவின் விழிகளில் ஒரு நொடி வந்து போன குதூகலத்தைக் காண அவன் தவறவில்லை. அவன் காண்பதற்குள் பாவனையை மாற்றிக்கொண்டதாக நினைத்தவள் வழக்கம் போல ராகவர்தனின் எண்ணப்போக்கைப் புரிந்துகொள்ளவில்லை.
“இதை ஏன் என் கிட்ட சொல்லுற?” எங்கோ பார்ப்பது போல காட்டிக்கொண்டாள்.
“உனக்கு அங்கிள் மாப்பிள்ளை பாத்திருக்கிறதா சொன்னார்”
செய்தி அறிவிப்பாளர் தொனி அவனிடம்.
அனுக்ரஹா அதிர்ந்து போனாள். அப்படி என்றால் துவாரகா விளையாட்டாகப் பேசவில்லை. தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் எப்படி தந்தை இந்தக் காரியத்தைச் செய்யலாம் என்ற கோபம் அவளுக்குள் முகிழ்த்தது. அவளது முகபாவனையைக் கவனித்த ராகவர்தன் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்து வசதியாக அமர்ந்துகொண்டான்.
அவன் தன்னைக் கவனிப்பதை அறிந்ததும் முகபாவனைகளைக் கட்டுப்படுத்திக்கொண்டாள் அனுக்ரஹா.
“எனக்குத் தெரியாது… எனிஹவ், பொண்ணுனு இருந்தா மாப்பிள்ளை பாக்க தான் செய்வாங்க” சின்னாவிடம் சொன்ன அதே பதில்.
“இத்தனை நாளா நீ பொண்ணுங்கிறது அங்கிளுக்கு மறந்து போயிருந்துச்சா?”
கிண்டலாய் ஒலித்த அவனது குரலுக்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை அவள்.
“நீ அவரோட கையை மீறிப் போறதுக்குள்ள உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சிட்டா கௌரவமா இருக்கும்னு அங்கிள் யோசிக்குறார்… ஆனா அவர் அப்பிடி யோசிக்குறதுக்குக் காரணம் நான் தான்”
வெகு நிதானமாக அவன் சொல்லவும் அனுக்ரஹாவின் இதயத்தில் ஜீரோ டிகிரி குளிர். உடல்மொழியில் தடுமாற்றம் தெரிந்தது!
“ஒன்னுமில்ல… ஆல்கஹால், ட்ரக், மமிதா மர்டர்… இதெல்லாம் கனெக்ட் பண்ணி பாத்துக்க… உனக்கு விடை கிடைச்சிடும்”
அடுத்த நொடி சீறலாக “ஏன் இப்பிடி பண்ணுன ராகவ்?” என்று அவள் கேட்டதும் தான் அவனுக்குத் திருப்தியானது.
“நம்ம அனு சென்னைல ஒர்க் பண்ணுறா… நீயும் அங்க தானே ட்ரான்ஸ்பர் ஆகுற… அவளைக் கொஞ்சம் பாத்துக்கடானு அங்கிள் ஒன் இயருக்கு முன்னாடி நான் சென்னைக்கு ட்ரான்ஸ்பர் ஆனப்ப சொன்னார்… அப்ப இருந்து நீ என் கண்காணிப்புல தான் இருக்க… எந்தப் பிரச்சனையும் இல்லனா நான் ஏன் இதெல்லாம் அங்கிள் கிட்ட சொல்லப்போறேன்? ப்ராப்ளம் வந்துச்சு… சொன்னேன்”
வேண்டுமென்றே அலட்சியம் காட்டி அவன் சொன்ன பதிலில் வெளிப்படையாகத் தனது கோபத்தைக் காட்டினாள் அனுக்ரஹா.
“ப்ராப்ளம் முடிஞ்சாச்சு… தேவையில்லாம அவர் கிட்ட ஏன் நீ சொன்ன? லிசன்! நான் இன்னமும் ஸ்கூல் படிக்கிற அனுக்ரஹா இல்ல… நான் வளர்ந்துட்டேன்… எனக்கானப் பிரச்சனைகளை நானே டாக்கில் பண்ணுற அளவுக்கு எனக்கு மெச்சூரிட்டி வந்தாச்சு… அவர் சொன்னார்னா நீ என்னை கண்காணிப்பியா? எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காதுனு தெரிஞ்சும் ஏன் மறுபடி மறுபடி நீ இதையே பண்ணுற ராகவ்? அவர் பாக்குற எந்த மாப்பிள்ளைக்கும் நான் கழுத்தை நீட்டப்போறதில்ல”
ராகவர்தன் தனது காதில் சுண்டுவிரலால் குடையவும் அனுக்ரஹாவின் கோபம் பன்மடங்கானது.
“நீ…”
“அங்கிள் பாத்த பையனுக்கு நீ நோ சொன்னா, அவர் உன்னை என் தலையில கட்டிடுவார்… நீயும் சௌமித்ராவும் பேசுனதைக் கேட்டதுமே சௌமித்ராவ நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு அம்மாக்கு வாட்சப்ல மெசேஜ் அனுப்பிட்டேன்… நவ் ஐ அம் சிங்கிள்… யூ ஆர் இன் டேஞ்சர் ஜோன்”
அவன் இவ்வாறு சொன்னதும் கப்சிப்பாகிப் போனாள் அனுக்ரஹா. யாராவது எரிகிற கொள்ளியைத் தலையில் போட்டுக்கொள்வார்களா?
******
புத்தகம் வாங்கி படிச்சிட்டு உங்க கருத்துகளை என் கூட பகிர்ந்துக்கோங்க😍
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



